The post என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?அடி மேல் அடி… appeared first on Touring Talkies.
]]>தில் ராஜு படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து அசத்தி வருகிறார்.அவரின் ஆளுமையால் ஆந்திராவில் பல தியேட்டர்கள் அவரின் கைவசம் தான் இருக்கின்றன.தில் ராஜு 2003 ஆம் ஆண்டு ஸ்ரி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வைத்து தில் என்ற படத்தை தயாரித்து இருந்தார்.அதை தொடர்ந்து ஆரியா , பாத்ரா மற்றும் முன்னா போன்ற படங்களை தயாரித்து தனக்கென சினிமாவில் பெரும் தயாரிப்பாளராக ஒரு இடத்தை பிடித்தார்.
இவரின் தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துவ்வாடா, ஜகன்னாதம், ஃபிடா, வெள்ளிபொமேக்கி, ராஜா தி கிரேட், மிடில் கிளாஸ் அப்பாயி என இவ்வளவு வெற்றி படங்களை தந்தாலும் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜானு, வி, வக்கீல் சாப், ஷாதி முபாரக், F3, Thank you, நடிகர் விஜய் நடித்த வாரிசு போன்ற படங்கள் பெரிதும் வெற்றி பெறாமல் போயின.
எப்படியாவது ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட வேண்டும் என்ற இறங்கிய தில் ராஜு மீண்டும் சற்று சரிவையே சந்தித்தார். அவருடைய மருமகனான ஆஷிஷ் நடிப்பில் ரவுடி பாய்ஸ் படத்தை தயாரித்தார்.ஆனால் அந்த படம் மிகவும் குறைந்த வசூலை ஈட்டியது.ஆஷிஷின் இரண்டாவது படமான செல்ஃபிஷ் என்ற படம் ஏனோ சில பிரச்சனைகள் காரணமாக திரைக்கு வராமல் உள்ளது.இப்படி தயாரிப்பாளராக தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளார் தில் ராஜு.
ஆனால், என்னதான் தயாரிப்பாளராக தில் ராஜு தோல்விகளை எதிர்கொண்டாலும் பட விநியோகத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறார்.சரியான கதைகளை தேர்வு செய்யாமல் முடிவு எடுப்பதே இவரின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவரின் தயாரிப்பில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் தில் ராஜு.
The post என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?அடி மேல் அடி… appeared first on Touring Talkies.
]]>The post தமிழ் இயக்குநரின் படங்களில் நடிப்பேன் – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் விளம்பர வேளைகளில் ஈடுபட்டிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா விரைவில் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது.
சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களை சந்தித்தபோது.. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் அதற்கு பதிலளித்தேன்.
என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் ‘அர்ஜுன் ரெட்டி’க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.
இயக்குநர் பரசுராமுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.
இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும் … காதலிப்பதிலும்… நேசிப்பதிலும்… கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.” என்றார்.
அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோரும் படம் பற்றி கருத்து தெரிவித்தனர். இந்தப் படத்தின் வெற்றி இந்திக்கும் இந்தப் படத்தை எடுத்து செல்லும் என்றும், அதற்கான டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்கள்.
The post தமிழ் இயக்குநரின் படங்களில் நடிப்பேன் – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>The post ஹோலி பண்டிகையை தவிர்த்தது ஏன்? – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தப் படம் குறித்து ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறுகையில், “வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன். ஆனால், தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இங்கு ஹோலியை உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் ‘பேமிலி ஸ்டார்’ படத்தை பார்க்க வாருங்கள். இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை. குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. ஒரு நல்ல சினிமா அனுபவம்..” என்றார்.
ஸ்ரீமணியின் வரிகள் மற்றும் கோபி சுந்தரின் இசையமைப்பில், ஸ்ரேயா கோஷலின் குரலில் ‘மதுரமு கதா’ மூன்றாவது சிங்கிள் அழகாக அமைந்துள்ளது. பாடலின் வசீகரிக்கும் வரிகள், அதை உடனடி ஹிட் ஆக்கியுள்ளது. இதுவரை வெளியான “ஃபேமிலி ஸ்டார் ” படத்தின் அனைத்துப் பாடல்களும் உடனடி சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன, மேலும் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதை’ பாடலும், இசை ரசிகர்களை கவர்ந்திழுத்து அதே போல் பெரிய ஹிட்டாகியுள்ளது. “ஃபேமிலி ஸ்டார்” படத்தின் டிரைலர் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது.
