Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
bharath – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Mar 2024 09:26:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png bharath – Touring Talkies https://touringtalkies.co 32 32 விவேக்கின் எண்ணத்தை செயல்படுத்தும் அவரது மனைவி அருள்செல்வி https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2/ Fri, 29 Mar 2024 09:26:47 +0000 https://touringtalkies.co/?p=40461 மறைந்த நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சென்னை சேர்ந்த பரத் என்பவருக்கும் திருமணம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தார் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டார்கள் திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. திருமணம் முடிந்ததும் மணமக்கள் வீட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டனர். மறைந்த நடிகர் விவேக்கின் எண்ணமான மரக்கன்று நடுவதை மறக்காமல் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கிய அவரது மனைவி அருள்செல்விக்கு […]

The post விவேக்கின் எண்ணத்தை செயல்படுத்தும் அவரது மனைவி அருள்செல்வி appeared first on Touring Talkies.

]]>
மறைந்த நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சென்னை சேர்ந்த பரத் என்பவருக்கும் திருமணம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தார் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டார்கள்

திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. திருமணம் முடிந்ததும் மணமக்கள் வீட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.

மறைந்த நடிகர் விவேக்கின் எண்ணமான மரக்கன்று நடுவதை மறக்காமல் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கிய அவரது மனைவி அருள்செல்விக்கு பாராட்டுகள் குவிந்தன.

நடிகர் விவேக் – அருள்செல்வி தம்பதிக்கு தேஜஸ்வினி, அம்ரிதா நந்தினி என இருமகள்கள். இதில் தேஜஸ்வினிக்கு திருமணம் நடந்துள்ளது.

The post விவேக்கின் எண்ணத்தை செயல்படுத்தும் அவரது மனைவி அருள்செல்வி appeared first on Touring Talkies.

]]>
லவ் + க்ரைம்: மிரட்டும் லவ் பட டிரெய்லர்! https://touringtalkies.co/actor-bharath-s-50th-movie-love-film-trailer-released/ Fri, 14 Jul 2023 01:36:41 +0000 https://touringtalkies.co/?p=34344 2003 ஆம் ஆண்டு தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அவருக்கு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து செல்லமே, பிப்ரவரி 14 உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான Story of Things என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘லவ்’ என்னும் படத்தில் பரத் நடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கியுள்ள இந்த படம் பரத்தின் 50வது படமாக […]

The post லவ் + க்ரைம்: மிரட்டும் லவ் பட டிரெய்லர்! appeared first on Touring Talkies.

]]>
2003 ஆம் ஆண்டு தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அவருக்கு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து செல்லமே, பிப்ரவரி 14 உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான Story of Things என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘லவ்’ என்னும் படத்தில் பரத் நடித்துள்ளார்.
ஆர்.பி.பாலா இயக்கியுள்ள இந்த படம் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது. ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, ராதா ரவி, பிக்பாஸ் டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைத்துள்ள நிலையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லவ் படத்தின் டீசர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. என்னதான் ரொமான்டிக் ஆக படத்தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் திகிலூட்டும் வகையில் காதலை கையாண்டிருந்தார்கள். இப்படியான நிலையில் லவ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பரத் – வாணி போஜன் இடையே வேறுபட்ட எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பது போலவும், திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாணி போஜனை கோபத்தில் கொலை செய்யும் பரத், அதனை மறைக்க போராடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிரட்டலாக அமைந்துள்ள ட்ரெய்லர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

The post லவ் + க்ரைம்: மிரட்டும் லவ் பட டிரெய்லர்! appeared first on Touring Talkies.

]]>
“பரத்திடம் நிறைய முறை அடி வாங்கினேன்” – வாணி போஜன் புகார்..! https://touringtalkies.co/i-got-hit-by-bharat-many-times-vani-bhojan-complains/ Wed, 07 Dec 2022 18:30:29 +0000 https://touringtalkies.co/?p=28266 RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்கிருக்கும் படம் ‘லவ்’. இந்தப் படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனம் – R.P.Films, தயாரிப்பு – R.P.பாலா – கௌசல்யா பாலா, இயக்கம் – R.P.பாலா, ஒளிப்பதிவு – P.G.முத்தையா, இசை – ரோனி ரபேல், படத் தொகுப்பு – அஜய் மனோஜ், கலை இயக்கம் – தினேஷ் மோகன் (MFA), நிர்வாகத் […]

The post “பரத்திடம் நிறைய முறை அடி வாங்கினேன்” – வாணி போஜன் புகார்..! appeared first on Touring Talkies.

