The post வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ’தளபதி68’ 2024-ம் ஆண்டு வெளியாகும்!. appeared first on Touring Talkies.
]]>தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
மிக முக்கியமான வேடத்தில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் மோகன் முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கிறார்். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், சினேகா மற்றும் லைலா சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.
படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பு: எஸ். எம். வெங்கட் மாணிக்கம். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும் என தேரிவித்துள்ளனர்.
The post வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ’தளபதி68’ 2024-ம் ஆண்டு வெளியாகும்!. appeared first on Touring Talkies.
]]>The post ‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிக்கும் ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படம் ‘ஏவாள்’ appeared first on Touring Talkies.
]]>RA1 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்கும் இந்த ‘ஏவாள்’ படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல்.ரவி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரத நாட்டியக் கலைஞர். பெங்காலியில் சில படங்களிலும், தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.
இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார். இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன், மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கிருஷ்ணா பி.எஸ், இசை – ரெஜிமோன், படத் தொகுப்பு – அனந்து எஸ்.விஜய், திரைக்கதை – ரஞ்சித் ராகவன், வசனம், பாடல்கள் – முருகன் மந்திரம், இணைத் தயாரிப்பு மது ஜி, மற்றும் எஸ்.எஸ்.பிரபு, இயக்கம் – ஜித்தேஷ் கருணாகரன்.
தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது. அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன். இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன. இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம்தான் இந்த ‘ஏவாள்’.
இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு, குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில் நுட்பத்தில் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன.
படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன. படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மோதும் காட்சிகள் பரபரப்பை ஊட்டும்.
இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள இந்த ‘ஏவாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளது.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.
The post ‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிக்கும் ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படம் ‘ஏவாள்’ appeared first on Touring Talkies.
]]>The post ‘கோமாளி’ இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார் appeared first on Touring Talkies.
]]>இந்தக் ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடைய படங்களை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், எதுவுமே இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் உறுதியாகியுள்ளது. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. நாயகனாகவே நடிக்கிறார் என்பதுதான் சுவையான செய்தி. இந்தப் படத்தை AGS Entertainment நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி பிரதர்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
The post ‘கோமாளி’ இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார் appeared first on Touring Talkies.
]]>The post ‘பிகில்’ படத்திற்காக விஜய் போட்ட பல கெட்டப்புகள் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தில் ‘மைக்கேல்’, ‘ராயப்பன்’ என்று இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய்.
இதில் இளைய விஜய்யின் தந்தை ராயப்பனாக நடிக்க விஜய் பல கெட்டப்புகளை போட்டுப் பார்த்தாராம். இறுதியாக அவர் தேர்ந்தெடுத்ததுதான், இப்போது படத்தில் இடம் பெற்றுள்ள கெட்டப்.
“தான் ஏற்று நடிக்கின்ற பாத்திரங்களுக்காக விஜய் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என்பதை அருகில் இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது…” என்கிறார் ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகரான ஆனந்தராஜ்.
The post ‘பிகில்’ படத்திற்காக விஜய் போட்ட பல கெட்டப்புகள் appeared first on Touring Talkies.
]]>The post AGS நிறுவனம் தயாரிப்புத் தொழிலை நிறுத்துகிறதா..? appeared first on Touring Talkies.
]]>இந்தக் கொரோனா லாக் டவுனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமன்றி நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சோதனையைக் கொடுத்திருக்கிறது.
திரைப்படத் துறையே நசிந்து போய் கிடக்கும் இந்தச் சூழலில் ஏற்கெனவே தயாரிப்பில் இருந்த திரைப்படங்கள் மட்டுமே இப்போது படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புதிதாக திரைப்படங்களுக்கு பூஜை போடுவது அறவே நின்றுவிட்டது.
ஏனெனில், புதிய தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்ய வழக்கமான பைனான்ஸியர்கள் தற்போது மறுத்து வருகிறார்கள். ஏற்கெனவே 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகை தமிழ்த் திரையுலகத்தில் தற்போது புழங்கி வருகிறது. இத்தொகையை அவர்கள் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் மீண்டும் கடன் தொகைகள் திரையுலகத்திற்குள் இறக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நேரத்தில் தமிழ்த் திரைப்பட துறையில் புகழ் பெற்ற, மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது தயாரிப்புத் தொழிலை நிறுத்தியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
2006-ம் ஆண்டில் ‘திருட்டுப் பயலே’ என்ற படத்தில் இருந்து தனது திரைப்பட தயாரிப்புத் தொழிலைத் துவங்கிய ஏ.ஜி.எஸ். நிறுவனம் சென்ற வருடம் தயாரித்த ‘பிகில்’ படம்வரையிலும் 21 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. 10 திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளது. சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் நடத்தி வந்தது.
இந்த நிலையில் இந்தக் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்குதலினால் கடந்த 6 மாத காலமாக தியேட்டர்கள் மூடப்பட்டு திரைப்பட தொழில் முடக்கப்பட்டதினால் மிகப் பெரிய நஷ்டத்தைச் சம்பாதித்துள்ளது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.
மேலும், அந்த நிறுவனம் தயாரித்த திரைப்படங்களின் மூலமாகவும் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை. கடைசியாக அந்த நிறுவனம் தயாரித்த ‘பிகில்’ படத்தின் மூலம் என்ன கிடைத்தது என்பது பற்றி அவர்களுக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை. அப்படியொரு அதிர்ச்சியான ரிசல்ட் ‘பிகில்’ படத்தின் மூலம் அந்த நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்தச் சூழலில் இனிமேல் தயாரிப்பு என்ற பெயரில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்து அதனை அதே அளவுக்கு திரும்ப எடுப்பது நிச்சயமாக சூதாட்டத்திற்கு ஒப்பானது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டிருக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தங்களது தயாரிப்புப் பிரிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post AGS நிறுவனம் தயாரிப்புத் தொழிலை நிறுத்துகிறதா..? appeared first on Touring Talkies.
]]>