The post ஓங்கி அறைந்த சில்க்! ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>அதில், “நானும் சில்க் ஸ்மிதாவும், ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம். அப்போது,சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நான், சில்க் ஸ்மிதாவிடம், ‘அக்கா, எப்படி அடிப்பீங்க, மெதுவா அடிப்பீங்களா’ என்று கேட்டேன். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘அது ஷாட்ல வந்துடும்.. அது ஒன்னும் டென்சன் இல்ல..’ என்றார்.
ஆனால், அந்த ஷாட்டின் போது இயக்குனர் ஆக்க்ஷன் சொன்னதும் சில்க் ஸ்மிதா, என் கன்னத்தில் ஓங்கி பளார் என்று உண்மையாகவே அடித்துவிட்டார். வலி தாங்காமல், நான் அழுதே விட்டேன். அப்படி ஒரு அடி!
பலர் முன்னிலையிலும் சில்க் ஸ்மிதா என்னை அடித்தது தனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதில் இருந்து எனக்கு சில்க் ஸ்மிதா என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி எனக்கு புரிகிறது அவரை போல ஒரு அழகி கிடையாது, மிகவும் திறமைசாலி” என்று ஷகீலா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
The post ஓங்கி அறைந்த சில்க்! ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய்யின் கோட் படத்தில் சீரியல் நடிகை! appeared first on Touring Talkies.
]]>அதில் ஒருவர் மூத்த மருமகள் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கனிகா. இவர் அஜித், மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து அசத்தியுள்ளார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய்யின் கோட் படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இதுவரை இந்த படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை கனிகாவும் இந்த படத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
The post விஜய்யின் கோட் படத்தில் சீரியல் நடிகை! appeared first on Touring Talkies.
]]>The post த்ரிஷா இல்லேனா நயன்தாரா?; 2023ல் டாப் ஹீரோயின் யார்? appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர் தெரவித்ததாவது:
கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நாயகிகளும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். முன்பெல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்குவதே பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கோடிகளில் குவித்து வருகின்றனர். அந்த வகையில் 2023ம் ஆண்டும் நயன்தாரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாஸ் காட்டி வருகிறார்.
ஐயா படத்தில் அறிமுகமான நயன், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகிவிட்டார். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, சூர்யா என டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் நயன் தான் மோஸ்ட் வான்டட் நாயகி. கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா, ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். சமீப காலங்களாக நயனின் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லையென்றாலும் சம்பள விஷயத்தில் அவர் தான் டாப்பில் உள்ளார்.
இந்த லிஸ்ட்டில் நயனுக்கு டஃப் கொடுக்கும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்தார் த்ரிஷா. அதன்பின் விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என நயன்தாரா விட்ட இடத்தை விரட்டிப் பிடித்துள்ளார் த்ரிஷா. முக்கியமாக சமீப காலங்களில் த்ரிஷா நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதன்படி, அவர் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
The post த்ரிஷா இல்லேனா நயன்தாரா?; 2023ல் டாப் ஹீரோயின் யார்? appeared first on Touring Talkies.
]]>The post “ மொழிக்குள் சிக்கமாட்டேன்!” : மிருணாள் தாக்குர் appeared first on Touring Talkies.
]]>இதுபற்றி மிருணாள் தாக்குர் கூறும்போது, “எனக்கு அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க ஆசை. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளோ, மொழிக்குள்ளோ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அனைத்து மொழி சினிமாவும் சிறந்ததுதான். கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களின் பன்முகத் தன்மைதான் முக்கியமானது.
பார்வையாளர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். நடிகர்களை புதிய, வித்தியாசமான வேடங்களில் பார்க்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஒரு நடிகையாக, என் இருப்புக்கான அடிப்படை அதுதான். ரசிகர்கள் விரும்பும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிப்பது எப்போதும் சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
The post “ மொழிக்குள் சிக்கமாட்டேன்!” : மிருணாள் தாக்குர் appeared first on Touring Talkies.
