The post ’தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி சென்னையில்… appeared first on Touring Talkies.
]]>தி வில்லேஜ் முதல் 3 எபிசோட்களைப் பார்த்த புஷ்கர்-காயத்ரி இது மிகவும் சுவாரஸ்யமான படைப்பு. இப்போது பிரைம் வீடியோவில் எல்லா எபிசோட்களும் இருப்பதால், உடனடியாக மீதமுள்ளவற்றைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம், இதுவே இதைப் பற்றிச் சொல்லக்கூடிய சிறந்த விஷயம் என்றார்.
இயக்குநர் சுதா கொங்கரா, சீரிஸ் இயக்குனர் மிலிந்த் ராவைப் பற்றிய பகிர்ந்து கொண்டார். “மிலிந்துக்கு திகில் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அவர் நடு இரவில் தான் எப்போதும் திகில் படங்களைப் பார்ப்பார்! அவன் திகில் படைப்புகளை கண்டிப்பாக சிறப்பாக தருவான் என்று எனக்குத் தெரியும் என்றார்.
நடிகர் சிபி சத்யராஜ் கூறுகையில், “இந்தத் சீரிஸ் மிகவும் சிறப்பான தமிழ் சீரிஸாக உள்ளது. மிலிந்தின் முதல் படமான அவள் திகில் ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதே போல் இந்தத் சீரிஸை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ் கூறுகையில் “இந்த கதையை 6 அத்தியாயங்களில் எடுப்பது எளிதான விஷயம் அல்ல, மிலிந்த் அதை நன்றாகச் செய்துள்ளார். முழு குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ”
இவர்களுடன் சிறப்புத் திரையிடலில் படக்குழுவினருடன் புஷ்கர்-காயத்ரி, சுதா கொங்கரா, சிபிராஜ், இயக்குநர் பிரியா, விஜய் யேசுதாஸ், குமரன் தங்கராஜன், சாருகேஷ் சேகர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
The post ’தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி சென்னையில்… appeared first on Touring Talkies.
]]>The post இறுதிகட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ’கங்குவா’ appeared first on Touring Talkies.
]]>தேவி பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆக் ஷன் காட்சிகள் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தன. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
The post இறுதிகட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ’கங்குவா’ appeared first on Touring Talkies.
]]>The post சென்னை பிரபல தியேட்டரில் வெளியான முதல் படம்.! appeared first on Touring Talkies.
]]>கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர், பணம்தான் முக்கியம் என்று நினைக்கிறார். ஒருவரின் உதவியால் அவர் வாழ்க்கையில் பணமும் செல்வாக்கும் கூடுகிறது.புகை, மது உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களும் சேர்ந்துகொள்கின்றன. மனைவி, குழந்தையை பிரிகிறார். வில்லனின் சதியில் சிக்கும் சங்கர், ஒரு கட்டத்தில், தவறுக்குத் துணை போவதை உணர்கிறார். ‘சொர்க்கம் என்பது நேர்மையான முன்னேற்றம்தான்’ என்பதைப் புரிந்து கொள்வதுதான் கதை.
இந்த படத்தின் நாயகனாக சிவாஜி,அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயாவும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனம் எழுதியிருந்தார். எம்.எஸ். விஸ்வநாதன் இசை. ஆலங்குடி சோமு எழுதிய ‘பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்’ பாடல் இன்றும் ரசிக்கக்கூடிய பாடலாவே இருக்கிறது.
‘சொல்லாதே யாரும் கேட்டால்’, ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் கோர்த்து வைத்திருந்தேன்’ ஆகிய இந்த படத்தின் இந்தப் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
சென்னை தேவி தியேட்டரில் வெளியான முதல்தமிழ்ப்படம் ‘சொர்க்கம்’தான். பின்னர், தேவி பாரடைஸ்தியேட்டரில் திரையிடப்பட்டது. சிவாஜியின் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் இதே தேதியில் தான்வெளியானது. இரண்டு படங்களும் ஒரே தீபாவளியன்று வெளியாகி நூறு நாளைக் கொண்டாடியது. 1970-ம் ஆண்டு இதே நாளில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை பிரபல தியேட்டரில் வெளியான முதல் படம்.! appeared first on Touring Talkies.
]]>The post சென்னை திரும்பினார் அஜித்!: விரைவில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு! appeared first on Touring Talkies.
]]>இதனிடையே தான் அஜித்தின் பிறந்த நாள் அன்று அவரின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. அஜித்தின் சுற்றுப்பயணத்தால் படப்பிடிப்பு தாமதமாகவதாகக் கூறப்பட்டது. அண்மையில் ‘சந்திரமுகி 2’ நிகழ்வில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என லைகாவின் சுபாஸ்கரன் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.
இந்நிலையில் ஓமன் நாட்டில் சுற்றுப் பயணத்திலிருந்த நடிகர் அஜித் அதனை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் துபாயில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித் தனது அடுத்தக்கட்ட மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post சென்னை திரும்பினார் அஜித்!: விரைவில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post சென்னைக்கு கலைஞர் வந்தது எப்படி?: சிவாஜி உடைத்த ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>“என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞரைப் பற்றிப் பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே! அப்படி என்றால் என்னை நானே புகழந்துகொள்வதாகிவிடுமே.
