Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
coffee with kaathal movie – Touring Talkies https://touringtalkies.co Wed, 28 Sep 2022 05:52:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png coffee with kaathal movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! https://touringtalkies.co/director-sundar-c-will-get-honorary-doctorate/ Wed, 28 Sep 2022 05:49:00 +0000 https://touringtalkies.co/?p=24700 இயக்குநர் சுந்தர்.சி. இயக்கியுள்ள ‘காபி வித் காதல்’ படத்தில் பணியாற்றிய 200 பெப்சி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தனது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப் போவதாக பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’. இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் […]

The post இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சுந்தர்.சி. இயக்கியுள்ள ‘காபி வித் காதல்’ படத்தில் பணியாற்றிய 200 பெப்சி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தனது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப் போவதாக பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்.

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர்.சியும் ரிஷி’ பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போதிலிருந்து எங்களிடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.

அரண்மனை-3’ படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக ‘காபி வித் காதல்’ படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப் பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ‘ரம்பம்பம்’ பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்தப் இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச  சிகிச்சை தரும்விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டுகளை வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சைவரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குநர் சுந்தர்.சி-யின் பன்முகத் தன்மை கொண்ட உழைப்பையும், பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.Our Score

The post இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! appeared first on Touring Talkies.

]]>
“பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! https://touringtalkies.co/wife-does-not-think-khushboo-scolded-sundar-c/ Tue, 27 Sep 2022 13:00:12 +0000 https://touringtalkies.co/?p=24689 அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’. இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், […]

The post “பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! appeared first on Touring Talkies.

]]>
அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்.

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழகமெங்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. வரும் அக்டோபர் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க, எனது கணவர் சுந்தர்.சி.தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன். அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.

இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள்கூட என்னை “படப்பிடிப்பிற்கு வா” என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. சுத்தமா பொண்டாட்டியை மறந்திட்டாரு. என்னுடைய கல்யாண நாள் வருதேன்னு நினைச்சு நானாத்தான் அவருக்கு போன் செய்து நான் கண்டிப்பா ஊட்டி வர்றேன்.. மூணு நாள் தங்கப் போறேன்னு சொல்லிட்டுத்தான் ஊட்டிக்கு வந்தேன்.

இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ரம்பம்பம்’ பாடலை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள்தான் இந்தப் பாடலை படமாக்கப் போகிறோம் என்றார் சுந்தர்.சி.

அப்போது மேடையின் கீழிருந்து குறுக்கிட்ட டிடி, “நாங்க ஏற்கெனவே சுந்தர் ஸார்கிட்ட கேட்டப்போ நீங்கதான் வரலைன்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாரு…” என்று உண்மையை உடைத்தார். தொடர்ந்து பேசிய நடிகைகள் “மேடமும் நடிச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்…” என்று சொல்ல குஷ்பூ மேடையிலேயே துள்ளிக் குதித்தார்.

இதையடுத்து  மேடைக்கு வந்த சுந்தர்.சி. “அவங்க அந்தப் பாட்டுக்கு ஆடுனதை ஏற்கனவே எல்லாரும் பார்த்துட்டாங்க.. அதனால்தான் வேணாம்ன்னு நினைச்சேன். இப்போ என்ன.. மறுபடியும் அவங்களை ஆட வைச்சு மீடியாவைத் தவிர மத்தவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்று கூறினார்.

The post “பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! appeared first on Touring Talkies.

]]>
“என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் https://touringtalkies.co/my-wish-came-true-in-this-film-sundar-cs-happiness/ Tue, 27 Sep 2022 12:51:04 +0000 https://touringtalkies.co/?p=24683 அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’. இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், […]

The post “என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் appeared first on Touring Talkies.

]]>
அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்.

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித் தா’ படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மாதான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின்னர் கதை வேறுவிதமாக மாறிவிட்டது.

அதேபோல்தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் அதேபோல் பீல் குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை இந்த காபி வித் காதல்’ படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

மூன்றுவிதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவடரை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ யாரென்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தாதான். இந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர்போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மைவிட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக் கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்.

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும். அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மாதான். டேமேஜ் ஹீரோயின் என்றுகூட சொல்லலாம். அவர் ஒரு நாள் இருந்தாலும்கூட அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம்தான் படத்தின் திருப்பு முனை கதாபாத்திரம். நானும் யோகிபாபுவும் பேசிக் கொள்ளும்போதுகூட அந்த குழந்தையின் அப்பா, அம்மா நமக்காகவே புள்ளைய பெத்திருக்காங்களோ என்றுதான் பேசிக் கொள்வோம்.

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிடி. இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் நான் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையிலும்கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

The post “என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் appeared first on Touring Talkies.

]]>