Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actress rekha – Touring Talkies https://touringtalkies.co Sat, 28 Oct 2023 02:52:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actress rekha – Touring Talkies https://touringtalkies.co 32 32 உயிருள்ள வரை நடிக்க வேண்டும்:நடிகை ரேகா நெகிழ்ச்சி..! https://touringtalkies.co/should-act-till-alive-actress-rekha/ Sat, 28 Oct 2023 02:49:11 +0000 https://touringtalkies.co/?p=37300 ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா.“நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரேகா நடித்திருக்கும் திரைப்படம் மிரியம்மா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில்  நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். […]

The post உயிருள்ள வரை நடிக்க வேண்டும்:நடிகை ரேகா நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா.“நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரேகா நடித்திருக்கும் திரைப்படம் மிரியம்மா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில்  நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அது போல் என் உயிரினும் மேலான என் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன்.

செல்போனில் இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்..  பின்னர் நான் அவனை “டேய் இங்க வாடா” என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகி விட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது.

நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை.  என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.  நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்ஸியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்..  நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்…  உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்றார்.

The post உயிருள்ள வரை நடிக்க வேண்டும்:நடிகை ரேகா நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
அடேயப்பா நடிகை ரேகாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? https://touringtalkies.co/actress-rekha-property-worth-rs332/ Sun, 08 Oct 2023 03:57:21 +0000 https://touringtalkies.co/?p=36942 தென்னிந்திய மொழிப் படங்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ரேகா. நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது  நடிப்பதில்லை. இப்படி திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர், தன் வீட்டு தோட்டத்தில்  ஏராளமான மரங்கள் மற்றும் செடிகளை வளர்க்கிறார். பெரும்பாலான நேரத்தை இயற்கையோடு திறந்த வெளியில் இந்த மரங்களுடன்தான் கழிக்கிறார்.  அதோடு தினமும் இரு வேளை யோகா செய்ய தவறுவதில்லை. தனிமையில் வாழ்ந்தாலும் ரேகாவிடம் ஏராளமான ஆடம்பர கார்கள் இருக்கின்றன. ரூ.2.17 கோடி மதிப்பிலான […]

The post அடேயப்பா நடிகை ரேகாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய மொழிப் படங்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ரேகா. நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது  நடிப்பதில்லை.

இப்படி திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர், தன் வீட்டு தோட்டத்தில்  ஏராளமான மரங்கள் மற்றும் செடிகளை வளர்க்கிறார். பெரும்பாலான நேரத்தை இயற்கையோடு திறந்த வெளியில் இந்த மரங்களுடன்தான் கழிக்கிறார்.  அதோடு தினமும் இரு வேளை யோகா செய்ய தவறுவதில்லை.

தனிமையில் வாழ்ந்தாலும் ரேகாவிடம் ஏராளமான ஆடம்பர கார்கள் இருக்கின்றன. ரூ.2.17 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார், ரூ.1.63 கோடி மதிப்பிலான ஆடி ஏ8 ரக கார், ஒரு ஹோண்டா சிட்டி, பி.எம்.டபிள்யூ எலக்ட்ரிக் கார், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற ஆடம்பர கார்கள் இருக்கின்றன.

அதோடு அவர் பல கோடி மதிப்புள்ள பட்டுப்புடவைகள் வைத்திருக்கிறார். அவரது வீடு மட்டும் 100 கோடி இருக்கும்!

மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் உள்ளதாம் அவருக்கு.

திரையுலகை விட்டு விலகினாலும், பேஷன் ஷோ அல்லது வர்த்தக நிறுவனங்களின் புரொமோனஷல் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் ஐந்து முதல் ஆறு கோடி வரை கட்டணமாக வசூலிக்கிறார்.

 

 

 

The post அடேயப்பா நடிகை ரேகாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? appeared first on Touring Talkies.

]]>
1980-களின் நடிகர், நடிகைகள் கூட்டம் – “எனக்கு அழைப்பில்லையே” – நடிகை ரேகாவின் பதில்..! https://touringtalkies.co/actress-rekha-answer-about-1980-actors-reunion-meeting/ Mon, 14 Dec 2020 04:15:00 +0000 https://touringtalkies.co/?p=11008 1980-களில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்த திரை நட்சத்திரங்களில் ஒரு சிலர் வருடாவருடம் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள். தங்களுக்குள்ளேயே கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. நடிகை சுஹாசினியும், நடிகை லிஸியும் முன்னின்று நடத்தும் இந்தச் சந்திப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இன்றுவரையிலும் நடித்து வரும் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள். நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி […]

The post 1980-களின் நடிகர், நடிகைகள் கூட்டம் – “எனக்கு அழைப்பில்லையே” – நடிகை ரேகாவின் பதில்..! appeared first on Touring Talkies.