]]>
RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்கிருக்கும் படம் லவ்’.

இந்தப் படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – R.P.Films, தயாரிப்பு – R.P.பாலா – கௌசல்யா பாலா, இயக்கம் – R.P.பாலா, ஒளிப்பதிவு – P.G.முத்தையா, இசை – ரோனி ரபேல், படத் தொகுப்பு – அஜய் மனோஜ், கலை இயக்கம் – தினேஷ் மோகன் (MFA), நிர்வாகத் தயாரிப்பு – ஆண்டோ.எல், சண்டை காட்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், நடனப் பயிற்சி இயக்கம் – சந்தோஷ், பத்திரிகை தொடர்பு – சதீஷ்(Aim).

மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா பேசும்போது, “இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும்போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக் காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப் படத்தில் அவர் நடிப்பில் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்..” என்றார்.

நடிகர் டேனியல் பேசும்போது, “நான் காலேஜ் படிக்கும் போது எங்க ஏரியாவில் நடிகர் பரத்தை ஜிம்முக்குபோகும் போது பார்த்திருக்கிறேன். இப்போது அவரோடு நடித்தது மகிழ்ச்சி. நடிகை வாணியுடன் இன்னொரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் மிக நல்ல நடிகை. இந்தப் படம் மிக திரில்லிங்கான கதை. நிறைய டிவிஸ்ட் இருக்கிறது. இயக்குநர் R.P.பாலா சூப்பரான ஆக்டர். அவரை நடிகராக பார்க்க ஆசை. இந்தப் படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்..” என்றார்.

நடிகை வாணி போஜன் பேசும்போது, “பரத்துடன் இன்னொரு படத்தில் உடனே நடிக்க வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தேன் ஆனால் இந்தக் கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

இந்தப் படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நானும் நிறைய முறை திருப்பியடித்திருக்கிறேன். படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. தினமும் வீட்டுக்குச் செல்லும்போகு காயங்களுடன்தான் சென்றேன். இது போல பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப் படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.

நடிகர் பரத் பேசும்போது, “இந்தப் படக் குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். RP Films R.P.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். அவர் மிகச் சிறந்த இயக்குநர். அவருடன் இந்தப் படத்தில் இணைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்ததில் இன்னும் மகிழ்ச்சி. இதற்காக R.P.பாலா சாருக்கு நன்றி.

P.G.முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப் பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. வாணி போஜனுடன் மிரள்’ படத்தில் நடிக்கும் போது இந்தக் கதையைக் கேட்க சொன்னேன், அவருக்கும் கதை பிடித்துவிட்டது. உடனேயே நடிக்க ஒத்துக் கொண்டார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம். நாங்கள் இருவரும் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச் சிறந்த ஆக்டர்.

இந்தப் படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது. அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை படத்தில் இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்களும் இருக்கின்றன. இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்..” என்றார்.

படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான R.P.பாலா பேசும்போது, “பரத்திடம் பல கதைகள் சொன்னேன். கடைசியில் இந்தக் கதைதான் அவருக்குப் பிடித்திருந்தது. P.G.முத்தையா சொல்லித்தான் இந்தப் படம் தயாரானது. அவர் என் நெருங்கிய நண்பர். என்னைவிட அவர்தான் இந்தப் படத்திற்காக அதிகம் உழைத்துள்ளார். விவேக்கை கண்டிப்பாக இப்படத்தில் கொண்டு வந்து விடுங்கள் என்று பரத் சொன்னார். விவேக்கும் சூப்பராக நடித்துள்ளார். டேனியல் என் நண்பர். பரத், வாணி போஜன்  இருவரும் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் அடுத்து எடுக்கும் படத்திலும் பரத் சார்தான் ஹீரோ. டிரெய்லர் வெளியிட்டு விழாவில் மீதத்தை சொல்கிறேன்..” என்றார்.  

The post “பரத்திடம் நிறைய முறை அடி வாங்கினேன்” – வாணி போஜன் புகார்..! appeared first on Touring Talkies.

