The post விஜய்யை வைத்து அரசியல் படம் செய்ய ஆசைப்பட்ட எஸ். ஏ. சந்திரசேகர் – Director Viji | Part – 6 | CWC appeared first on Touring Talkies.
]]>The post விடாமுயற்சியை விடும் முயற்சி இல்லை…மீண்டும் துவங்குகிறதா ஷூட்டிங்? appeared first on Touring Talkies.
]]>மேலும், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பிரியா பவானி ஷங்கர் போன்ற நடிகைகளும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்,அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.
அஜித்குமார் துணிச்சலாக டூப் இல்லாமல் நடித்த வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பின்னர், இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென காலநிலை மாற்றத்தின் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.பின்னர் மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டது ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் தள்ளிபோய்க்கொண்டு இருக்கிறது.இந்நிலையில், ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் அஜித்.
இதனால், விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.இப்போது, விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மீண்டும் தொடங்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ஆம் தேதி விடாமுயற்சி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post விடாமுயற்சியை விடும் முயற்சி இல்லை…மீண்டும் துவங்குகிறதா ஷூட்டிங்? appeared first on Touring Talkies.
]]>The post ஹைதராபாத்தில் தொடங்கிய குட் பேட் அக்லி படப்படிப்பு! appeared first on Touring Talkies.
]]>அதற்கு பின்னர் இதுவரை அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் இப்படத்தில் அஜித்தின் ஸ்டண்ட் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தி குட் பேட் அக்லி என்ற அவரது மற்றொரு படத்தில் கமிட்டானார்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் தயாரித்துள்ளது.விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் தி குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஆனால், இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post ஹைதராபாத்தில் தொடங்கிய குட் பேட் அக்லி படப்படிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post அங்க சொதப்புனது மாதிரி இங்க சொதப்பாதீங்க! மகிழ் திருமேனிக்கு லைக்கா போட்ட கண்டிஷன்? appeared first on Touring Talkies.
]]>விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானிலிருந்து நடத்தப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ஷூட்டிங் தடைப்பட்டது. ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதேசமயம் படப்படிப்பு தள்ளி போக மற்றொரு காரணம் அதிக செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் எனவும் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது விடாமுயற்சி படக்குழு சென்னையில் இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் துனுஷியாவில் நடக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.அஜர்பைஜானில் சொதப்பியது போல் துனிஷியாவில் சொதப்பக்கூடாது என்று மகிழ் திருமேனியிடம் லைகா தரப்பு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post அங்க சொதப்புனது மாதிரி இங்க சொதப்பாதீங்க! மகிழ் திருமேனிக்கு லைக்கா போட்ட கண்டிஷன்? appeared first on Touring Talkies.
]]>The post நண்பரின் திருமணத்திற்காக ஷூட்டிங்-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு வந்த விஜய்… விஷ்ணு கமல் பகிர்ந்த சுவாரஸ்யம்! appeared first on Touring Talkies.
]]>போன வருஷம் தனுஷோட ‘வட சென்னை’ படத்தை நாங்கதான் ரீ-ரிலீஸ் பண்ணி தொடங்கி வெச்சோம்.அதை எல்லா தியேட்டர்லேயும் ஃபாலோ அப் பன்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 2004-ஆம் ஆண்டு ’கில்லி’ படம் ரிலீஸ் ஆனப்போ, கமலா தியேட்டரில் ரிலீஸ் ஆகல. அப்போல்லாம், ஒரு ஏரியாவுக்கு ஒரு தியேட்டர்ல மட்டும்தான் ரிலீஸ் பண்ணனும்னு ரூல்ஸ் இருந்துச்சு. அதனால, உதயம் தியேட்டர்லதான் ’கில்லி’ ரிலீஸ் ஆச்சு. அப்போல்லாம், நான் நாலு வயசு குழந்தை. எங்க தியேட்டர்ல கில்லி ரிலீஸ் செய்யமுடியாதது ரொம்பவே வருத்தம். ஆனா, அப்போ விட்டதை இப்போ பிடிச்சுட்டோமுனு நினைக்கிறோம்.