]]>The post மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் ஆல்பம் appeared first on Touring Talkies.
]]>The post மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் ஆல்பம் appeared first on Touring Talkies.
]]>The post உருகி உருகி காதலித்தேன்.. ஆனால்!: டாப்சி ஓப்பன் டாக்! appeared first on Touring Talkies.
]]>பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, பேபி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அடுத்து அவர் நடித்த பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை பகிர்ந்திருக்கிறார். “நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது 10ஆம் வகுப்பு படிக்கும் ஒருவரை காதலித்தேன். உருகி உருகி அந்தக் காதலை செய்தேன். அந்த சமயத்தில் நினைத்தபடி பேசுவதற்கு இப்போது மாதிரி செல்ஃபோன் எல்லாம் கிடையாது. தெரு முனையில் இருக்கும் டெலிஃபோன் பூத்துக்கு சென்றுதான் பேச வேண்டும்.
முதலில் அவருக்கும் என் மீது ஆர்வம் இருந்தது. பிறகு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி எனது காதலை உதறிவிட்டார். என்னையும் படிப்பில் கவனம் செலுத்த சொன்னார். அதனால் அந்தக் காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அந்த காதல் தோல்வியால் நான் ரொம்பவே அழுதுவிட்டேன். அந்த நினைவுகளில் இருந்து நான் மீண்டு வருவதற்கு பல நாட்கள் ஆகிவிட்டன” என்றார்
The post உருகி உருகி காதலித்தேன்.. ஆனால்!: டாப்சி ஓப்பன் டாக்! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை தற்கொலை விவகாரம்: கைது செய்யப்பட்டார் புஷ்ப பட நடிகர் appeared first on Touring Talkies.
]]>
இவரும் அந்த துணை நடிகையும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த துணை நடிகை வேறோரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்துள்ளார். அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் பொழுது ஜெகதீஸ் அதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் கசிய விடுவேன் என துணை நடிகையை மிரட்டி வந்துள்ளார். இதன் அழுத்தம் காரணமாகவே துணை நடிகை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நடிகை தற்கொலை விவகாரம்: கைது செய்யப்பட்டார் புஷ்ப பட நடிகர் appeared first on Touring Talkies.
]]>The post பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா அதன் மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை அவர் தத்தெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
The post பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>The post ’புஷ்பா 2’அல்லு அர்ஜுன் சம்பளம் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த வருமானத்தில் 33 சதவிகிதம் சம்பளமாக வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்றும் அதனால் அல்லு அர்ஜுனுக்கு ரூ. 330 கோடி சம்பளம் கிடைக்கும் என்று தெலுங்கு சினிமாவில் கூறி வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. இது உண்மை என்றால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பார் என்கிறார்கள்.
The post ’புஷ்பா 2’அல்லு அர்ஜுன் சம்பளம் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post “வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும்” நடிகை வசுந்தரா appeared first on Touring Talkies.
]]>தவகையில் இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் மாடர்ன் லவ் சென்னை என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ள வசுந்தரா மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது “நான் எதிர்பார்ப்பது சவாலான கதாபாத்திரங்களைத்தான். அதில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றால் வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது முதலில் நமக்கே போர் அடிக்காது. நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பும் இருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. நடிகை ரம்யா கிருஷ்ணன் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடிப்பவர். அவருடைய ரசிகை நான்.. ஒரு பாவமான, கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்கலாம் என்றார்.
பப்கோவா என்கிற வெப்சீரிஸை இயக்கிய லட்சுமி நாராயணன் ராஜு புதிய படத்தை இயக்குகிறார். அதில் நான் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறேன். அதை பற்றிய தகவல் விரைவில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும். இந்த வருடம் நான் நடித்த மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த வருடம் நிச்சயம் இரண்டு படம் வெளியாகும்” என்கிறார் வசுந்தரா.
The post “வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும்” நடிகை வசுந்தரா appeared first on Touring Talkies.
]]>