]]>
நாசரிடம் நிஜமாகவே அடி வாங்கிய நடிகர் பரத்..! https://touringtalkies.co/i-really-got-a-kick-out-of-nassar-actor-bharath/ Mon, 05 Dec 2022 16:47:29 +0000 https://touringtalkies.co/?p=28075 சீரியல் எடுத்துக் கொண்டிருந்த எம்.திருமுருகன் எம் மகன் திரைப்படம் மூலம்  சினிமா இயக்குனராக அவதாரம் எடுத்தார். பரத், நாசர், சரண்யா,வடிவேல்,கோபிகா, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கண்டிப்பான அப்பா, காதல், பாசம், சென்டிமென்ட், நகைச்சுவை கலந்த படமாக 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் நடித்தது குறித்து பரத் ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார். |நாயகனை, அவனுக்கு பிடிக்காத சாப்பட்டை சாப்பிட சொல்லி அப்பா வற்புறுத்துவார். மறுக்கவே  அப்பாவுக்கு கோபம் வந்து விடும். மகனை அடி பின்னி […]

The post நாசரிடம் நிஜமாகவே அடி வாங்கிய நடிகர் பரத்..! appeared first on Touring Talkies.

]]>

சீரியல் எடுத்துக் கொண்டிருந்த எம்.திருமுருகன் எம் மகன் திரைப்படம் மூலம்  சினிமா இயக்குனராக அவதாரம் எடுத்தார். பரத், நாசர், சரண்யா,வடிவேல்,கோபிகா, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கண்டிப்பான அப்பா, காதல், பாசம், சென்டிமென்ட், நகைச்சுவை கலந்த படமாக 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

படத்தில் நடித்தது குறித்து பரத் ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார்.

|நாயகனை, அவனுக்கு பிடிக்காத சாப்பட்டை சாப்பிட சொல்லி அப்பா வற்புறுத்துவார். மறுக்கவே  அப்பாவுக்கு கோபம் வந்து விடும். மகனை அடி பின்னி எடுத்து விட்டுவார். அந்த சீனில்  உண்மையாகவே நாசர் என்னை அடித்து விட்டார்.

காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதால் நாசர் கதையுடன் அப்படியே ஒன்றி விட்டார். என்னுடன் சேர்த்து வடிவேல்,சரண்யா மேடத்துக்கும் அடி விழுந்தது” என்று எம் மகன் படத்தின்  சம்பவம் குறித்து பரத் பேசினார்.

The post நாசரிடம் நிஜமாகவே அடி வாங்கிய நடிகர் பரத்..! appeared first on Touring Talkies.

]]>
மிரள் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/miral-movie-review/ Sun, 13 Nov 2022 06:43:54 +0000 https://touringtalkies.co/?p=27006 ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில்  இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது. பரத், வாணி போஜன் தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாணி போஜனின் காதலை அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் இதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வாணி போஜன் தன்னுடைய கனவில் வரும் சில சம்பவங்களை கண்டு பயப்படுகிறார். அந்தக் கனவில் யாரோ ஒரு முகமூடி அணிந்த ஆள், பரத்தை கொலை செய்துவிட்டு அவரையும் […]

The post மிரள் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில்  இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.

பரத், வாணி போஜன் தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாணி போஜனின் காதலை அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் இதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் வாணி போஜன் தன்னுடைய கனவில் வரும் சில சம்பவங்களை கண்டு பயப்படுகிறார். அந்தக் கனவில் யாரோ ஒரு முகமூடி அணிந்த ஆள், பரத்தை கொலை செய்துவிட்டு அவரையும் கொலை செய்ய முயல்கிறான். இந்தக் கொடூர கனவினை பற்றி தனது கனவரான பரத்திடம் சொல்லி பயப்படுகிறார் வாணி. மேலும், இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்வடைகிறார். இதன் பிறகு பரத் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பரத் உயிர் பிழைக்க, அவரது கார் மட்டும் சேதமாகிறது.

இது மாதிரியான குழப்பங்களும், பிரச்சினைகளும் இத்தம்பதிகளை தொடர்ந்து சூழ்ந்து வந்திருக்கின்றன. இதனாலேயே பரத் தற்போதுதான் வீடு மாறி புது வீட்டுக்கு வந்திருக்கிறார். இங்கே வந்தும் இதே போன்று பிரச்சினைகள் தொடர்வதால் தம்பதிகள் இருவருமே கவலைப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காண சொந்த ஊரிலுள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு படையலிட்டால் நல்லது பிறக்கும் என்று நினைத்து பரத், வாணி, மகன் அங்கித், பரத்தின் நண்பரான ராஜ்குமார் நால்வரும் பரத்தின் சொந்த ஊருக்கு காரில் செல்கின்றனர்.

