The post ‘லியோ’வுக்கு சிக்கல் appeared first on Touring Talkies.
]]>லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதே நாள் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படமும் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பாலகிருஷ்ணா ரெட்டி நடிக்கும் படம் ‘பகவந்த் கேசரி’. படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்துக்கு காஜல் அகர்வால், ப்ரியங்கா ஜவால்கர், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய்யின் ‘லியோ’, பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ ஒரேநாளில் வெளியாக இருப்பது விஜய் ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே விஜயின் வாரிசு படம், வாரிசுடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியானது. அப்போது, நேரடி தெலுங்குப் படத்துக்கே அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டது. இதனால் வாரிசுடு படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அது போன்ற நிலை லியோவுக்கும் வருமோ என விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
The post ‘லியோ’வுக்கு சிக்கல் appeared first on Touring Talkies.
]]>The post பிரபல நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்ஸஸ் மீட், ஹைதராபாத்தில் நடந்தது. இதில், பாலகிருஷ்ணாவுடன், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று வெளியானது. இதில், பாலகிருஷ்ணாவும் ஹனியும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் செய்து பருகும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, “பாலகிருஷ்ணா ஒரு சீனியர் சிட்டிசன். தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அனைவருக்கும் நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டிய இவர் நடிகையுடன் மது அருந்துவது சரியா.. அப்படியே அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அந்த படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடலாமா… இது அவரைப் பின்பற்றும் இளைய சமுதாயத்தை தவறான வழிக்கு கொண்டு செல்லுமே’ என பலரும் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post பிரபல நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.
]]>The post பாலகிருஷ்ணா – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. மாஸ் ஹீரோவான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற கலைஞர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சந்து ரவிபதி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பட குழுவினர், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.
சங்கராந்தி என்பது தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழாவாகும். மேலும் சங்கராந்தி விடுமுறை தேதியில் வெளியான மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் பல திரைப்படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, தொழில் ரீதியாக மிக பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’யையும் எதிர்வரும் சங்கராந்தி விடுமுறையில் படக் குழு வெளியிடுகிறது.
The post பாலகிருஷ்ணா – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post சென்னையில் எனக்கு பிடித்த இடம்: பாலகிருஷ்ணா appeared first on Touring Talkies.
]]>அவர், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ஆகவே சென்னைதான் என் சொந்த ஊர். இங்கே பல இடங்கள் எனக்கு நன்றாக தெரியும். அதுவும் சென்னை கன்னிமரா நூலம் எனக்கு மிகவும் பிடித்த ஸ்பாட். என் நண்பன் சீனு அங்கே முதன் முறையாக அழைத்துச் சென்றான். முதன் முறை பெரிய ஈடுபாடு இல்லை. பிறகு புத்தகங்களைப் படிக்க படிக்க கன்னிமரா நூலம் பிடித்துவிட்டது. இப்போது சென்னைக்கு வந்தாலும் நேரம் வாய்க்கும்போதெல்லாம் கன்னிமரா சென்று சிறிது நேரமாவது புத்தகங்கள் படித்துவிட்டு வருவேன்” என்று கூறியிருக்கிறார் பாலகிருஷ்ணா
The post சென்னையில் எனக்கு பிடித்த இடம்: பாலகிருஷ்ணா appeared first on Touring Talkies.
]]>The post நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ appeared first on Touring Talkies.
]]>நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர்.
‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் தலைப்பு ஆக்க்ஷன் என்டர்டெய்னர் ஜானருக்கு பொருத்தமானது. பாலகிருஷ்ணாவின் பெரும்பாலான படங்கள் ‘சிம்ஹா’ என இருந்தால், அந்தத் திரைப்படங்கள் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் படத்தின் தலைப்பும், போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போஸ்டரில் பாலகிருஷ்ணா, உக்ரமான அவதாரத்தில் தோன்றுவது அவரது கதாபாத்திரத்தை சித்தரிக்கிறது. அதிலும் வேட்டி அணிந்த அவரது தோற்றமும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்துடன் மிகப்பெரிய வேட்டைக்காக காத்திருப்பது போல் உணர்த்துவதால், ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதிலும் ‘புலிசேர்லா’ நாலு கிலோ மீட்டர் என்ற மைல் கல் மீது அவர் கால் வைத்து நின்றிருக்கும் தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டருக்கும் அவரது ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ. எஸ். பிரகாஷ் பணியாற்றுகிறார். ராம் – லக்ஷ்மன் சண்டைக் காட்சிகளை அமைக்க, சந்து ரவிபதி தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.