“ஃபேமிலி ஸ்டார்” படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்டன் கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
The post ஹோலி பண்டிகையை தவிர்த்தது ஏன்? – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>The post “நல்லவேளை தப்பிச்சேன்!”: சாகுந்தலம் குறித்து தில்ராஜூ appeared first on Touring Talkies.
]]>படம் பெரும் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு “என்னுடைய 25 வருட கேரியரிலேயே மிகப்பெரிய அளவு நஷ்டத்தை ஏற்படுத்தியது சாகுந்தலம் படம் தான்.
சுமார் 60 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை. அதோடு ரிலீசுக்கு முன்பு இந்த படத்தின் ஓடிடி உரிமையை 35 கோடிக்கு விற்று விட்டோம். அது மட்டும் செய்யாமல் இருந்தால் இந்த படம் இன்னும் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.
The post “நல்லவேளை தப்பிச்சேன்!”: சாகுந்தலம் குறித்து தில்ராஜூ appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி appeared first on Touring Talkies.
]]>இப்படம் 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதை நினைவூட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆந்திரா ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், “தொடக்கத்திலிருந்தே ‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என சொல்லிருந்தோம். மே மாதமே நாங்கள் கூறிவிட்டோம்.
அதன் பிறகு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூன் மாதம்தான் அறிவிக்கப்பட்டது. அதேபோல பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் அதுவும் சங்கராந்தி ரேஸில் இணைந்தது.
பண்டிகை காலங்களில் மூன்று படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் என்னுடன் நல்லுறவில் தான் இருக்கின்றனர். அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தப் புகாரையும் அளிக்காதபோது, மற்றவர்கள் ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என புரியவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள 420 திரைகளில் 37 திரைகளை லீஸுக்கு எடுத்துள்ளேன். ஏசியன் சுனில் 100 திரைகளை வைத்துள்ளார். மற்ற திரைகள் உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன. விநியோகஸ்தர் வட்டாரத்தில் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
The post “வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதால் புதிய பிரச்னை ஒன்றும் உருவாகியுள்ளது.
அனுமதியின்றி யானைகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், “விலங்குகளை பயன்படுத்தும் முன்பு விதி 31ன்படி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாரியத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 26ன் கீழ் குற்றமாகும். வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை-1ன் கீழ் யானைகள் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். மற்றும் விதி 7(2)இன்படி, திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம். அதேபோல் பயன்படுத்தும் விலங்கு வகை, விலங்குகளின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். எனவே அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ‘வாரிசு’ படத்துக்கு தொடர்ந்து எழும் சிக்கல்களால் படக் குழு பெரிதும் கவலையடைந்துள்ளது.
The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.
]]>The post விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தமிழில் ‘வாரிசு’ என்றும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகி, அதன் வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவரை மேலும் கவலையடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி தெலுங்கு படத்திற்கு, டப்பிங் படங்களைவிட குறைந்த அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.
தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்க வேண்டும். மீதமிருக்கும் திரையரங்குகளை வேண்டுமானால் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கலாம்…” என்று கூறியிருந்தார்.
தனக்குத்தானே சூனியம் வைத்தது போன்று 2019-ம் ஆண்டு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படி பேசியது, இப்போது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக் காட்டி “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு மீதமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும்..” என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
‘வாரிசு’ படம் முழுக்க, முழுக்க தமிழ் மொழியில் உருவான படம் என்று இதன் இயக்குநர் வம்சி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், இதனால் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகப் போகும் வாரிசு படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் ‘வாரிசு’ படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீரசிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப் போவதால், ‘வாரிசு’ படத்தின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
The post விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>