The post அரண்மனை 4 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>என்னதான் அரண்மனை 3 படம் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும் சற்றும் அசராத சுந்தர் சி. இந்த கோடை விடுமுறையை டார்கெட் செய்து அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். குஷ்பு தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இசையில், தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகியுள்ளது அரண்மனை 4.
இந்த படத்தில் சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சுந்தர் சி ஒரு வழக்கறிஞர்.செய்துஅப்பா வழி அத்தையாக கோவை சரளா, சகோதரி கதாப்பாத்திரங்களில் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.தான் காதலித்தவரோடு வேறு ஊருக்கு ஓடிப்போய் குடும்பம் நடத்துகிறார் தமன்னா, 10 வருடங்கள் கழித்து திடீரென அவரது வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டு அத்தையோடு தங்கையின் ஊருக்கு போய் அவரது அரண்மனை மாதிரியான ஒரு வீட்டுக்குள் தங்குகிறார் சுந்தர் சி.
அந்த இடத்தில் அப்போது படிப்படியாக தங்கை வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய க்ளூ கிடைக்க ஆரம்பித்த நிலையில் அதை நூல்பிடித்துச் செல்லும்போது பல அதிர்ச்சி பின்னணிகளை கண்டுபிடிக்கிறார் சரவணன். பிரச்சினைகளை தீர்த்து தங்கை குடும்பத்தை சரவணன் எப்படி காத்தார் என்பதை, கொஞ்சம் காமெடி, அப்பப்போ த்ரில்லர் ஹாரர் என காட்டியுள்ளது இப்படம்.
இப்படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. இந்த முதல் பாதியில் பல மர்மங்களும் அதற்கான க்ளூவும் காட்டப்படுள்ளன். இதனால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வத்தோடு கதையோடு நாம் பயணிக்க இயல்கிறது. இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்கியதுமே, சீக்கிரம் சீட்டுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு தோன்றுவது இதனால்தான். சமீப காலத்தில் கோவை சரளா காமெடி என நினைத்து ஓவராக சத்தம் போட்டு பேசுவாரே, அப்படியெல்லாம் இதில் கடுப்பக்காமல் செய்யாமல், தனது ட்ரேட் மார்க் எதுகை மோனை பேச்சால் காமெடி செய்திருப்பது முதல் பாதிக்கு மற்றொரு பலம் என்றே சொல்லலாம்.
இப்படத்தின் முதல் பாதி பலமாக இருக்கும் போது இரண்டாம் பாதி சற்று பலவீனமாக தான் உள்ளது.தானே பலமுறை, அடித்து துவைத்த அதே டெம்ப்ளேட்டை சுந்தர் சி பயன்படுத்தியுள்ளார். கிளைமேக்ஸ் நெருங்கும்போது சுந்தர் சி காரில் பரபரப்பாக போவது, இன்னொரு பக்கம் அம்மன் பாடல் இசைக்கப்படுவது என முந்தைய படத்தின் ரீலை மாற்றி இதில் போட்டுவிட்டார்களா என்ற சந்தேகத்தோடு, கண்ணை கசக்கி பார்க்க வைக்கிறது காட்சிகள். அம்மன் வந்து தீமையை அழிப்பது கிளைமேக்சாக இருப்பது சரியாக தான் உள்ளது.கண்டிபாக நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இது அமைந்திருக்கிறது.நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
The post அரண்மனை 4 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.
]]>சுந்தர் சி-யின் அரண்மனை 4 அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் தம்மன்னா நடித்துள்ளார், இந்நிலையில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா நன்றாக மாட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தம்மன்னா ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடியில் தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.நடிகை தமன்னாவுக்கு இதுகுறித்து மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர். வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேபோல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்ட விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் அவர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக சொல்லி தற்போது வர இயலாது வேறொரு தேதியில் ஆஜராகிரேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.
]]>The post கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லிய விஷால்… கவனித்த சுந்தர் சி…அரண்மனை 4 Vs ரத்னம் appeared first on Touring Talkies.
]]>ஆனால் என்னதான் வெற்றியை கொடுத்தாலும் அந்த வெற்றிக்கு காரணமு எஸ்ஜே சூர்யாவுடன் கூட்டணி வைத்ததால் தான் என பேசப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை எப்படியாவது வெற்றி படங்களாக்க மாற்ற கடுமையாக உழைத்து வருகிறார் விஷால்.
இந்நிலையில் விஷால் நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவரவுள்ள ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26ல் ரிலீசாக உள்ளது.அதோபோல் சுந்தர் சி-ன் அரண்மனை படமும் அதே தேதியில் ரிலீசாக இருந்த நிலையில் அரண்மனை 4 வந்தால் ரத்னம் படத்துக்கு கலெக்ஷன் எல்லாம் ராங் ஆகிவிடும் என்பதால் சுந்தர் சி-ஐ சந்தித்து அரண்மனை 4 ரிலீஸ் தேதியை கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லி கேட்டாராம் அதற்கு என்கையில் ஒன்றுமில்லை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவெடுக்கும் என முடித்து இருக்கிறார் சுந்தர் சி.
பின்னர் ஒருகட்டத்தில் விஷாலின் கோரிக்கைக்கு சம்மதித்த சுந்தர் சி பொங்கல் தினத்திலிருந்து ஏப்ரல் 11 அங்கிருந்து ஏப்ரல் 26க்கு வந்த ரிலீஸ் தற்போது விஷாலின் நலனை கருத்தில் கொண்டு வருகிற மே 3ம் தேதி ரிலீசாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.ஆக மொத்தத்தில் நைசாக பேசி காரியத்தை சாதித்து விட்டார் விஷால்.
The post கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லிய விஷால்… கவனித்த சுந்தர் சி…அரண்மனை 4 Vs ரத்னம் appeared first on Touring Talkies.
]]>