அதே மாதிரி ஏப்ரல் 20-ஆம் தேதி ’கில்லி’ ரீ-ரிலீஸ் பண்ணினோம். அப்போதிலிருந்து, இப்போவரை ஹவுஸ்ஃபுல்தான். இந்த 17 நாட்களும் தியேட்டரில் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். இன்னும் ஒரு வாரம் போச்சுன்னா, ’லியோ’ சாதனையே முறியடிச்சுடும். அதாவது, கில்லி இதுவரைக்கும் 52,000 டிக்கெட்ஸ் வித்திருக்கு. இன்னும் ஒரு வாரம் ஆச்சுன்னா ’லியோ’ டிக்கெட்ஸ் விற்பனை சாதனையையும் முறியடிச்சிடும். 50 நாட்களுக்கு மேல கில்லி ஓடும்னு நினைக்கிறேன். தியேட்டரில் ரசிகர்கள் பாடல்களை ஒன்ஸ்மோர் கேட்குறாங்க. அதனால, ஒன்ஸ்மோரும் போடுறோம் என்றார்.
நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து பேசிய அவர் அந்த சந்திப்பு 15 நிமிடங்கள் இருந்துச்சு. போட்டோகிராஃபர் இருந்தாங்க. அவங்க இப்போ வேணாம்னு சொல்லிட்டு, என்னை மட்டும் தனியா பேசணும்னு கூப்பிட்டு போயி பேசினாரு. எங்கப்பாவும் விஜய் சாரும் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேரும் லயோலா காலேஜ்ல ஒண்ணா படிச்சாங்க. அப்பா அம்மா திருமணத்தப்போ விஜய் சாரு செல்வா பட ஷூட்டிங்குல இருந்திருக்காரு. அப்பா திருமணத்துக்காக செல்வா பட ஷூட்டிங் க்ளைமாக்ஸைக்கூட ஒத்தி வெச்சுட்டு ஓடி வந்து அப்பாவுக்கு துணை மாப்பிள்ளையா இருந்திருக்காரு. அந்தளவுக்கு ஃபரெண்ட்ஷிப். இதையெல்லாம் நான் விஜய் சார்க்கிட்ட சொன்னப்போ, எல்லாம் ஞாபகம் இருக்குன்னு சொல்லி அப்பா, அம்மாவை எப்படி இருக்காங்கனு நலம் விசாரிச்சாரு என்று கூறியுள்ளார்.
விஜய்யோட கில்லி ரீ-ரிலீஸ் எப்படி போயிட்டிருக்குன்னு கேட்டாரு. புது படங்கள்ல படத்துல ’லியோ’ வசூல் சாதனை படைச்சது. இப்போ, ’கில்லி’ வசூல் சாதனை படைச்சு பிரமாதமா போய்க்கிட்டிருக்குன்னு சொன்னேன். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இன்னும் கொஞ்சம் பர்சனலா பேசிக்கிட்டிருந்தோம். அந்த சந்திப்பை என்னால மறக்கவே முடியாது. பார்க்கணும்னு சொன்னதுமே அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரு. விஜய் சாரோட படங்களில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடியது ‘பூவே உனக்காக’த்தான். அடுத்து, ’குஷி’, ’சச்சின்’, ’துப்பாக்கி’ படங்களை ரீ ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். ’கில்லி’தான் ஆல்டைம் ஃபேவரைட் என்பவரிடம், அஜித் சாரை மீட் பண்ண ஐடியா இருக்க என்று கேட்டபோது
அஜித் சாரை மீட் பன்றதுக்கு அபார்ட்மெண்ட் கேட்டிருக்கேன். ’விடாமுயற்சி’ ஷூட்டிங் மற்றும் குட் பேட் அக்லிக்கு பிசியா இருக்காரு. அவர் டைம் கொடுத்துடுவாருன்னு நம்பிக்கை இருக்கு. அவர் டைம் கொடுத்ததும் உடனே மீட் பண்ணிடுவேன். அஜித் சார் பிறந்தநாளுக்காக ’தீனா’ ரிலீஸ் பண்ணினோம். மூணு ஷோ போட்டோம். ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துட்டாங்க. அஜித் சார் படங்களில் என்னோட ஃபேவரைட் ’மங்காத்தா’. அடுத்து, ’மங்காத்தா’வை ரீ-ரிலீஸ் பண்ணணும்னு ரசிகர்கள் கேட்குறாங்க. அடுத்து அதுதான் ரீ ரிலீஸ்” என்பவரிடம் உங்களோட ஃபேவரைட் ஹீரோ யாரு? என்று கேட்டோம்.