இருவரும் சிறுபிள்ளைகளாகத் தஞ்சை மாநகரிலே மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்தோமே, அதைப் பற்றிப் பேசுவதா? தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்றோமே…சாமிகும்பிட அல்ல காற்று வாங்க, அதைப் பற்றிப் பேசுவதா?
அங்கிருந்து சென்னை வர காசில்லாமல் உன் மோதிரத்தை விற்று சென்னை வந்தோமே, அதைப் பற்றிப் பேசுவதா?
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஊர் ஊராக, தெருத்தெருவாக நாடகம் போட்டேமே, அதைப் பற்றிப் பேசுவதா? அங்கு உணவு கிடைக்காமல் தள்ளாடினோமே அதைப்பற்றி பேசுவதா?
சினிமாவிற்கு வந்த பிறகு “பராசக்தி”யில் அவருடைய வசனத்தைப் பேசி நடித்தேனே, அதைப் பற்றி பேசுவதா?
அந்த படம் வந்த ஒரே நாளில் புகழ் வானத்திலே பறந்தேனே, அதைப் பற்றிப் பேசுவதா?
எனக்காக எழுதிய வசனத்தை
S.S. ராஜேந்திரனிடம் கொடுத்ததற்காக கோபித்துக் கொண்ட எனக்கு அரைமணியில் வசனமெழுதி அதை இரண்டே டேக்கில் பேசி உன் எழுத்து சிறப்பா?! என் வசனம் சிறப்பா?! என்ற போட்டியில் இரண்டுமே சிறப்பு என்று மக்கள் சொன்னார்களே அதைப் பற்றிப் பேசுவதா?
எதைப் பற்றியப்பா பேசுவது”….?” – இவ்வாறு நெகிழ்ந்து பேசினார் நடிகர் திலகம்.
The post சென்னைக்கு கலைஞர் வந்தது எப்படி?: சிவாஜி உடைத்த ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>The post போலீஸ் ஸ்டேஷனில் தூங்கிய சமுத்திரகனி! appeared first on Touring Talkies.
]]>அந்த சம்பவத்தை அவரே சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.
“ சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு சின்ன வயதில் சென்னை வந்தேன். அதுவும் அப்பாவின் பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை திருடிக்கொண்டு! எங்கு செல்வது என தெரியாமல் ஜெமினி பாலத்தின் கீழே படுத்து தூங்கினேன்.
அப்போது அங்கு ஒரு போலீஸ் அதிகாரி வந்து ‘இங்கெல்லாம் படுக்கக்கூடாது’ என்று சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, செய்திதாளை விரித்து கொடுத்து என்னை தூங்க சொன்னார். மறுநாள் காலை டீ வாங்கி கொடுத்தார். நான் என் சினிமா ஆசையை கூற ‘இப்போது நீ சிறு பையன். சினிமாவிலெல்லாம் சேர முடியாது.. ஊருக்கு போ’ என்றார். நானோ ‘தி. நகருக்கு செல்ல வழி மட்டும் சொல்லுங்கள்’ என்றேன். கொஞ்ச நேரம் என்னைப் பார்த்தவர், வழிசொல்லி என்னை அனுப்பி வைத்தார். அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். நான் இயக்குனராக வெற்றி பெற்ற பின் அவரை சந்திக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை’ என சமுத்திரக்கனி அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
The post போலீஸ் ஸ்டேஷனில் தூங்கிய சமுத்திரகனி! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயிலர் படப்பிடிப்பு: ஹைதராபாத் பறந்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அதே போல, மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் எஞ்சிய படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
காரில் இருந்து இறங்கி ரஜினி செல்லும் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
The post ஜெயிலர் படப்பிடிப்பு: ஹைதராபாத் பறந்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post சென்னையில் எனக்கு பிடித்த இடம்: பாலகிருஷ்ணா appeared first on Touring Talkies.
]]>அவர், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ஆகவே சென்னைதான் என் சொந்த ஊர். இங்கே பல இடங்கள் எனக்கு நன்றாக தெரியும். அதுவும் சென்னை கன்னிமரா நூலம் எனக்கு மிகவும் பிடித்த ஸ்பாட். என் நண்பன் சீனு அங்கே முதன் முறையாக அழைத்துச் சென்றான். முதன் முறை பெரிய ஈடுபாடு இல்லை. பிறகு புத்தகங்களைப் படிக்க படிக்க கன்னிமரா நூலம் பிடித்துவிட்டது. இப்போது சென்னைக்கு வந்தாலும் நேரம் வாய்க்கும்போதெல்லாம் கன்னிமரா சென்று சிறிது நேரமாவது புத்தகங்கள் படித்துவிட்டு வருவேன்” என்று கூறியிருக்கிறார் பாலகிருஷ்ணா
The post சென்னையில் எனக்கு பிடித்த இடம்: பாலகிருஷ்ணா appeared first on Touring Talkies.
]]>