The post கௌதமி மோசடி புகார்! 6 பேர் கைது! appeared first on Touring Talkies.
]]>அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து “25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன். ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர்” என்று குற்றம்சாட்டிய கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.
அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
The post கௌதமி மோசடி புகார்! 6 பேர் கைது! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் மீதுதாக்குதல்: பா.ஜ.க. பிரமுகர் கைது appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், மர்ம நபர்களால் வெங்கடேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், இறங்கியது.
இதைத் தொடர்ந்து பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, ஆனந்தராஜ், மலைசாமி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
The post நடிகர் மீதுதாக்குதல்: பா.ஜ.க. பிரமுகர் கைது appeared first on Touring Talkies.
]]>The post “கர்நாடக மக்களுக்கு நன்றி!”: பிரகாஷ் ராஜ் ட்வீட் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.
The post “கர்நாடக மக்களுக்கு நன்றி!”: பிரகாஷ் ராஜ் ட்வீட் appeared first on Touring Talkies.
]]>The post ‘கேரளா ஸ்டோரி’யை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது ஏன்?: அண்ணாமலை கேள்வி appeared first on Touring Talkies.
]]>இப்படத்துக்கு மேற்குவங்கம் தடை விதித்துள்ளது அதே நேரம், உத்திரபிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தமிழகத்திலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “கேரளா ஸ்டோரி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவம் உண்மைதான். ஆனால் அது எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது.
அந்த படம் தவறு என்றால் அதை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஏன் வாங்கி வெளியிட வேண்டும்” என கேட்டுள்ளார்.
The post ‘கேரளா ஸ்டோரி’யை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது ஏன்?: அண்ணாமலை கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post ‘ரெட் ஜெயிண்ட்’ பெயரைச் சொல்ல பயமா? : திருமாவுக்கு திருப்பதி கேள்வி! appeared first on Touring Talkies.
]]>மேலும் அவர் பேசும்போது, “இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும் ? தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது. இது தொழில் போட்டி மட்டுமல்ல, தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுகிற மோசமான அணுகுமுறை. அரசியலை போல சினிமாவிலும் தனிநபரை சார்ந்திருக்கக்கூடிய நிலை வளர்ந்துவருகிறது.
யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் தான் இதனை பேசுகிறேன்” என்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளும் வந்துவிட்டால் நிலை என்னாவது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருக்கிறார். ‘ரெட் ஜெயண்ட் ‘என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கிக்கில்லையா? மிடுக்கில்லையா?” என்று பதிவிட்டுள்ளார்.
இது திரையுலகில் மட்டுமின்றி பொது வெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ‘ரெட் ஜெயிண்ட்’ பெயரைச் சொல்ல பயமா? : திருமாவுக்கு திருப்பதி கேள்வி! appeared first on Touring Talkies.
]]>The post “நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>இதனால் நடிகர் ராதாரவியை அப்போது அவர் இருந்த தி.மு.கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார்கள். இந்த நீக்கத்தைத் தொடர்ந்து தி.மு.கழகத்தில் இருந்து விலகிய ராதாரவி, பாரதீய ஜனதா கட்சியில் போய்ச் சேர்ந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவை கிண்டல் செய்த விவகாரம் பற்றி சமீபத்தில் ராதாரவி பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், “நான் நயன்தாராவைப் பத்தி தவறான அர்த்தத்தில் எதையுமே சொல்லலையே.. ‘அவங்க கவர்ச்சியாவும் நடிக்கிறாங்க. சீதை வேஷத்துலேயும் நடிக்கிறாங்க. ரெண்டுக்குமே கச்சிதமா பொருந்துறாங்க’ன்னுதான் சொன்னேன். எனக்கும் நயன்தாராவுக்கும் சம்பந்தமே இல்லையே.. ஆனால், அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது அவங்களுக்கு வேற இடத்துல சம்பந்தம் இருக்குன்னு.. இதைத்தான் பெண்களை அவமானப்படுத்தி பேசிட்டேன்னு சொல்லி தி.மு.க.வில் இருந்து என்னைத் தற்காலிகமா நீக்கிட்டாங்க. ‘எதுக்குப்பா தற்காலிகமா நிக்குறீங்க..? நிரந்தரமாவே நீக்குறீங்களேன்’னு சொல்லிட்டு நானே வெளில வந்துட்டேன்..” என்று பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
The post “நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post பா.ஜ.க.வில் சேரும் அடுத்த சினிமா பிரபலம் நடிகர் அர்ஜூனா..? appeared first on Touring Talkies.