நான் ரஜினி சாரோட பயங்கரமான ஃபேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிதான்.” என்று அப்போட்டியில் கூறியுள்ளார்.
The post நண்பரின் திருமணத்திற்காக ஷூட்டிங்-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு வந்த விஜய்… விஷ்ணு கமல் பகிர்ந்த சுவாரஸ்யம்! appeared first on Touring Talkies.
]]>The post ஆயிரத்தில் ஒருவன் போல் கதையை அஜித்திற்கு தயார் செய்த பில்லா பட இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில், அஜித்துக்கு ஒரு வரலாற்று கதையை சொன்னதாகவும், இந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் கதையை போன்று உருவாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இது நடக்கவில்லை என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா ரசிகர்கள் அஜித்தை புதிய தோற்றங்களில் காண்பதை அதிகமாக விரும்பினாலும், வரலாற்றுப் பின்னணியில் இவரை காண அவர்கள் விரும்புவார்களா என்பதும், இது அவருக்கு பொருந்துமா என்பதும் எனக்கு தெளிவாக இல்லை என கூறியுள்ளார்.
மேலும், விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை த்ரிஷாவை முன்னணி பாத்திரங்களாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் எனவும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது என அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
The post ஆயிரத்தில் ஒருவன் போல் கதையை அஜித்திற்கு தயார் செய்த பில்லா பட இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா என்கிட்ட பேசவே இல்லை… நான் ஒதுக்கப்பட்டேன்… பில்லா படம் குறித்து மனம் திறந்த நமீதா! appeared first on Touring Talkies.
]]>அதில், பில்லா படத்தில் நானும் நயன்தாராவும் சேர்ந்துதான் ஒன்றாக நடித்து இருந்தாலும் நயன்தாராவுடன் நான் பேசியது குறைவுதான் என்றும் மற்ற நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் யாரிடமும் பேசுவதில்லை என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, எனது காட்சிகளில் நான் நடிப்பேன். அவர் காட்சியில் அவர் நடிப்பார் அவ்வளவு தான்.நாங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த காட்சியில் கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை.பேசாமல் இருப்பது தான் நமீதா அணுகுமுறை என்று அனைவரும் நினைத்தார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் அப்படி இல்லை உண்மையில் நான் அங்கே ஒதுக்கப்பட்டு இருந்தேன் என்றார்.இப்படியிருந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் புத்தகங்களைப் படித்து கொண்டு இருப்பேன் என்றுள்ளார்.
நான் நடித்த நிறைய காட்சிகள் பில்லா படத்தில் இடம் பெறவே இல்லை .அப்படத்தை பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.பில்லா படத்தின் ஒரு காட்சியில் பாலத்தின் மேல் அஜித் நின்று கொண்டு இருப்பார்.அந்த ஒரு காட்சி படத்திற்கு முக்கியமான காட்சியாகும். அந்த காட்சியில் எனக்கு எந்த வசனமும் இல்லை உங்கள் கண்கள் தான் பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார் என்று நமீதா அந்த பேட்டியில் பில்லா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நமீதா.
The post நயன்தாரா என்கிட்ட பேசவே இல்லை… நான் ஒதுக்கப்பட்டேன்… பில்லா படம் குறித்து மனம் திறந்த நமீதா! appeared first on Touring Talkies.
]]>The post ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான கதை… பாடல் கொடுக்காமல் தாமதம் செய்த யுவன்… appeared first on Touring Talkies.
]]>பில்லா படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்தது அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “மை நேம் இஸ் பில்லா” பாடல் தான். ஆனால் அந்த பாடல் உருவான விதம் தான் பலரையும் வியக்க வைத்தது என்றால் மிகையாகாது. அதாவது நாளைக்கு பாடலுக்கான படபிடிப்பு என்றால் அதற்கான செட்டெல்லாம் போட்டு தயாராக இருந்த நிலையில் யுவன் இந்த பாடலை கொடுக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்.
இதைக் கண்டு விஷ்ணுவர்தன் பாடல் எங்கே என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார்.அதற்கு யுவன் “இதோ வந்துடும்” என்று சொல்லியே கடைசி வரை பாடலை கொடுக்கவே இல்லையாம். அதனால் அந்த பாடல் இல்லாமலேயே அந்த பாடல் காட்சியை விஷ்ணு படமாக்கியுள்ளார்.இதற்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் எப்படி மியூசிக் இல்லாமல் டான்ஸ் ஆட வைப்பது என்று கேட்டு தயங்கியிருக்கிறார்.