நந்தமுரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 2023-ம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.
The post நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ appeared first on Touring Talkies.
]]>The post “A.R.ரஹ்மான் யார் என்றே எனக்குத் தெரியாது” – நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிர்ச்சி பேட்டி appeared first on Touring Talkies.
]]>தற்போது தனது மைத்துனரும், சம்பந்தியுமான ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகத்தில் யாருமே இவருடன் ஒத்துப் போக முடியாது. எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்றே தெரியாததால் இவருடன் நட்பு பாராட்டுவது மிகவும் கடினம் என்று அங்குள்ள நடிகர்களே சொல்வார்கள்.
அதோடு “தனது தந்தையான என்.டி.ராமராவ்தான் தெலுங்கு சினிமாவையே உருவாக்கியவர்…” என்று பல ஆண்டுகளாக பாலகிருஷ்ணா சொல்லி வருகிறார். இதையொட்டியே தெலுங்கு சினிமாவில் என்.டி.ராமராவின் சக மூத்த கலைஞர்களான நாகேஸ்வரராவ், ராமா நாயுடு போன்றோரை எப்போதும் குறிப்பிட்டே பேச மாட்டார் பாலகிருஷ்ணா. இவர்கள் இருவரின் மரணத்திற்குக்கூட அஞ்சலி செலுத்த பாலகிருஷ்ணா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஆஸ்கர் விருது வென்ற நமது தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுபடுத்தும்வகையில் பேசியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
அவர் இது குறித்து பேசும்போது, “ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் யார் என்றே எனக்கு தெரியாது. யாரோ ஒருவர் அவ்வளவுதான்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம்…” என்றும் கூறியுள்ளார்.
“எந்தவொரு உயரிய விருதும் என்.டி.ராமராவ் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது…” என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானை யார் என்றே தெரியாது என்ற பாலகிருஷ்ணாவின் கூற்று பொய்யானது. அவருக்குத் தெரியாமல் இருக்கவும், அவர் பார்க்காமல் இருக்கவும் வாய்ப்பே இல்லை. ஒரு பொறுப்பான சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இப்படி பொய் பேசலாமா..?
உலக அளவில் முதன்மையான விருதினைப் பெற்றிருக்கும் ரஹ்மானை ஒரு கலைஞனாக இருந்து கொண்டே இப்படி அவமானப்படுத்தியிருப்பது கேவலமானது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட்டுகளை எழுதி வருகின்றனர்.
நடிகர் பாலகிருஷ்ணாவின் கோபத்திற்குக் காரணம் இந்திய அரசு இதுவரையிலும் என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்காததுதான்.
ஆந்திராவின் கிருஷ்ண பரமாத்மாவான நடிகர் என்.டி.ராமராவ் ‘தெலுங்கு தேசம்’ என்ற கட்சியைத் துவக்கி ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து முதலமைச்சரானார். இந்த ஒரே காரணத்துக்காக அவர் இறந்த பிறகு காங்கிரஸ் அரசு மத்தியில் பொறுப்பில் இருக்கும்வரையிலும் என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கவில்லை.
அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியும் தற்போது தெலுங்கு தேசம் கட்சி அவர்களுக்கு எதிர்ப்பாகஇருப்பதால் அவர்களும் ‘பாரத ரத்னா’ விருதினை கொடுப்பதாக இல்லை.
சமீப ஆண்டுகளாக என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது. ஆந்திர திரைப்படத் துறையின் சார்பாகவும் இது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துவிட்டார்கள். ஆனாலும், மத்திய அரசு இதற்கு இணங்கவில்லை.
இந்தக் கோபத்தில்தான் பாலகிருஷ்ணா இப்படி பொங்குகிறார் என்கிறார்கள் ஆந்திர மாநில மக்கள்.
The post “A.R.ரஹ்மான் யார் என்றே எனக்குத் தெரியாது” – நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிர்ச்சி பேட்டி appeared first on Touring Talkies.
]]>