The post “பாக்யராஜ் ஆளுங்க டார்ச்சர் பண்ணாங்க!: பசங்க பாண்டிராஜ் appeared first on Touring Talkies.
]]>அவர், “சின்ன வயசில் இருந்தே சினிமா ஆசை உண்டு. சென்னையில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க விரும்பினேன். அதற்கு டிகிரி படித்திருக்க வேண்டும் என்றார்கள். நானே ப்ளஸ் டூதான் படித்து இருந்தேன்.
பிறகு சேலத்தில் மெடிக்கல் ஷாப், தஞ்சையில் எலக்ட்ரிகல் கடைகளில் வேலை பார்த்தேன்.
பிறகு சென்னைக்கு வந்து சென்ட்ரல்ல இறங்கி செம மழை. எனக்கு எழுதிக்கொடுத்த நண்பனின் அட்ரஸ் போரூரில் இருந்தது. அந்த சீட்டு மழையில் பேரூர் என்று ஆகியிருந்தது. நம்பரும் கிடையாது.. காலை ஆறு மணிக்கு இறங்கியவன் இரவு ஒன்பது மணிவரை அலைந்து முகவரியை கண்டுபிடித்தேன்.
பிறகு விஜயகாந்த் ஆபீஸுக்கு சென்றேன். அங்கு வாட்ச் மேன், ஏவிஎம் போங்க என்றார். அங்க வாட்ச் மேனுக்கு ஆள் எடுத்தாங்க. அங்கு சேர்ந்தேன்.
அப்போதுதான் பாக்யராஜை சந்தித்து, அவரது பாக்யா அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக சேர்ந்தேன். அவரை இம்ப்ரஸ் செய்ய கவிதைகள் எழுதிக் கொடுப்பேன்.
இதை பார்த்த அவர், என்னை எடிட்டோரியலில் சேர்த்தார். ஆனால் அங்கு ஏற்கெனவே ஏழு பேர், உதவி இயக்குநர் கனவில் இருந்தார்கள்.
அவர்கள் என்னை எதிரியாக பார்த்தார்கள். அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே வெளியேறி வேறு இயக்குநரிடம் சேர முயற்சித்தேன்” என்று பசங்க பாண்டிராஜ் கூறியுள்ளார்.
அவரது முழுப்பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “பாக்யராஜ் ஆளுங்க டார்ச்சர் பண்ணாங்க!: பசங்க பாண்டிராஜ் appeared first on Touring Talkies.
]]>The post “ஏமாற்றிய பாக்யராஜ்!”: கோவை சரளா ஓப்பன் டாக்! appeared first on Touring Talkies.
]]>“கோவையில் எனது வீட்டுக்கு அருகில்தான், இயக்குநர் பாக்யராஜ் வீடு. அப்போது அவரது பெயர் கோவை ராஜா. சினிமாவில் சேர வேண்டும் என தீவிரமாக இருந்தார். இருவரது குடும்பமும் நன்றாக அறிமுகம் உண்டு. அப்போது என் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
‘நான் இயக்குநர் ஆனால் நீதான் ஹீரோயின்’ என்று சொல்வார்.
அவரது, சுவரில்லா சித்திரங்கள் படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. ஆனால் அவர் என்னை தொடர்புகொள்ளவில்லை. நம்மை ஏமாற்றிவிட்டாரே என ஆதங்கப்பட்டேன். அப்போது கோவை வந்த அவர், அலங்கார் ஓட்டல் வந்திருந்தார்.
அவரைப் பார்க்க போனேன். பயங்கர கூட்டம். இருந்தாலும் முண்டி அடித்து அவரைப் போய் பார்த்தேன்..”
# அதன் பிறகு நடந்தது என்ன… கோவை சரளாவே சொல்கிறார்.. கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “ஏமாற்றிய பாக்யராஜ்!”: கோவை சரளா ஓப்பன் டாக்! appeared first on Touring Talkies.
]]>The post நன்றி மறக்காத பாக்யராஜ்! நெகிழ்ச்சி சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>“ரத்தக்கண்ணீர் படத்தில் வரும், எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாபாத்திரத்தையும் யாரும் மறக்க முடியாது. அந்த கதை, நாடகமாக நடத்தப்பட்டபோது, அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலகுரு. ஒரு கட்டத்தில் நாடகங்கள் அருகிப்போக, திரைத்துறை பக்கம் வந்தார்.