]]>
1980-களில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்த திரை நட்சத்திரங்களில் ஒரு சிலர் வருடாவருடம் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள். தங்களுக்குள்ளேயே கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.

நடிகை சுஹாசினியும், நடிகை லிஸியும் முன்னின்று நடத்தும் இந்தச் சந்திப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இன்றுவரையிலும் நடித்து வரும் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள்.

நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, கே.பாக்யராஜ், பானுசந்தர், சுமன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான், ராஜ்குமார் சேதுபதி, நரேஷ், ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராப்.. மற்றும்

நடிகைகள் லிஸி, குஷ்பூ, சுஹாசினி, சுமலதா, ராதிகா, சரிதா, ராதா, அம்பிகா, நதியா, பூர்ணிமா பாக்யராஜ், மேனகா, பார்வதி ஜெயராம், பூனம் தில்லான், ரேவதி, ஷோபனா ஆகியோர் வருடா வருடம் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அதே 1980-களில் தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய ஹீரோயினாக இருந்த நடிகை ரேகா இதுவரையிலும் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நானும் 1980-களில்தான் நடிக்க வந்தேன். 80-கள் நட்சத்திரக் கூட்டத்தில் இப்போது இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுடன் நானும் பல்வேறு மொழிகளில் இணைந்து நடித்திருக்கிறேன்.

ஆனால், என்னை அவங்க கூப்பிடலை. ஏன் கூப்பிடலைன்னு எனக்குத் தெரியாது. கூப்பிட்டிருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேன்.

ஆனால், ராதிகா மேடம், ‘1980 நடிகர், நடிகைகளின் சங்கமம்’ அப்படீன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது நானும் கலந்து கொண்டேன். என்னுடன் இன்னும் நிறைய நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டார்கள்.

பட், அழைப்பு இல்லாததால்தான் நான் 80-களின் நட்சத்திரங்களின் குழுவில் நான் இல்லை..” என்று சொல்லியிருக்கிறார்.

The post 1980-களின் நடிகர், நடிகைகள் கூட்டம் – “எனக்கு அழைப்பில்லையே” – நடிகை ரேகாவின் பதில்..! appeared first on Touring Talkies.

]]>
பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..? https://touringtalkies.co/bigboss-season-4-first-evicted-person-was-actress-rekha/ Sun, 18 Oct 2020 08:10:48 +0000 https://touringtalkies.co/?p=8970 விஜய் டிவியின் டாப் மோஸ்ட் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா, அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, சம்யுக்தா, அனிதா சம்பத், சுரேஷ், ரியோ, சோம்சேகர், ஆஜீத், வேல்முருகன், பாலா, நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 16 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி நபராக வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளினியுமான அர்ச்சனா உள்ளே வந்தார். ஒவ்வொரு வாரமும் […]

The post பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..? appeared first on Touring Talkies.

]]>

விஜய் டிவியின் டாப் மோஸ்ட் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா, அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, சம்யுக்தா, அனிதா சம்பத், சுரேஷ், ரியோ, சோம்சேகர், ஆஜீத், வேல்முருகன், பாலா, நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 16 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி நபராக வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளினியுமான அர்ச்சனா உள்ளே வந்தார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்பினர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். மக்களால் அதிகமாக விரும்பப்படாத நபரை ஓட்டெடுப்பு நடத்தி வெளியேற்றுவார்கள்.

சென்ற வாரம்தான் நிகழ்ச்சியின் முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றவில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டாவது வாரம் என்பதால் நிச்சயமாக ஒருவர் வெளியேறுவார்.

சென்ற வாரமே எலிமினேஷன் டீமில் ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 4 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் வாக்கெடுப்பில் காப்பாற்றப்பட்டவர்கள் பட்டியல் நேற்றைக்கு வெளியிடப்பட்டது. அந்த லிஸ்ட்டில் ஷிவானியும், ரம்யாவும் இடம் பிடித்தார்கள்.

கடைசியாக இருக்கும் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவரில் ஒருவர் இன்றைக்கு வெளியேற்றப்படுகிறார். இதற்கான மூன்றாவது புரமோவும் தற்போது வெளியிடப்பட்டுவிட்டது.

நமக்குக் கிடைத்த உறுதியானத் தகவலின்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து
இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாதான் என்று தெரிகிறது..!

The post பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..? appeared first on Touring Talkies.

]]>