The post சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>குழப்பமாக இருக்கிறதா.. தொடர்ந்து படியுங்கள்.
தான் இயக்கிய படையப்பா படத்தில், சிவாஜி நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
அப்போது அவர், “அப்படத்தில் ஒரு காட்சியில் தன் சொத்துக்களை எல்லாம் தன் தம்பி மணிவன்னனுக்காக விட்டு கொடுப்பார் சிவாஜி. அப்போது பத்திரத்தில் மகன் ரஜினி, மகள் சித்தாரா மற்றும் மனைவி லட்சுமி என அனைவரும் கையெழுத்து போடுவார்கள்.
மகள் கையெழுத்து போடும் போது மட்டும் சித்தாராவின் தலையை சிவாஜி தடவி விட்டு அழும் காட்சியை படமாக்க இருந்தோம். உடனே சிவாஜி எங்கே நீ நடித்துக் காட்டு என கூறினார்.
உடனே நான் சித்தாராவின் தலையை தடவியவாறே அழுது காட்டினேன். அதைப் பார்த்த சிவாஜி, அருகில் இருந்த ரஜினியிடம், ‘இவன் ஒரு டைரக்டர் மட்டும் இல்ல, சிறந்த நடிகனும்கூட’ என்று வியந்து பாராட்டினார். இந்த வார்த்தை, ஆஸ்கார் அவார்டை விட பெரியது” என்று நெகிழ்ந்து கூறினார் கே.எஸ்.ரவிக்குமார்.
The post சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>