விஷ்ணுவர்தன் அஜித்துக்காக யோசித்த ஸ்டைலை மியூசிக் இல்லாமல் அஜித்தை வைத்து எடுத்து விட்டாராம். அதற்குப் பிறகு யுவன் துண்டு துண்டாக பாட்டை அனுப்ப இதை பார்த்த அஜித் என்ன விஷ்ணு இது என்று கேட்டிருக்கிறார், அதற்கு விஷ்ணு சார் இன்னும் பாடல் ரெடி ஆகல என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அஜித் சரி ஓகே பரவாயில்லை என்று சொல்ல இப்படியே துண்டு துண்டாக அந்த பாடல் காட்சியை எடுத்து படமாக்கினார்களாம். ஆனால் திரையில் பார்க்கும்போதுதான் அந்த பாடலுக்கு எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி கொண்டுள்ளார் விஷ்ணுவர்தன்.
The post ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான கதை… பாடல் கொடுக்காமல் தாமதம் செய்த யுவன்… appeared first on Touring Talkies.
]]>The post மூவ் வேடத்தில் மாஸ் காட்ட போகும் அஜித்… எந்தெந்த வேடங்கள் தெரியுமா? #GoodBadUgly appeared first on Touring Talkies.
]]>மேலும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன்னர் வரலாறு படத்தில் அஜித் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருப்பார்.இந்நிலையில் பல காலங்களுக்கு பின்னர் அஜித் மீண்டும் இப்படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார்.இந்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு கெட்டப்புகள் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்த 3 வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கவுள்ள நிலையில் இதில் ஒரு கெட்டப்பில் அவர் யூத் பாய்யாக நடிக்க உள்ளதாகவும் மற்றொரு கெட்டப்பில் வரலாறு படத்தில் தோன்றுவது போல குடுமி வைத்தார் போல் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாம் சில காலமாக நடிகர் அஜித்-ஐ சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.அவரும் அதையே விரும்பும் நிலையில் அவரை மிகவும் கன்வின்ஸ் செய்து இளமை தோற்றத்தில் நடிக்க வைக்க தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. நடிகர் அஜித்தை 3 கெட்டபுகளிலும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post மூவ் வேடத்தில் மாஸ் காட்ட போகும் அஜித்… எந்தெந்த வேடங்கள் தெரியுமா? #GoodBadUgly appeared first on Touring Talkies.
]]>The post ஒற்றை போஸ்டாரால் கடுப்பான ரசிகர்கள்! அப்டேட் கேட்ட ரசிகர்களின் விடா முயற்சி வீண் முயற்சி ஆனது தான் மிச்சம்… appeared first on Touring Talkies.
]]>ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என மற்ற நடிகர்கள் பலரும் தங்கள் பிறந்தநாளில் புதிய படங்களின் அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். ஆனால், அஜித்தின் பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் இல்லாமல் போனதால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அஜித் குமாரின் பல படங்களின் ஸ்டில்களை ஒன்றாக இணைத்து ஹேப்பி பர்த்டே அஜித்குமார் என்கிற போஸ்டரை மட்டும் வெளியிட்டு அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாக வேண்டும் என லைகா நிறுவனம் வாழ்த்தியுள்ளது. ஆனால், விடாமுயற்சி படத்தின் எந்த ஒரு பிரத்யேக போஸ்டரையும் விடவில்லையே லைகா நிறுவனம் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் தீட்டி தீர்த்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் வெளியிடாமல் சமீபத்தில் சுரேஷ் சந்திரா அஜித் குமார் விபத்து ஸ்டன்ட் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். சுமார் 4 மாதங்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு அஜித் குமார் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.மே 1ம் தேதி லைகா நிறுவனம் தாறுமாறான அப்டேட் வெளியிடும் என காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் கடுப்பானது தான் மிச்சம்.
The post ஒற்றை போஸ்டாரால் கடுப்பான ரசிகர்கள்! அப்டேட் கேட்ட ரசிகர்களின் விடா முயற்சி வீண் முயற்சி ஆனது தான் மிச்சம்… appeared first on Touring Talkies.
]]>