கிராமத்தில் குல தெய்வ வழிபாடு பூஜைகள் நிறைவடைய.. தம்பதியர் இருவரும் நிம்மதிப் பெருமூச்சுவிடும் அதே தருணத்தில்,  பரத் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலைக்காக அவருக்கு அழைப்பு வருகிறது. “இது இறைவனின் செயல்” என்றெண்ணி சந்தோஷப்படும் பரத்தும், வாணியும் அவசரமாக அந்த இரவு நேரத்திலேயே ஊருக்கு கிளம்புகின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வழியில் கார் பஞ்சராகிறது. அப்போது அந்தப் பக்கமாக வரும் ஒருவர், “இந்த இடம் மிகவும் ஆபத்தானது.. உடனேயே போயிருங்க” என்று எச்சரிக்கிறார். பரத் டயரை மாற்றிவிட்டு கிளம்பும்போது பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அங்கே நடக்கிறது. வாணி தன் கனவில் கண்டதுபோல முகமூடி அணிந்த ஒருவர் இவர்களை தாக்குகிறார். அவர்களை தாக்கியது யார்? வாணி கண்ட கனவுக்கும், நிஜத்தில் நடக்கும் இந்தச் சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் திறம்பட நடித்திருக்கிறார்கள்.  ‘காளிதாஸ்’ படத்திற்குப் பிறகு பரத்துக்கு கிடைத்த நல்ல செமத்தியான திரில்லர் கதை இது. சிறப்பான கதையை தேர்வு செய்தது மட்டுமின்றி அதில் சிறப்பான நடிப்பையும் தந்து படத்திற்கு சிறப்பளித்திருக்கிறார் பரத். ஒரு சாதாரண மனிதனுக்கு திடீரென்று உயிர் போகும் பிரச்சனை வந்தால் அவன் அதை எப்படி எதிர்கொள்வானோ, அப்படிப்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பரத். ஹீரோயிஸம் காட்டாமல் ஒரு எளிய மனிதனின் பிரதிபலிப்பாகவே படம் முழுவதும் நடித்திருக்கிறார் பரத்.

மற்ற படங்களைவிட வாணி போஜனுக்கு இப்படத்தில் நடிப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். அவரை மட்டுமே மையமாக வைத்து நடக்கின்ற கதைக் களம் என்பதால் அவரும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். எமோஷன்ஸ், கோபம், காதல், பாசம் என அனைத்துவித நடிப்பையும் அழகாக கொடுத்துள்ளார். பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படும் வாணி போஜன், அதற்கான தீர்வாக கிளைமாக்ஸில் எடுக்கும் முடிவு அதிரடியாக மட்டுமல்ல, பாராட்டும்படியாகவும் உள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், பரத்தின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் ராஜ்குமார் ஆகியோரும் தங்களது பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

ஒரு த்ரில்லர் படத்திற்கு இசை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒளிப்பதிவும் முக்கியம். அந்த வகையில் நம்மையும் திரையில் பயணிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. அந்த அத்துவானக் காட்டுக்குள்.. காற்றாலைகள் சூழ்ந்திருக்கும் இருட்டு பகுதியில் லைட் வசதிகளை ஞாபகம் வைத்திருந்து எப்படித்தான் தினம், தினம் ஷூட்டிங் நடத்தினார்கள்  என்று தெரியவில்லை. ஆனால் ஒளிப்பதிவு தரமானதுதான்.

படத்தை இறுதிவரை தாங்கிப் பிடிப்பது இசையும்தான். த்ரில்லர் ஷாட்டுகளில் நம்மை திகிலூட்ட சவுண்ட் எஃபெக்ட்டை அதிகப்படுத்தி, நம்மை அதிகம் பயப்படவும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். மேலும் படம் பார்ப்பவர்களை பயத்துடன் பார்க்கவும் வைக்கிறது கலைவாணனின் படத் தொகுப்பு. இரண்டு மணி நேரமும் நம் கவனம் முழுவதும் படத்துடன் ஒன்றிப் போக வைத்திருக்கிறார். பயமுறுத்துகின்ற காட்சிகளில் நறுக்கினாற் போன்றிருக்கும் அவரது வெட்டுக்களினால் நமக்குள் பயம் அதிகம் ஏற்படுகிறது.

