The post பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி…! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் appeared first on Touring Talkies.
]]>The post “நயன்தாராவை நான்தான் தானம் செய்தேன்…” – நடிகர் கார்த்திக் குமாரின் காமெடி பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>மேலும் ஸ்டாண்ட்-அப் காமடி செய்வதிலும் வல்லவர். பல திரைப்பட விழாக்களில் தனிப்பட்ட காமெடி பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.
இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நிகழ்வினை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்தப் பேச்சில், “ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுவார்கள். ஆனால் எனக்கு அந்தப் படத்தில் கடைசிவரை கல்யாணமே நடக்காது.
இந்த வரிசையில் ஷாலினி, லைலா, ராணி முகர்ஜி ஆகியோர்களை நான்தான் தானம் செய்து தந்திருக்கிறேன். நயன்தாராவுக்கு இப்போது ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது என்றால் அதற்கும் நான்தான் காரணம்…” என்று பேசியுள்ளார்.
தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் குமாருக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கதை நகரும். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென நயன்தாராவை தனுஷ் திருமணம் செய்து கொள்வார். இந்தக் கதையை வைத்துதான் கார்த்திக் குமார் இப்படி பேசியதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.
The post “நயன்தாராவை நான்தான் தானம் செய்தேன்…” – நடிகர் கார்த்திக் குமாரின் காமெடி பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post “நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>இதனால் நடிகர் ராதாரவியை அப்போது அவர் இருந்த தி.மு.கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார்கள். இந்த நீக்கத்தைத் தொடர்ந்து தி.மு.கழகத்தில் இருந்து விலகிய ராதாரவி, பாரதீய ஜனதா கட்சியில் போய்ச் சேர்ந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவை கிண்டல் செய்த விவகாரம் பற்றி சமீபத்தில் ராதாரவி பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், “நான் நயன்தாராவைப் பத்தி தவறான அர்த்தத்தில் எதையுமே சொல்லலையே.. ‘அவங்க கவர்ச்சியாவும் நடிக்கிறாங்க. சீதை வேஷத்துலேயும் நடிக்கிறாங்க. ரெண்டுக்குமே கச்சிதமா பொருந்துறாங்க’ன்னுதான் சொன்னேன். எனக்கும் நயன்தாராவுக்கும் சம்பந்தமே இல்லையே.. ஆனால், அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது அவங்களுக்கு வேற இடத்துல சம்பந்தம் இருக்குன்னு.. இதைத்தான் பெண்களை அவமானப்படுத்தி பேசிட்டேன்னு சொல்லி தி.மு.க.வில் இருந்து என்னைத் தற்காலிகமா நீக்கிட்டாங்க. ‘எதுக்குப்பா தற்காலிகமா நிக்குறீங்க..? நிரந்தரமாவே நீக்குறீங்களேன்’னு சொல்லிட்டு நானே வெளில வந்துட்டேன்..” என்று பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
The post “நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..? appeared first on Touring Talkies.
]]>நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை 7Screen Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள் என்று கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பினால் உலகமே இயங்காமல் இருந்த சூழலில் இந்தப் படமும் மூலையில் முடங்கியது. இப்போது அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுவிட்டதால் இந்த மாதம் 12-ம் தேதியன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து நடிகை சமந்தா திடீரென விலகிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விலகலுக்கான காரணத்தை சமந்தா இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனே இயக்கவிருப்பதால் கண்டிப்பாக நயன்தாராவுக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்தே சமந்தா விலகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வரும் 12-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் முன்னணி ஹீரோயினான சமந்தா விலகியிருப்பதால் அந்தப் படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
The post ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..? appeared first on Touring Talkies.
]]>The post ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது..! appeared first on Touring Talkies.
]]>படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் குல தெய்வமான ‘மூக்குத்தி அம்மன்’ தன்னை வணங்காமல் திருப்பதி சென்று பெருமாளை கும்பிட நினைக்கும் பாலாஜியின் குடும்பத்தினரைக் கண்டிக்கிறார். “இது இந்து மத தெய்வங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி..” என்கிறார்கள் இந்து மதப் பற்றாளர்கள்.
“திருப்பதிக்குப் போனால் லட்டு கிடைக்கும்.. பழனிக்குப் போனால் பஞ்சாமிர்தம் கிடைக்கும். இதற்காகத்தான் அங்கே கூட்டம் ஓடுகிறது…” என்று ஒரு வசனத்தை நயன்தாரா பேசுவார். இது அந்தக் கோவில்களுக்குச் செல்லும் உண்மையான பக்தர்களை மிகவும் கேவலப்படுத்துவதாக கொதித்தெழுந்துள்ளனர் பெருமாள் மற்றும் முருக பக்தர்கள்.
அதோடு படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு சாமியார் இந்து மதத்தை வைத்து சட்ட விரோதக் காரியங்களை செய்வது போலவும் “கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் எப்போதும் ஒரு புரோக்கர் தேவையில்லை…” என்று குலதெய்வ சாமி சொல்வது போலவும் படத்தை முடித்திருக்கிறார்கள். இது இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் சாமியார்களை கேவலைப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் இந்து மத அமைப்புகளின் தலைவர்கள்.