பாரதிராஜா முதன் முதல் இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் அசோசியேட் இயக்குநராக சேர்ந்தார். அவர்தான், பாக்யராஜை பாரதிராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
பாக்யராஜ் அடுத்தடுத்து நடிகர், இயக்குநர் என வளர்ந்துவிட்டார். பாலகுரு உதவி இயக்குநராகவே தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டார்.
இதை அறிந்த பாக்யராஜ், அவரதை தனது கதை இலாகாவில் சேர்த்துக்கொண்டார். அவர் பல நல்ல சீன்களை சொல்வார். அவரை மிக உயர்வாக நடத்தினார் பாக்யராஜ்.
அது மட்டுமல்ல அவரையும் அவரைப்போல தனக்கு உதவி செய்தவர்களையும் தயாரிப்பாளராக்கி லாபம் சம்பாதித்துக்கொடுத்தார்” என்றார் கலைஞானம்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..
The post நன்றி மறக்காத பாக்யராஜ்! நெகிழ்ச்சி சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி கதையில் நடித்த பாக்கியராஜ்! எந்த படம் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் ஜெகன் பகிர்ந்துள்ளார்:
‘பஞ்சு அருணாச்சலம்தான் இந்த படத்தை தயாரித்தார். கதை, திரைக்க, வசனம் எழுதி பாக்கியராஜ் இயக்க, ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் ‘நீங்களே நடித்துவிடுங்கள்’ என எல்லோரும் சொல்ல. பாக்கியராஜே இதில் நடித்தார் என ஜெகன் பேசியிருக்கிறார்.
The post ரஜினி கதையில் நடித்த பாக்கியராஜ்! எந்த படம் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ஜெ.வுக்கு கோபம்… எம்.ஜி.ஆர். காரணம் : பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>தவிர, எம்.ஜிஆர் அப்போலோ ஹாஸ்பிட்லில் இருந்தபோது ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.
ஆனால் நான் தினமும் அவரை சந்தித்து 2-3 மணி நேரம் பேசிவிட்டு வருவேன். மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு கூட ஜெயலலிதாவை யாரும் பார்க்க விடவில்லை. நான் அவரை சென்று பார்த்துவிட்டு மக்களிடம் வந்து அவர் நலமாக இருப்பதாக சொல்வேன். அதேபோல் எம்.ஜி.ஆருடன் அமெரிக்கா செல்வதற்கு அவர் முயற்சித்தும் அவரை யாரும் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. நான் கிளம்பி அமெரிக்கா சென்றுவிட்டேன்.
இந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கும் ஜெயலலிதாவுக்குமான இடைவெளியை அதிகமாக்கியது. இந்த மாதிரியான காரணங்களால் நான் விலகிவிட்டேன்.
பிறகு எனது மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அனுமதி கேட்டபோது போயஸ் கார்டனுக்கு வர சொன்னார் ஜெயலலிதா. நான் சென்றபோது அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தலைமை செயலாலளரிடம் பத்திரிக்கை வாங்கிக்கொள்ளும்படி கூறினார். அவரை பார்க்கவில்லை. பத்திரிக்கை வைக்க அனுமதி கொடுத்ததால் அவருக்கு என்மேல் கோபம் இல்லை என்று தெரிந்தது.
திருமணத்திற்கு வராத அவர் குத்துவிளக்கு பார்சல் அனுப்பி வைத்து உடல்நிலை சரியில்லாததால் என்னால் வர முடியவில்லை மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்” என்றார் பாக்யராஜ்.
The post ஜெ.வுக்கு கோபம்… எம்.ஜி.ஆர். காரணம் : பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>The post நல்ல நேரமும் கெட்ட நேரமும்: பாக்யராஜின் சுவாரஸ்ய கதை! appeared first on Touring Talkies.
]]>இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ், பேசும்போது ‘‘வாழ்க்கையில் நல்ல நேரம் கெட்ட நேரம் மாறி மாறி வரும்” என்றவர், அதைக் குறிப்பிடும்படி ஒரு கதையையும் கூறினார்:
“சில இளைஞர்கள் பீர் அடித்துக் கொண்டு ஜாலியா போகும் போது, இன்ஸ்பெக்டர் வந்து அவர்களை பிடித்துவிட்டார். அவர் கொஞ்சம் சாஃப்ட் ஆனவர். ‘என்னடா எல்லாரும் படிக்கிற பசங்களா இருக்கீங்க, இப்படி தண்ணி அடிச்சுட்டு திறியுறீங்க? வழக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இனிமே இந்த தப்பு பண்ணாதீங்க.
உங்க அட்ரஸ் எழுதிக் கொடுத்துட்டு கிளம்புங்க” என்கிறார்.
வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நல்ல நேரம்.
அந்த இளைஞர்கள் தங்களது சரியான முகவரியை கொடுத்துவிட்டார்கள்.
ஒருவன் மட்டும், சரியான முகவரியை கொடுத்தால் இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்துவிடுவாரோ என்று பயந்து தப்பான முகவரியை எழுதிக் கொடுத்தான்.
படித்த இன்ஸ்பெக்டர் ஓங்கி அறைந்தார். காரணம், அது அவரது முகவரி!
இதுதான் கெட்ட நேரம்” என்று பாக்யராஜ் சொல்ல அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
The post நல்ல நேரமும் கெட்ட நேரமும்: பாக்யராஜின் சுவாரஸ்ய கதை! appeared first on Touring Talkies.
]]>The post “பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது”: ராதிகா appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “தாவணி கதவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் பாக்யராஜின் முகத்தை பார்க்கவே முடியாது. பார்த்தாலே சிரித்து விடுவேன். இதனாலேயே பாக்யராஜை நேருக்கு நேர் பார்க்காமல் அந்த படம் முழுவதுமாக நடித்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
The post “பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது”: ராதிகா appeared first on Touring Talkies.
]]>The post அலையில் சிக்கி இருந்த இயக்குனர்! பாக்யராஜ் தகவல்! appeared first on Touring Talkies.
]]>“செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார். தொடர்ந்து முதன் முதலாக பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் தான் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார். படத்தை கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் இயக்கி இருந்தார். இடையில் அவர் அகால மரணமடையவே அவரது தந்தையும் இயக்குனருமான கோல்லுபுடி மாருதி ராவ் இயக்கினார்.
அந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்த படத்திற்காக நந்தி விருது கூட கிடைத்திருந்தது.
இப்படத்தின் தயாரிப்பாளருக்கு என்னை தெரியும் என்பதால், ‘படத்தை எடுத்தவரை பாருங்கள் இப்படத்திற்கு என்ன கிளைமேக்ஸ் இயக்குனர் யோசித்து வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. நீங்கள் படம் பார்த்து உங்கள் ஐடியாவை சொல்லுங்கள்’ என உதவி கேட்டார். நானும் அப்படியே செய்து கொடுத்தேன்” என்றார் பாக்யராஜ்.
The post அலையில் சிக்கி இருந்த இயக்குனர்! பாக்யராஜ் தகவல்! appeared first on Touring Talkies.
]]>The post வாலியை டார்ச்சர் செய்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து வாலியே ஒரு விழா மேடையில் கூறியிருக்கிறார்.
அவர், “ஒருமுறை பாக்கியராஜ் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘நானே என் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன். அதில் ஒரு பாடலை நீங்கள் எழுத வேண்டும்’ என அழைத்தார்.
அவரின் வீட்டுக்குச் சென்றேன். பத்து நாட்கள் சோறு, தண்ணி, உறக்கம், சரியாக இல்லாமால் ஆர்மோனிய பெட்டியை வாசித்து இசையை அவர் கற்று தேர்ந்திருந்தார் என்பது தெரிந்தது.பிரமித்தேன்.
ஆனால், எப்போதும் சிகரெட்டை ஊதிச் தள்ளுவார். அந்த புகையை நானும் வாங்க வேண்டியிருக்கும்.
தவிர பல்லவியை நான் எழுதி கொடுத்து, தூங்கி விழுந்து, எழுந்து, அவரின் மனைவி பூர்ணிமா எனக்கு டிபன் கொடுத்து நான் சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதன் பின்னரும் அவர் அந்த பல்லவியையே பார்த்துக்கொண்டிருப்பார். ஒரு முடிவுக்கே வரமாட்டார்.
‘இனிமேல் இவர் இசையில் பாடல்களே எழுதக்கூடாது’ என நான் நினைக்கும் நேரத்தில், என்னிடம் ஒரு கவரை தருவார். அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் நான் எப்படி எழுத மாட்டேன் என சொல்வேன். அதன் பிறகு அவர் இசையமைத்த ஆறு திரைப்படங்களில் பாட்டெழுதினேன்” என்று நகைச்சுவையாக பேசியிருந்தார் வாலி.
The post வாலியை டார்ச்சர் செய்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பாக்யராஜ்,
“இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் பேசினார்க்.
அதில் என்ன பெரிய ரகசியம் என்று கேட்டால், எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி.
எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என்றார் பாக்யராஜ்.
The post முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>