பொதுவாக இது போன்ற சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே மொத்தப் படத்தையும் முடித்துவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் மொத்தத் திரில்லிங்கும் வெட்டவெளியில்தான் நடந்திருக்கிறது. இயக்குநருக்கு இதற்காக தனி  பாராட்டுக்கள்..!

ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை வித்தியாசமான கோணத்தில் கொடுத்ததோடு அதில் நல்ல மெசேஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

முகமூடி அணிந்த அந்த நபர் யார்? எதற்காக இப்படி இவர்களை கொலை செய்ய நினைக்கிறார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு கிளைமாக்ஸில் வெளிப்படுத்தும் காரணமும், அந்தக் காட்சியும் அசத்தல். தொடர்ந்து அந்தக் காரணத்திற்கான தீர்வாக இயக்குநர் முன் வைக்கும் விஷயமும் பாராட்டுக்குரியதுதான்..!

ஆனால், முதல் பாதியிலே கதையை கொஞ்சம் மேலோட்டமாக சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியை நாம் இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம். ஆனாலும் தனது முதல் படத்திலேயே ஒரு நல்ல த்ரில்லர் கதையை தேர்வு செய்து  மிரள வைத்திருக்கும் அறிமுக இயக்குநர் சக்திவேலுக்கு நமது வாழ்த்துக்கள்.

RATING : 3.5 / 5

The post மிரள் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..! https://touringtalkies.co/we-faced-many-challenges-and-made-this-film-miral-producer-g-dilli-babu-said/ Sat, 05 Nov 2022 18:49:11 +0000 https://touringtalkies.co/?p=26656 Axess Film Factory G.டில்லி பாபு தயாரிப்பில், இயக்குநர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப் பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக் குழுவும் […]

The post “பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
Axess Film Factory G.டில்லி பாபு தயாரிப்பில், இயக்குநர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’.

புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப் பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக் குழுவும் முழு அர்ப்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பரத் மிகச் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை..” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “Axess Film Factory தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து கொண்டிருக்கும் நிறுவனம். Axess Film Factory ஒரு படத்திற்கு தரும் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. பேச்சுலர் படத்தின் ஒரு பாடலுக்காக மட்டுமே 5 மாதங்கள் எடுத்து கொண்டனர். இந்தப் படத்தை 20 நாட்களில் முடித்துள்ளனர். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் 20 நாட்களில் எடுத்ததுபோல் இருக்காது. மிகப் பெரிய பிரமிப்பை தரும் படைப்பாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு ஹாரர் படத்தை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும்..” என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “இப்ப இருக்கிற ஜெனரேஷன் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மைண்டில் ஏதாவது ஓடிக் கொண்டே இருக்கிறது. இது 20 நாட்களில் எடுத்த படம் மாதிரியே இல்லை. ஒரு காட்சிக்கே அத்தனை ஷாட் வைத்திருக்கிறார். பெரிய திட்டமிடலுடன் படத்தை தந்துள்ளார். Axess Film Factory டில்லி பாபு நல்ல படங்களாக வெற்றிப் படங்களாக தயாரித்து வருகிறார் வாழ்த்துக்கள். நடிகர் பரத்தை எனக்கு பல காலமாக தெரியும். நல்ல உழைப்பாளி கதாப்பாத்திரம் புரிந்து மிக அழகாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “Axess Film Factory தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்புகள் தந்து வருகிறார்கள். அவர்கள் தயாரிப்பில் என் முதல் படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில் நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்புதான் காரணம்.

பரத் சார்தான் இந்த படம் உருவாக முதல் காரணம். அவர் மூலமாகத்தான் தயாரிப்பாளர் இந்தக் கதையை கேட்டு தயாரிக்க ஒத்து கொண்டார். அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

நடிகர் பரத் பேசும்போது, “இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுடனும் ஒரு சேர ஒத்து போகக் கூடிய நபர் இயக்குநர். இந்தக் கதையைப் பற்றியும், இயக்குநரைப் பற்றியும் நான் கூறியபோது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துக் கொண்டார்.

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். இந்தப் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை…” என்றார்.

