The post கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… appeared first on Touring Talkies.
]]>தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டனின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அவரின் காட்சிகள் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் அவை கிளைமாக்ஸுக்கு முன்பான முக்கிய தருணங்களில் இடம்பெறும்.அந்தக் காட்சியும் கேரக்டரும் படத்திற்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியானது.
சுருக்கமாகச் சொல்வதானால், கேப்டன் இல்லாமல் கோட் கதையே இல்லை என்பதாக இருக்கும்.இந்தக் காட்சிகளை வெங்கட் பிரபு தற்போது பிரேமலதாவிடம் காண்பித்துள்ளார். அவர் அதை பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த அளவுக்கு கேப்டன் உண்மையாக நடித்தது போல் அந்த காட்சி இருந்தது என அவர் கூறியுள்ளார்.படம் வெளியான பிறகு அது மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.இதற்காகவே ரசிகர்கள் கோட் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
The post கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… appeared first on Touring Talkies.
]]>The post இது அப்பாவோட ஆசை… ஜெட்லி படத்தை ரீ மேக் செய்யும் விஜயபிரபாகரன்… appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக, விஜயபிரபாகரன் தனது தந்தை விஜயகாந்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், “ஜெட்லியின் சீனப்படமான ‘மை பாதர் இஸ் ஏ ஹீரோ’ எனும் படம் அப்பாவுக்கு மிகுந்த விருப்பமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்பா எங்களை இருவரையும் நடிக்கச் செய்ய ஆர்வமாக இருந்தார். ஆனால், அது பூர்த்தியாகவில்லை. எனவே, அவருடைய கனவை நனவாக்க “ஜெட்லியின் சீனப்படமான ‘மை பாதர் இஸ் ஏ ஹீரோ’ ரீமேக் தயாரிக்க நான் தீர்மானித்துள்ளேன். நேரம் மற்றும் சூழ்நிலை எவ்வாறு எங்களுக்குப் பங்குகொடுக்கின்றனவா பார்ப்போம்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இது அப்பாவோட ஆசை… ஜெட்லி படத்தை ரீ மேக் செய்யும் விஜயபிரபாகரன்… appeared first on Touring Talkies.
]]>The post கேப்டனுக்கு விருது எங்க போச்சு? அனுதாபம் பெற தான் விருது அறிவிப்பா?கொந்தளிக்கும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>அவர் அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு சொன்னதை செய்யவில்லை எல்லாம் சும்மா பேச்சு தான் கொந்தளித்துள்ளனர் விஜயகாந்த் ரசிகர்கள். அதாவது விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று டெல்லியில் விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படாதது பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருது ஏன் வழங்கவில்லை என இது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட விழாவில் விருது வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டது.ஆனாலும் கேப்டன் விஜய்காந்த் ரசிகர்கள் கேப்டன் இறந்த சமயத்தில் அனுதாபத்தை பெறுவதற்கு தான் விருது அறிவித்தீர்களா? அல்லது தேமுதிக ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால் தாமதிக்கிறீர்களா? என சரமாரியாக விளாசி வருகின்றனர்.
The post கேப்டனுக்கு விருது எங்க போச்சு? அனுதாபம் பெற தான் விருது அறிவிப்பா?கொந்தளிக்கும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post கேப்டன் மகனின் படை தலைவன்! நேசித்த ஒரு ஜீவனுக்காக போராடி தீர்த்த சண்முக பாண்டியன்… appeared first on Touring Talkies.
]]>சண்முக பாண்டியன் பற்றி இயக்குனர் அன்பு, கேப்டன் மகன் சண்முக பாண்டியன் மீது எனக்கு ஒரு தனி கவனிப்பும் அக்கறையும் உண்டு. இந்த கதை சொல்லும் போது மிகவும் ஆத்மார்த்தமாக கேட்டு அவர் ஒப்புக்கொண்டார் எனவும், கதை கேட்டு பிரேமலதா அவர்கள் மிகவும் சந்தோசம் அடைந்ததாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த படத்திற்காக உடம்பை ஏற்றி முடியை வளர்த்து உழைத்திருக்கிறார் சண்முக பாண்டியன்.
யானையும் சண்முக பாண்டியனும் கதையோடு ஐக்கியம் ஆகிவிட்டார்கள். பழகிய சில நாட்களிலேயே யானையிடம் அவர் மிகவும் நெருக்கமாகிவிட்டார். யானையும் அவரிடம் பிரியமாகிவிட்டது, இந்த படத்தோட கதை 70% காட்டுக்குள்ள நடக்குது பொள்ளாச்சியில் ஆரம்பித்து ஒடிசா வரைக்கும் பயணித்திருக்கும். யானை சண்முக பாண்டியனை அழகாக தும்பிக்கையில் தூக்கிட்டு போகும். சூட்டிங் முடிந்து லாரியில் யானையை கொஞ்சி ஏத்தி அனுப்புகிற வரைக்கும் முழுக்கவே சண்முக பாண்டியன் தான் யானையை பார்த்துக் கொள்வார்.
இவரோட ஆக்ஷன் அச்சு அசலா அப்படியே கேப்டன் மாதிரியே இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இது ஒரு உண்மை சம்பவம் தான்.இந்த படத்தை பிரேமலதா அவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய போது அவர்கள் மிகவும் சந்தோஷத்தில் கண்கலங்கினார். இந்த படத்தில் ஏ.சி.திரு.லோகச்சந்திராவோட பேத்தி யாமினி சந்திரன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இவரோடு டைரக்டர் கஸ்தூரிராஜா, முனீஸ்க்காந்த், அருள்தாஸ், ரிஷி என எல்லாரும் அருமையான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு திரைக்கதை வசனத்தில் நட்பே துணை இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு வலிமை சேர்த்துள்ளார்.
இப்படத்துக்கு இசையால் உயிரூட்டும் விதமாக இளையராஜா அவர்கள் கைகோர்த்தார்.கேப்டன் மகன் படம் என்றதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அவர் மீதான அன்பில், இப்படத்திற்காக மேலும் மெனக்கெட்டு உழைத்துள்ளார்.மக்கள் கொண்டாடும் விதமாக படைத்தலைவன் இருக்கும் என்றுள்ளார்.
The post கேப்டன் மகனின் படை தலைவன்! நேசித்த ஒரு ஜீவனுக்காக போராடி தீர்த்த சண்முக பாண்டியன்… appeared first on Touring Talkies.
]]>The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.
]]>