The post என்னுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை – Aadukalam Naren | Part 3 | Chai With Chithra appeared first on Touring Talkies.
]]>The post “இறப்பதற்கு முன் பாலு மகேந்திரா வாங்கிய சத்தியம்!”: மௌனிகா appeared first on Touring Talkies.
]]>“அப்போது நான் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. நீ சிறந்த நடிகை.. உனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதே போல, எனக்காக நீ வாழ்க்கையை இழக்கக்கூடாது.. இன்னொரு திருமணம் செய்து கொள்’ என்று கூறி சத்தியம் கேட்டார்.
நடிக்கிறேன் என சத்தியம் செய்தேன். ஆனால், இன்னொரு திருமணம் குறித்த எண்ணம் இல்லை.. ஆகவே அது குறித்து சத்தியம் செய்ய இயலாது என மறுத்துவிட்டேன்” என்றார் மௌனிகா.
The post “இறப்பதற்கு முன் பாலு மகேந்திரா வாங்கிய சத்தியம்!”: மௌனிகா appeared first on Touring Talkies.
]]>The post பாலு கேட்காமலேயே கமல் செய்த உதவி! appeared first on Touring Talkies.
]]>பாலுமகேந்திரா அந்த காலகட்டத்தில் மறுபடியும் என்ற படத்தை உருவாக்கிய போது, பண நெருக்கடி ஏற்பட்டது. பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக கமலிடம் நேரில் சென்றார். பணம் கேட்க தயக்கப்பட்டு திரையுலகம் பற்றி பொதுவாக பேசிக்கொண்டு இருந்தார். கமலும் அப்படித்தான்.
சில நிமிடங்களில் வீட்டுக்குள் சென்று பிறகு வந்த கமல், பெரும் தொகையைக் கொடுத்து, தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் இயக்க முடியுமா.. அதற்கான அட்வான்ஸ்தான் இது என்று கொடுத்தார்.
அப்படி உருவான படம்தான் சதி லீலாவதி.
தமிழ்த்திரையுலகின் மிக முக்கிய இயக்குநர் பாலு மகேந்திரா. இவர் கமலுடன் இணைந்து உருவாக்கிய, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் இன்றும் பிரபலமானவை.
பாலுமகேந்திரா அந்த காலகட்டத்தில் மறுபடியும் என்ற படத்தை உருவாக்கிய போது, பண நெருக்கடி ஏற்பட்டது. பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக கமலிடம் நேரில் சென்றார். பணம் கேட்க தயக்கப்பட்டு திரையுலகம் பற்றி பொதுவாக பேசிக்கொண்டு இருந்தார். கமலும் அப்படித்தான்.
சில நிமிடங்களில் வீட்டுக்குள் சென்று பிறகு வந்த கமல், பெரும் தொகையைக் கொடுத்து, தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் இயக்க முடியுமா.. அதற்கான அட்வான்ஸ்தான் இது என்று கொடுத்தார்.
அப்படி உருவான படம்தான் சதி லீலாவதி.
கேட்காமலேயே முகக்குறிப்பறிந்து நண்பருக்கு உதவி செய்த கமல் பாராட்டுக்குரிய மனிதர்தான்.
The post பாலு கேட்காமலேயே கமல் செய்த உதவி! appeared first on Touring Talkies.
]]>The post “பாலுமகேந்திராவின் முதல் பிள்ளை நான்தான்” – நடிகர் மோகனின் நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>இவ்விழாவில் நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்திலிருந்து முதல் சிங்கிளாக ஒரு அருமையான பாடல் வெளியிடப்பட்டது. ‘ஹரா’ படக் குழுவினருடன் திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகமெங்குமிருந்து பிரமாண்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் விஜய் ஶ்ரீஜி பேசும்போது, “மோகன் சார் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். அவரிடம் கதை சொல்ல எனக்கு 2 வருடங்கள் ஆனது. நிறைய கதைகள் கேட்டாலும் நல்ல படம் என்றால்தான் அவர் ஒப்புக் கொள்கிறார். இன்றும் ஷூட்டிங் செல்லும் இடங்களில் அவருக்காக ரசிகர்கள் குவிகிறார்கள். இந்தப் படத்தை அவர் ரொம்பவும் பிடித்து நடித்திருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த வெற்றிப் படமாக இது இருக்கும். அவர் வெற்றி விழா நாயகன் என்பதை இப்படம் மூலம் மீண்டும் நிரூபிப்பார்…” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “நான் இங்கு ஒரு இயக்குநராக அல்ல; ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன். பாலுமகேந்திராவின் மூத்த பிள்ளை அவர். கடைசிப் பிள்ளை நான் என்பது பெருமை எனக்கு. இளம் வயதில் அவரது படங்கள் பார்த்து ரசித்து வளர்ந்தேன். இயக்குநரான பின்பும் என் நடிகர்களுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் அவர் நடித்த காட்சிகளைத்தான் போட்டுக் காட்டுவேன். அவரது ‘ஹரா’ படம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. விரைவில் அவரோடு இணைந்து படம் செய்யவுள்ளேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.
நடிகர் மோகன் பேசும்போது, “நான் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் என்னுடன் இருப்பவர்கள் என் ரசிகர்கள்தான். அவர்களுக்கு என் மிகப் பெரிய நன்றி. இந்த விழாவைக்கூட நான் வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் என் ரசிகர்கள் வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன்.
இயக்குநர் பாலு மகேந்திராவின் மூத்த பிள்ளை நான். கடைசிப் பிள்ளையான இயக்குநர் சீனு ராமசாமி இங்கு வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பாலுமகேந்திரா ஒரு மகா கலைஞர். அவருக்கு சினிமாவில் எல்லாமே தெரியும். அவரது முதல் படமான ‘கோகிலா’வில் அண்ணன் கமலுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கமல் சார், ஷோபா மேடம், ரோஜா ரமணி என்று பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருந்தேன். மோகனின் ஃபேவரைட் படங்களில் கண்டிப்பாக ‘கோகிலா’ இடம் பிடித்திருக்கும்.
‘ஹரா’ படத்தில் என்னை மிக வித்தியாசமாக மாற்றி படமெடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ. இவருடன் இணைந்தது மகிழ்ச்சி. அப்பா, மகளுக்குள் உள்ள உறவை சொல்லும் கதை இது. குஷ்பு உடன் டூயட்டும் இருக்கு. உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
தமிழ் 86, தெலுங்கில் 9, கனடாவில் 6 மற்றும் மலையாளத்தில் 5 என இதுவரை 106 திரைப்படங்களில் நடித்துள்ள மோகன், ‘ஹாரா’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post “பாலுமகேந்திராவின் முதல் பிள்ளை நான்தான்” – நடிகர் மோகனின் நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>