The post “எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வருகிறது. ஆரம்பித்த கட்சி, ஆரம்பிக்கப் போகும் கட்சி என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.
ஆனால், பெண்களை எந்தக் கட்சி மரியாதையாக நடத்துகிறதோ.. பெண்மையை எந்தக் கட்சி போற்றுகிறதோ.. நான் வணங்கும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும் யார் அவதூறு பேசாமல் இருக்கிறார்களோ.. அந்தக் கட்சியில்தான் நான் இணைவேன்..” என்றார்.
“எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கியுள்ள கட்சியில் சேர்வீர்களா..?” என்று கேட்டதற்கு, “அவர் எல்லாருக்கும் அப்பாதான். எனக்கும் அப்பாதான். நான் அவருடைய இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன்.
இப்போது அவர்ஆரம்பித்திருக்கும் கட்சியினால் அவருடைய வீட்டிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவியும், மகன் விஜய்யும் அதை எதிர்த்திருக்கிறார்கள்.
முதலில் எஸ்.ஏ.சி. தன் வீட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்ய வேண்டும். பின்பு கட்சி வேலைகளை அவர் பார்ப்பது அவருக்கும் நல்லது.. எல்லாருக்கும் நல்லது..” என்று அட்வைஸ் செய்தார்.
The post “எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் appeared first on Touring Talkies.
]]>The post “யார் விலகினாலும் கட்சியை நான் தொடர்ந்து நடத்துவேன்..” – எஸ்.ஏ.சந்திரசேகரின் அதிரடி பதில்..! appeared first on Touring Talkies.
]]>தன்னுடைய பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி துவங்கிய செய்தியறிந்ததும் அவசரம், அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய், “இந்தக் கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம்..” என்று சொல்லியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகரும், தன் கணவரான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டதாகச் சொல்லி தான் அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டதாக பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்.
அடுத்து அந்தக் கட்சியின் தலைவராக இருந்த பத்மநாபனும் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், “யாருமே இல்லாத கட்சியை இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்..” என்று எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டபோது, “கட்சியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சி’யை நான் தொடர்ந்து நடத்துவேன்…” என்று அதிரடியாய் கூறினார்.
சென்னை வடபழனியில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் “உங்கள் கட்சியிலிருந்து தலைவரே பதவி விலகியது ஏன்..?” என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது “நான் உருவாக்கிய கட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானே கட்சியை தொடர்ந்து நடத்துவேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது இது போன்ற மிரட்டல்கள் வருவது சகஜம்தான்.. என்று பதிலளித்தார்.
மேலும், “நான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதுமே இருந்ததில்லை. வாழ்க்கையோ, சினிமாவோ எதுவாக இருந்தாலும் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பதைத்தான் நான் விரும்புகிறேன்..” என்றும் அவர் தெரிவித்தார்.
The post “யார் விலகினாலும் கட்சியை நான் தொடர்ந்து நடத்துவேன்..” – எஸ்.ஏ.சந்திரசேகரின் அதிரடி பதில்..! appeared first on Touring Talkies.
]]>