கூடவே, படத்தில் இடம் பெற்றிருந்த கிறித்துவ மோசடி ஜெப கூட்டம் பற்றிய காட்சிகளை வேண்டுமென்று பட வெளியீட்டுக்கு முன்பேயே வெளியிட்டுவிட்டு.. படத்தில் அதை நீக்கம் செய்திருப்பது இயக்குநரின் உள்நோக்கம் சார்ந்த செயல் என்று கொதிக்கிறார்கள் இந்து மத ஆதரவாளர்கள்.
“மாற்று மதத்தில் நடக்கும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும் மட்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வராத இந்த சினிமா இந்து மதத்தை மட்டும் கேவலப்படுத்துவது ஏன்..? உண்மையான பக்தர்களாக இருந்தால் அனைத்து மதங்களிலும் இருக்கும் திருட்டுக் கும்பல்களை அடையாளம் காட்ட வேண்டியதுதானே..? ஏன் இந்து மதம் மட்டும்தான் இவர்களுக்குக் கிடைத்ததா…?” என்கிறார்கள்.
“அதிலும் நயன்தாரா என்ற கிறிஸ்துவப் பெண்ணை இந்து மதத்தின் குல தெய்வ சாமியாக்கி.. அந்தப் பெண்ணின் மூலமாக இந்து மதத்தின் பிற தெய்வங்களை கிண்டல் செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று…” என்று இந்து மத அமைப்புகளின் தலைவர்கள் குமுறியுள்ளனர்.
சத்குரு ஜக்கி வாசுதேவைஅடையாளப்படுத்தும்விதத்தில் படத்தில் இடம் பெற்றிருக்கும் சாமியார் வேடத்தில் அஜய் கோஷ் நடித்திருக்கிறார். ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் இருக்கும் இடம் கோவையை அடுத்த ‘வெள்ளியங்கிரி’ மலை. இந்தப் படத்தில் அஜய் கோஷின் ஆசிரமம் அமையும் இடம் ‘வெள்ளிமலை’. ஜக்கி வாசுதேவை பல இடங்களில் கிண்டல் செய்யும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால், மனோபாலா நடித்த கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தை மட்டும் தயாரிப்பாளர் தரப்பே நீக்கியிருப்பதால் இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தைக் கிண்டல் செய்திருக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இந்து மதத் தலைவர்கள்.
தற்போது ஐசரி கணேஷ் திருப்பதி பெருமாள் கோவிலின் நிர்வாகக் கமிட்டியில் ஒரு உறுப்பினராக இருக்கிறார். “அவர் உறுப்பினராக இருக்கும் கோவிலையே அவர் தயாரிக்கும் படத்தில் எப்படி கிண்டல் செய்யலாம்…? எனவே அவரை அந்தப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்…” என்று கேட்டு இந்து மத அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கிவிட்டன.
இனி இதை வைத்துதான் அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழ்ச் சினிமாவில் நடைபெறும் என்பதால் திரையுலகம் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறது.
The post ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..! appeared first on Touring Talkies.
]]>இந்த நேரத்தில் இந்தப் படத்தைச் சம்பந்தப்படுத்தி ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அது இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனா என்பதுதான்..
காரணம், ‘மூக்குத்தி அம்மன்’ போஸ்டரில் ‘இணை தயாரிப்பு – விக்கி’ என்று இருப்பதுதான். விசாரித்தால் ‘அந்த விக்கி வேறு.. இந்த விக்னேஷ் சிவன் வேறு’ என்கிறார்கள்.
இது பற்றி அந்தப் படத்தின் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “அதை ஏன் ஸார் கேக்குறீங்க.. இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியே நான் ஓய்ஞ்சு போயிட்டேன். இந்தப் படத்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அந்தப் போஸ்டரில் இருக்கும் ‘விக்கி’ என்பவரின் இயற்பெயரும் ‘விக்னேஷ்’தான். ஆனால் அவர் ‘முள்ளும் பலரும்’ படத்தைத் தயாரித்த பழம் பெரும் தயாரிப்பாளரான ‘ஆனந்தி பிலிம்ஸ்’ வேணு செட்டியாரின் பேரன்.
இரண்டு தலைமுறைகளாக இந்த விக்னேஷின் குடும்பமும், மூக்குத்தி அம்மன் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே.கணேஷன் குடுமபமும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் ஐசரி கணேஷின் அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரிப்புப் பணியை பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த விக்கி.
இவர் இல்லையேல் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் கம்பெனியே இல்லை. அப்படியொரு திறமைசாலி. உழைப்பாளி. அவர்தான் இந்த விக்கி.. இதை நீங்களாச்சும் வெளில சொல்லுங்க..” என்று கதறினார் ஆர்.ஜே.பாலாஜி.
இதோ சொல்லிவிட்டோம்..!
The post ‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் OTT-யில் வெளியாகிறதா..? appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கிரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், செல்வா படத் தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
வரும் தீபாவளி அன்று நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனின்’ தரிசனம் Hot Star மூலம் ரசிகர்களின் வீட்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் OTT-யில் வெளியாகிறதா..? appeared first on Touring Talkies.
]]>