The post “நடிக்க மாட்டேன்!”: பிரபுதேவை முரண்டு பிடித்தது ஏன்? appeared first on Touring Talkies.
]]>முதலில் இந்த கதையை கலைப்புலி தாணுவிடம்தான் சொன்னார் இயக்குநர் சசி. தாணுவுக்கும் கதை பிடித்து இருந்தது. அவர், நடிகர் பிரபுதேவாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தபோது, திடீரென பிரபுதேவா, ‘இந்த இயக்குநர் வேண்டாம்.. வேறு இயக்குநரை போடுங்கள்.. இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.
அவர் அப்படி சொல்ல காரணம் என்ன..
அந்த சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “நடிக்க மாட்டேன்!”: பிரபுதேவை முரண்டு பிடித்தது ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post ராமர் சர்ச்சை முடிந்து சிவன் சர்ச்சை! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடிப்பில் உருவாகியுள்ள ‘‘OMG-2′ படமும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில்தான் இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
இப்படத்தின் முதல் பாகத்தில் இயற்கை பேரிடரால் தனது கடை சேதமடைந்ததற்காக கடவுளின் மீது ஒருவர் வழக்கு தொடுப்பதே கதை. அதே பாணி கதைக்களத்தையே இந்த இந்த இரண்டாம் பாகத்திலும் இயக்குநர் கையில் எடுத்திருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ஆனால், சென்சார் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ட்ரெய்லரின் முதல் காட்சியில் சிவன் நந்தியிடம் தன்னுடைய அடியாருக்கு உதவு யாரையேனும் அனுப்புமாறு கூறுவது போல கிராபிக்ஸ் காட்சி வருகிறது. எனவே, இதில் அக்ஷய் குமார் கடவுளா அல்லது கடவுளின் தூதுவரா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை.
தவிர அக்ஷய் குமார் தோற்றம், சிவன் போல இல்லை என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The post ராமர் சர்ச்சை முடிந்து சிவன் சர்ச்சை! appeared first on Touring Talkies.
]]>The post தலைப்பு மாற்றம்! இயக்குநருக்கு கண்டணம்! appeared first on Touring Talkies.
]]>அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கவிஞர் பழ.புகழேந்தி, தனது முகநூல் பதிவில் இது குறித்து குறிப்பிட்டு உள்ளார்.
அதில், ‘இயக்குநர் வ.கௌதமன் – தமிழ்த்தேசியவாதி என்று தன்னை அறிவித்துக் கொள்கிறவர். ஆனால் அவர் சாதி வெறியர் எனபதற்கு அவரது முகநூல் பதிவுகளே போதுமானது.
அவர் தற்போது இயக்கி வரும் “மாவீரா” என்கிற திரைப்படத்தின் பெயரை ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றி இருக்கிறார்.
ஏன் மாற்ற வேண்டும்?. சேலத்தை கதைக் களனாகக் கொண்ட “மாமன்னன்” திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனின் பெயர் “அதிவீரா”. இதுதான் வ.கவுதமன், தனது படப் பெயருடன் படையாண்டவர் என சேர்த்துள்ளார்.
‘படை’ என்பதோடு ‘ஆண்டவன்’ என்பதைச் சேர்ப்பதன் வாயிலாக ‘ஆட்சி’ என்கிற சொல்லை குறிக்க வருகிறார். ‘படை’ என்பதோடு ‘ஆட்சி’ சேர்ந்தால் என்ன வரும் என்பதைப் புரிந்து கொள்க. மேலும் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் இரண்டு புறமும் நாய்களோடு அமர்ந்திருக்கிறார். மாமன்னன் படத்தில் நாய் என்பது ஆதிக்க சாதி குறியீடாக காண்பிக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைவில் கொள்க.
இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைய வலதுசாரித் தமிழ்த்தேசியம் போகும் பாதை இதுதான் என்பதைப் புரிய வைக்கவே’ என்று கவிஞர் பழ.புகழேந்தி பதிவிட்டு உள்ளார் .
The post தலைப்பு மாற்றம்! இயக்குநருக்கு கண்டணம்! appeared first on Touring Talkies.
]]>The post மேனேஜருடன் மோதலா? விளக்கம் அளித்த ராஷ்மிகா! appeared first on Touring Talkies.
]]>தற்போது இந்தியில் அனிமல் என்ற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் ரெயின்போ, தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் ராஷ்மிகா சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் இருந்து தன்னிடம் மானேஜராக பணியாற்றி வந்தவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ராஷ்மிகா “நானும், மானேஜரும் சுமுகமாகவே பேசி பிரிந்தோம். மோதல் எதுவும் இல்லை. இனிமேல் நாங்கள் இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
The post மேனேஜருடன் மோதலா? விளக்கம் அளித்த ராஷ்மிகா! appeared first on Touring Talkies.