தயாரிப்பாளர் டில்லி பாபு பேசும்போது, “ஒரு தயாரிப்பாளராக எங்களது பொறுப்பு அதிகம். படத்தின் கதை, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைத்தையும் கதைக்கு ஏற்றார் போல் அமைக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

நாங்கள் எடுத்த பெரும்பாலான படங்கள் முதல் பட இயக்குநரின் படங்கள்தான். இது போன்ற படங்கள் மூலமாகத்தான், நாங்கள் சிறந்த நண்பர்களை சம்பாதித்துள்ளோம்.

இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்டாலும், பெரிய உழைப்பை கொண்டுள்ளது. முன் தாயாரிப்பிற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. இந்த படத்தில் பல சவால்களை சந்தித்துதான் உருவாக்கினோம்.

பரத், வாணி போஜன் இருவரும் இந்த படத்தை முழுமையாக தாங்கி பிடித்து இருக்கிறார்கள். இந்த படம் குடும்பங்கள் பார்க்கக் கூடிய ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

The post “பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
பரத், வாணி போஜன் நடித்த ‘மிரள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு https://touringtalkies.co/miral-movie-release-date-announced/ Thu, 20 Oct 2022 17:21:06 +0000 https://touringtalkies.co/?p=25767 இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’. இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைத்துள்ளார். ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி […]

The post பரத், வாணி போஜன் நடித்த ‘மிரள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’.

இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைத்துள்ளார்.

ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக் குழு இன்றைக்கு அறிவித்துள்ளது.

அதன்படி ‘மிரள்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமாம்.

The post பரத், வாணி போஜன் நடித்த ‘மிரள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடுவன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/naduvan-movie-review/ Mon, 27 Sep 2021 01:57:41 +0000 https://touringtalkies.co/?p=18299 இந்த ‘நடுவன்’ படத்தை Banner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருந்த கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், யோக் ஜேபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜா ராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – யுவா, இசை […]

The post நடுவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்த ‘நடுவன்’ படத்தை Banner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருந்த கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், யோக் ஜேபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜா ராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், பாடல்கள், கார்க்கி, டாக்டர் பர்ன், ‘மிர்ச்சி’ விஜய், படத் தொகுப்பு – சன்னி சவரவ், கலை இயக்கம் – வி.சசிகுமார், இணை தயாரிப்பு – மது, தயாரிப்பாளர் – LUCKY CHHAJER.

‘இனிது இனிது’, ‘இசக்கி’, ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கோகுல் ஆனந்த், ஒரு முழு நேர குடிகாரர் என்பதால், பரத்துதான் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வருகிறார். பரத்துக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள். 

பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் தங்கி வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞரான அருவி’ பாலாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார். இறுதியில் கள்ளக் காதல் விவகாரத்தை பரத்திடம் பாலா சொன்னாரா..? இல்லையா…? குடும்பம் என்னவானது.. என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நடித்திருக்கிறார். கம்பெனியே கதி என கிடக்கும் நிர்வாகி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். பரத்தின் மனைவியாக, நடித்துள்ள அபர்ணா வினோத் கணவனிடமிருந்து காதலையும், அன்பையும் எதிர்பார்க்கும் ஒரு மனைவியாக தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். பரத்தின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரர், கள்ளக் காதலர் என வில்லன் வேடத்திற்கு பொருந்தி இருக்கிறார்.

அருவி பாலாவுக்கு ஒரு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் தடுமாற்றம் இல்லாமல் நடித்திருக்கிறார். இவருடைய நண்பர்களாக நடித்தவர்களும் ஓகே ரகம்தான்.

திரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் அது சரிவர அமையாதது பின்னடைவு. தரணின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை.

ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறது.

இயக்குர் ஷாரங், கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, அபர்ணா, கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது.

ஆலையின் பாத்ரூமில் அருவி’ பாலாவை கோகுல் மிரட்டுகின்ற காட்சியில் இயக்குநர் தனது பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் கொள்ளையடிக்க வந்த டீம்.. இன்னொரு பக்கம் மனைவி, மகள் மாட்டிக் கொண்டது.. கள்ளக் காதலன் வீட்டுக்கு வெளியில் சிக்குவது என்று அர்த்த ராத்திரியில் நடக்கும் அந்த முக்கால் மணி நேர காட்சிகள்தான் படமே. இந்தப் பரபரப்பை படம் முழுக்கக் கொண்டு வந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

இங்கே பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘நடுவன்’ சோபிக்கவில்லை.

The post நடுவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>