]]>நடிகைகள் குஷ்பூ, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா, ஜெயலட்சுமி, மதுவந்தி என்ற வரிசையில் அடுத்து நடிகர் அர்ஜூனும் இடம் பெறப் போவது உறுதி என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகர் அர்ஜூன் இயல்பிலேயே தேசியக் கொள்கை உடையவர். ‘இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக படத்துக்குப் படம் சொல்லிக் கொண்டவர். இதனால் ஒரு தேசியக் கட்சியில், அதுவும் பா.ஜ.க.வில் அவர் சேர்வதில் ஆச்சரியமில்லைதான்.
பா.ஜ.க.வின் அடுத்த விக்கெட் நடிகை கஸ்தூரியாக இருக்கலாம். கஸ்தூரியோ, “இந்த நிமிடம்வரையிலும் தனக்கு பா.ஜ.க.வில் சேரும் திட்டமே இல்லை” என்கிறார். ஆனால், “என்னை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான பிரச்சாரங்களைப் பார்த்தால் பேசாமல் பா.ஜ.க.வில் சேர்ந்தேவிடலாமோ என்று எண்ணுவதாக” சொல்லியிருக்கிறார் கஸ்தூரி.
ஆக, அடுத்து கஸ்தூரி கமலாலயத்தில் கால் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.
எப்படியோ அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியில் வழக்கமான அரசியல்வாதிகளுக்கு இடையேயான மோதலைவிடவும் சினிமா கலைஞர்களின் மோதலே பெரிதாக இருக்கும் போல தெரிகிறது.
The post பா.ஜ.க.வில் சேரும் அடுத்த சினிமா பிரபலம் நடிகர் அர்ஜூனா..? appeared first on Touring Talkies.
]]>The post “பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>அதன் பின்பு செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது சந்தானம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “நான் பா.ஜ.க.வில் சேர்வதாகச் சொல்வது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி..” என்றார்.
மேலும் சந்தானம் பேசுகையில், “கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வருவது மன உளைச்சல் நிறைந்தது. இதை தாண்டி தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். தற்போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களில் இதுபோல் நான் பயந்தது இல்லை. கொரோனா காலத்தில் ‘பிஸ்கோத்’ படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோமே.
மக்கள் வருவார்களோ, இல்லையோ என்று பயந்தேன். தற்போது அந்த பயம் போய்விட்டது. ரசிகர்கள் அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகளைக் கடைப்பிடித்து தியேட்டர்களுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..!
ஓடிடி என்பது பூஜை அறை. சினிமா தியேட்டர் என்பது கோயில் மாதிரி. ஓடிடியைவிட தியேட்டர்களில் படங்கள் வெளியாவதுதான் சிறப்பானது. ரசிகர்கள் திரையில் நடிகர்களைப் பார்த்து கை தட்டி ரசிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நடிகர்கள் மீது ரசிகர்கள் அன்பு வைத்திருப்பதும் அவர்களைக் கொண்டாடுவதும் தியேட்டர்களில் படங்கள் வெளியாவதன் மூலமாகத்தான் நடக்கிறது. இதனால் தியேட்டர்களில்தான் உண்மையான சந்தோஷமே ரசிகர்களுக்குக் கிடைக்கும். இதேபோல் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டு கிடைக்கும். இது ஓடிடியில் நிச்சயமாகக் கிடைக்காது.
நான் பா.ஜ.வில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகிறது. இது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி. எனக்கு எதற்கு அரசியல்… ? சினிமாவில் இருக்கும் வேலையை ஒழுங்காக செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்…” என்றார்.
The post “பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>