]]>The post விஜய்க்கும் அஜீத்துக்கும் இப்படி ஒரு போர்? appeared first on Touring Talkies.
]]>“விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘ஃப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஹிட் அடித்தன. ஆனால், அஜித்தில் படங்களில் இளையராஜாவின் இசை பெரிய அளவில் எடுபடவில்லை.
‘உல்லாசம்’ திரைப்படத்தில் வரும் ‘யாரோ யார் யாரோ’ பாடல், ஹிட் தான். ஆனால் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா.
அதே நேரம், அஜித் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த போது பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக அஜித்தின் அறிமுக காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கான யுவனின் தீம் மியூசிக்குகள் அனைவராலும் கொண்டாடப்படுபவை. இந்தக் கூட்டணியிவ் வெளிவந்த ‘பில்லா’, ‘மங்காத்தா’ படங்கள் மிகப் பெரும் வெற்றியை குவித்தன. அந்தப் படங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது.
ஆனால், நடிகர் விஜய்க்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதுபோன்று அமையவில்லை.
இதுதான் இளையராஜா விஜய், யுவன் அஜித் ஆகிய 4 பேருக்கும் இடையே உள்ள தொடர்பு” என்றார் பத்திரிகையாளர் வெங்கட்.
The post விஜய்க்கும் அஜீத்துக்கும் இப்படி ஒரு போர்? appeared first on Touring Talkies.
]]>The post முத்த சர்ச்சை: அமலாபால் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>இதில் அமலாபால் பிருவிதிராஜுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சியில் நடித்து இருக்கிறார். இந்த முத்தக்காட்சி புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் அமலாபாலை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.
இதற்கு அமலாபால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பிருதிவிராஜ் கதை சொல்லும்போதே முத்தக்காட்சி இருப்பது பற்றி தெரிவித்தார். கதைக்கு தேவையாக இருந்ததால் முத்தக்காட்சியில் நடித்தேன்” என்றார்.
The post முத்த சர்ச்சை: அமலாபால் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ்…! appeared first on Touring Talkies.
]]>திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள். இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர் . இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டர் படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை சகினாக்கா போலீஸ் நிலையத்தில் மும்பை ஐகோர்ட்டு வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார். அதாவது பகவான் ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான உடையில் இருக்கிறார். இது இந்து மதத்தை புண்படுத்தும் செயலாகும் என்று படக்குழு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (A), 298, 500, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமான அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.
The post தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ்…! appeared first on Touring Talkies.
]]>The post அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்” என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர். இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
The post அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! appeared first on Touring Talkies.
]]>The post வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா! appeared first on Touring Talkies.
]]>அந்த நிகழ்ச்சியில் இன்னொரு பிரச்சினையையும் கிளப்பிவிட்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையடுத்து, அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நந்தமுரி தாரக ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரை தரக்குறைவாக பேசுவது நம்மை நாமே இழிவுபடுத்துவதற்கு சமமானது” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
தவிர தெலுங்கு திரைப்பட ரசிகர்களும் பாலகிருஷ்ணா கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் இன்னமும் மன்னிப்பு கேட்கவில்லை.
The post வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர்கள் சம்பள சர்ச்சை!: அப்போதே விஜயகாந்த் சொன்னது என்ன? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், சம்பளம் குறித்து நடிகர் விஜயகாந்த் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.. அதுவும் பல வருடங்களுக்கு முன்பே!
“முதலில் அனைவரும் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சம்பளம் என்பதை நடிகர்களாகிய நாங்கள் உயர்த்துவது கிடையாது. சம்பளத்தை நிர்ணயம் செய்வது அந்த நடிகரின வியாபாரம்தான்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட படம் நன்றாக ஓடிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்…. அந்த படம் எதனால் ஓடியது என்பது குறித்தெல்லாம் எவராலும் கணிக்க முடியாது. ஆனால், தயாரிப்பாளர்கள் அந்த ஹீரோவை மொய்த்துவிடுகிறார்கள்
அந்த ஹீரோவை முதலில் அணுகும் ஐந்து தயாரிப்பாளர்கள் 50,000 ரூபாய் சம்பளம் பேசுகிறார்கள் என்றால், ஆறாவதாக போகும் தயாரிப்பாளர் 1 லட்சம் சம்பளம் பேசி அந்த நடிகரை புக் செய்துவிடுகிறார்.
இவ்வாறு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுமே ஹீரோவின் சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள்.. உயர்த்துகிறார்கள்” என்று அப்போதே தெரிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.
The post நடிகர்கள் சம்பள சர்ச்சை!: அப்போதே விஜயகாந்த் சொன்னது என்ன? appeared first on Touring Talkies.
]]>