The post தேர்தல் தில்லுமுல்லுகளைச் சொல்லி பரபரப்பாக்கியிருக்கும் ‘மண்டேலா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தின் பெயர் ‘மண்டேலா’. பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபுதான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘மண்டேலா’ கேரக்டரில் நடித்திருக்கும் யோகி பாபு சவரத் தொழிலாளியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகனின் ஓப்பன் விண்டோ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் யோகி பாபுவுடன் சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் – எஸ்.சசிகாந்த், இணை தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமச்சந்திரா, நேரடி தயாரிப்பு – பாலாஜி மோகன், ஒளிப்பதிவு – விது அய்யனா, இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – ராமு தங்கராஜ், உடைகள் வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், பாடல்கள் – யுகபாரதி, அறிவு, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், புகைப்படங்கள் – ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – கைலாஷ் சோமசுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – எல்.மார்ட்டின் ரெக்ஸ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய ‘தர்மம்’ என்னும் குறும் படத்திற்கு 2013-ம் ஆண்டு சிறந்த குறும் படத்திற்கான நடுவர்களின் சிறப்பு விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் இருக்கின்ற பல காட்சிகள் இன்றைய தேர்தல் களப் பணிகளை நகலெடுத்ததுபோல இருக்கிறது. அரசியல் கட்சிகள் வாக்குப் பதிவன்று செய்யும் பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வெளியூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆட்களை இறக்கி வந்து ஓட்டு போட வைப்பது ஆகிய காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலும், “நோட்டா’வில் வாக்கினை குத்தவும் தனக்கு காசு கொடுக்கவில்லை. காசு கொடுத்தால்தான் ஓட்டு…” என்று யோகிபாபு பேசுவது டீஸரில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் தியேட்டர்களிலா.. அல்லது ஓடிடியிலா என்பது மட்டும் முடிவாகவில்லையாம்..!
The post தேர்தல் தில்லுமுல்லுகளைச் சொல்லி பரபரப்பாக்கியிருக்கும் ‘மண்டேலா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! appeared first on Touring Talkies.
]]>கொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தியேட்டர் வசூலை அள்ளியுள்ளது. அதற்குப் பின்பு வெளியான எந்தப் படமும் தியேட்டர்களில் கூட்டத்தை வரவழைக்கவில்லை.
இதனால் தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். கூட்டத்தை வரவழைக்க என்ன செய்வது என்பதே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு அந்தப் படத்திற்கு வெற்றி கிடைக்குமா.. வசூல் வருமா.. வராதா என்கிற குழப்பத்தில் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவிட்டு… வசூல் கிடைக்காமல் போனால் நிறைய நஷ்டமாகுமே என்பதால் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டு ஒரே செக்காக கிடைக்கின்ற பணத்தை வாங்கிப் போடுவது நல்லது என்ற நினைப்பிற்கு பல தயாரிப்பாளர்களும் வந்துவிட்டார்கள்.
அதோடு தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது எந்தப் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு வந்தாலும் படம் வெளியாகி 30 நாட்களுக்குள் ஓடிடிக்கு இந்தப் படத்தைத் தர மாட்டோம் என்கிற சான்றிதழையும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலைத் தந்திருக்கிறது.
இதனாலேயே தான் தயாரித்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்த முடிவு படத்தின் நாயகனான தனுஷுக்கு பிடிக்கவில்லையென்றாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நலனை முன் வைத்து இந்த முடிவையெடுத்துவிட்டார்.
இதற்கிடையில் தான் தயாரித்த ‘ஏலே’ படத்தை நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்தப் படம் நேற்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்துமே இந்தப் படத்தில் சிறப்பாக இருந்ததால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை இதே விஜய் டிவியிலேயே வெளியிட தயாரிப்பாளர் சசிகாந்த் முடிவெடுத்திருக்கிறாராம்.
அந்தப் படம் ‘மண்டேலா’ என்ற திரைப்படம். நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் அநேகமாக ஏப்ரல் 14-ம் தேதியன்று விஜய் டிவியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏப்ரல் 14-ம் தேதியன்று சன் தொலைக்காட்சியும் தியேட்டர்களுக்கே வராத புத்தம் புதிய படமாக ‘வணக்கம்டா மாப்ளை’ என்ற படத்தையும் வெளியிடவுள்ளதாம்.
ஆக மொத்தத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் தங்களது ரசிகர்களை இழந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.
The post ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! appeared first on Touring Talkies.
]]>The post யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஹாரர் திரைப்படம் ‘கங்கா தேவி.’ appeared first on Touring Talkies.
]]>யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள்.
‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.
இந்த ‘கங்கா தேவி‘ படம் பற்றி இயக்குநர் பேசும்போது, ”இத்திரைப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையைக் கொண்டது. அதுவும் கங்கா – தேவின்னு இரட்டை வேடம்.
குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும். குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும்.
தமிழ்த் திரையுலகத்தின் மிகப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது..” என்றார்.
The post யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஹாரர் திரைப்படம் ‘கங்கா தேவி.’ appeared first on Touring Talkies.
]]>The post சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ appeared first on Touring Talkies.
]]>இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் இந்தர்குமார்.
‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
தயாரிப்பு – இந்தர்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன், ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – சாம்.சி.எஸ், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
‘சலூன்’ கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபுவும் நடிக்கின்றனர்.
முழுக்க, முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.
The post சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ appeared first on Touring Talkies.
]]>The post “நான் சம்பளத்துல கறார் இல்லீங்க…” – நடிகர் யோகிபாபுவின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய் பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, படத்தின் இசையை வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் படத்தின் நாயகனான நடிகர் யோகிபாபு பேசும்போது, “ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனா நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு. ‘இந்தப் படத்தின் கதை முதலில் வடிவேல் சாருக்காக எழுதியது..’ என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் பயந்து போனேன். ‘வடிவேல் சார் ஒரு ஜீனியஸ். அவர் கேரக்டர் எனக்கு எப்படி சார் செட்டாகும்?’ன்னு கேட்டேன். எனக்கேற்றபடி சில மாறுதல்களை செய்திருப்பதாகச் சொன்னார். பின்னர்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
இயக்குநர் சக்தி சிதம்பரம் சார், டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு அதற்காக எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் இப்போதும், எப்போதும் காமெடியன்தான்.. காமெடியன்தான்.நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேனஜரிடம் வேண்டுமானால் கேட்டுக்குங்க. சமீபத்தில்கூட ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பொண்ணு வந்து, ‘ஒரு கதை பண்ணிருக்கேன். நீங்க பண்ணிக் கொடுக்கணும். ஆனால், என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தால்தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்’ன்னு சொல்லிச்சு. நான் உடனே ‘ப்ரீயாவே நடிச்சித் தர்றேம்மா.. உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்…’ என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இந்தப் படம் வெற்றி அடைய உங்கள் எல்லாரோட ஆதரவும் அன்பும் வேணும்…” என்றார்.
The post “நான் சம்பளத்துல கறார் இல்லீங்க…” – நடிகர் யோகிபாபுவின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>