The post ‘எண்ணித் துணிக’ படத்தின் டீஸர் 10 லட்சம் பார்வைகளைத் தாண்டியது appeared first on Touring Talkies.
]]>Rain of Arrow Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சாம் CS இசையமைக்க, J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மற்றும் V.J.சாபு ஜோசப் படத் தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் S.K.வெற்றி செல்வன் எழுதி இயக்கியுள்ளார்.
கடந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் இந்த ‘எண்ணித் துணிக’ படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசர் தற்போது YouTube தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இயக்குநர் வெற்றி செல்வனின் அற்புத உருவாக்கத்தில், 90 வினாடிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நேர்த்தியான கதை, விழிகளை விரயச் செய்யும் தினேஷ் குமாரரின் ஒளிப்பதிவு, சாம் CS உடைய மனம் மயக்கும் பின்னணி இசை மற்றும் V.J.சாபு ஜோசப்பின் ஸ்டைலான எடிட்டிங் அனைத்தும் இணைந்த, இந்த டீசர் படத்தின் மீதும், கதையின் மீதும், ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீசருக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பின் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
The post ‘எண்ணித் துணிக’ படத்தின் டீஸர் 10 லட்சம் பார்வைகளைத் தாண்டியது appeared first on Touring Talkies.
]]>The post ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post தன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் விசாரித்தபோது பல்வேறுவிதமான தகவல்கள் வெளிவந்தன.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதற்கடுத்து வந்த காலகட்டத்தில் சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு தான் மிகப் பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டோம் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது.
எங்கள் படம் ஒவ்வொரு முறையும் சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடகூட மறுத்துவிட்டார். மேலும் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என படத்தின் எந்த ஒரு புரமோஷனிலும் அவர் தனது பங்களிப்பை தரவில்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, படம் வெளியாகும்போது போஸ்டர் டிஸைனுக்காக அதுல்யா ரவியின் போட்டோ ஷூட்டை நடத்த திட்டமிடிருந்தோம்.. ஆனால், அந்த போட்டோ ஷூட்டிற்கு கடந்த ஒரு வருடமாக 20 தடவைக்கும் மேலாக அவரை அழைத்து பார்த்தும் ஒவொவொரு தடவையும் ஏதோதோ காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து கொண்டே இருந்தார். இப்போதும் வரும் நவ 27-ம் தேதி வெளியாக இருக்கும் படத்திற்கு இவர் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை.
இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய நடிகை ஆகிவிடவில்லை.. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.. இப்படி இருக்கையில், தமிழ் திரையுலகில், இன்னும் நன்றாக வளர்ந்து, தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டிய அதுல்யா, இப்படி மோசமான முன்னுதாரணமாக மாறிவிட்டது வேதனை அளிக்கிறது.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில், “நான் கோவை தமிழ் பொண்ணு” என பெருமை பீற்றிக் கொள்ளும் இதே அதுல்யா ரவிதான், ஒரு தமிழ் சினிமா தயாரிப்பாளாரின் வயிற்றிலும் அடிக்கிறார் என்பது வினோதமான ஒன்று..
தமிழ் நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள் என பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் தமிழ்ப் பெண் என்பதாலேயே எங்கள் படத்தில் அதுல்யா ரவியை நடிக்க வைத்துவிட்டு, தற்போது புரமோஷன் நிகழ்ச்சிக்குக்கூட அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்குத்தான் எங்களை தள்ளியுள்ளார்.
இன்னும் சொல்லப் போனால் தான் நடித்த பெரிய இயக்குநர்களின் படங்கள் பெயரை மட்டுமே பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்பும் அதுல்யா, வாய்ப்பு இல்லாத காலத்தில் தனக்கு கிடைத்த சிறிய படங்களுக்கு பாராமுகம் காட்டுகிறார்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப், படம் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்து, தற்போதுவரை ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமாக தனது பங்களிப்பை தந்து வருகிறார். படம் நன்றாக வந்திருக்கிறது, விருதுகளை வென்றிருக்கிறது, படம் வெளியாகும்போது தனக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்.
ஆனால், அவருக்கு இருக்கும் நம்பிக்கையில், அர்ப்பணிப்பில் ஒரு சதவீதம்கூட அதுல்யா ரவிக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான்..
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டே ஆக வேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இதற்கான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில்.
அனுஷ்கா, தமன்னா போன்ற முன்னணி கதாநாயகிகளே, தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும்போது, இன்னும் தமிழ் சினிமாவில் தனக்கென, ஒரு அடையாளத்தைக்கூட பெற்றிராத நடிகை அதுல்யா ரவியின் செயல், நிச்சயமாக அவரது வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பது மட்டும் உண்மை.
The post தன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த அதிரடி..! appeared first on Touring Talkies.
]]>இப்போது அவர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பே சர்ச்சையை அளிக்கிறது.
இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாகவும், சாக்சி அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர். கூடுதல் போனஸாக இனியாவும் படத்தில் இருக்கிறாராம். இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.
இப்போதே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கால் பங்கு முடிந்துவிட்டது. இந்த மாதத்திற்குள் மொத்தமும் முடிந்துவிடுமாம்.
எல்லாம் சரி.. கட்சியும் ஆரம்பிச்சாச்சு.. இதனாலேயே மத்திய, மாநில அரசுகள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடுவார்கள்.
படத்தின் தலைப்பில் ‘கடவுள்’ என்றும் வைத்திருக்கிறார். பிரச்சினை சென்சாரில் வருமா.. அல்லது வெளியில் இருந்து வருமா என்பது தெரியலையே என்று சொல்லி சிரிக்கிறார்கள் சினிமாத் துறையினர்.
ஆனால் எஸ்.ஏ.சி.யோ மிகவும் கூலாக இருக்கிறார். ஏனெனில் படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் இ்ப்போது பா.ஜ.க.வில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அவரை வைத்து எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்றுதான் தெம்பாக இருக்கிறாராம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
The post ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த அதிரடி..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை அதுல்யா ரவியின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.
]]>