The post சொந்த வீடு வாங்க விமல் நடத்தும் போராட்டம்தான் ‘மஞ்சள் குடை’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக ‘வால்டர்’ படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரேணுகா ராதாரவி , Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பிரவீன் குமார், இசை – ஹரி, வசனம் – கிஸ்ஸார், படத் தொகுப்பு – ராஜா முகமது, சண்டை பயிற்சி இயக்கம் – ஹரி தினேஷ், கலை இயக்கம் – மாதவன், இணை இயக்கம் – மாரி செல்வம், பத்திரிகை தொடர்பு- மணவை புவன், தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகீர் உசேன், கதை, திரைக்கதை, இயக்கம் – சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்)
படம் பற்றி இயக்குநர் சிவம் ராஜாமணி பேசும்போது, “ஃபேமிலி சென்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகைதான்.
அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள். புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
இந்தப் படப்பிடிப்பு முழுவதையும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது…” என்றார் இயக்குநர் சிவம் ராஜாமணி.
The post சொந்த வீடு வாங்க விமல் நடத்தும் போராட்டம்தான் ‘மஞ்சள் குடை’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post “மன்னர் வகையறா’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டம்” – விநியோகஸ்தர் தகவல் appeared first on Touring Talkies.
]]>இந்த நேரத்தில் விமல் குற்றம்சாட்டியுள்ளபடி “மன்னர் வகையறா’ திரைப்படம் 8 கோடியெல்லாம் வசூலிக்கவில்லை. விநியோகஸ்தர் ஷேராக வெறும் 1 கோடியே 30 லட்சம் ரூபாயைத்தான் வசூலித்தது…” என்கிறார் அந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்த ‘சினிமா சிட்டி’ நிறுவனத்தின் விநியோகஸ்தரான கே.கங்காதரன்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“நடிகர் விமல் அவர்கள் பைனான்சியர் கோபி மீதும் அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதும் கொடுத்துள்ள மோசடி புகார் குறித்து ‘மன்னர் வகையறா’ படத்தின் விநியோகஸ்தர் என்ற முறையில் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
‘மன்னர் வகையறா’ படத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதால் அந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நடிகர் விமலிடம் பேசி ரூ.3 கோடிக்கு வியாபாரம் பேசி ரூ.1.5 கோடி MG ஆகவும், மீதி ரூ.1.5 கோடி திருப்பித் தரக் கூடிய டெபாசிட் எனவும் ஒப்பந்தம் செய்தோம்.
‘மன்னர் வகையறா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒப்பந்தம் செய்து முன்பணமாக ரூ. 1 கோடியை நடிகர் வேமலிடம் கொடுத்தேன். மீதி இரண்டு கோடியை ‘மன்னர் வகையறா’ பட வெளியீட்டிற்கு முதல் நாள் தருவதாக கூறியிருந்தேன்.
‘மன்னர் வகையறா’ பட வெளியீட்டிற்கு முன்பு விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்த மதுரை அன்பு, அழகர், LMM முரளி, அல்தாப், மற்றும் விமல் செட்டில் செய்ய வேண்டிய சுரபி மோகன் ரூ 1.1 கோடி ரூபாயை செட்டில் செய்தல் மட்டுமே ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூறிவிட்ட காரணத்தால், விமலுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2 கோடியில், ரூ 1.1 கோடியை விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பில் செலுத்தும்படி விமல் கூறி விட்டார்.
மீதி பணம் 90 லட்சத்தில் ரூ.35 லட்சத்தை டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களுக்கு செலுத்திவிட்டு மீதி தொகை ரூ.55 லட்சத்தை நடிகர் விமலிடம் ஒப்படைத்துவிட்டேன்.
அந்தப் பணத்தை வைத்து TV, Paper, Poster, Vinyl மற்றும் Fefsiக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை என அனைத்தும் நடிகர் விமலால் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது.
சேட்டிலைட் உரிமையை பெற்ற Zee Network நிறுவனம் படத்தை ஒளிபரப்பிய பின்னரே பணம் தரப்படும் என கூறிவிட்டது. இதன் காரணமாக படத்தின் பைனான்சியர் கோபிக்கு செட்டில் செய்ய விமலிடம் பணம் இல்லை. அதனால் கோபியிடம் இருந்து Lab Clearance பெற முடியவில்லை.
Lab Clearance இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்பதால், படத்தின் ஏரியா விநியோக உரிமையை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையும், நடிகர் விமலையும் அழைத்து கொண்டு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சென்றோம்.
பணம் செட்டிலாகாமல் கோபியிடமிருந்து Lab Clearance எப்படி வாங்க முடியும் என்று கேள்வி கேட்ட சிங்காரவேலன் கையை பிடித்து கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு விமல் செஞ்சியது என் கண்களில் அப்படியே நிற்கிறது. அப்போது அனைத்து விநியோகஸ்தர்களும் என்னுடன் இருந்தனர்.
கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அடுத்தடுத்த படத்தில் நடித்து அந்த சம்பளத்தில் இருந்து தந்துவிடுவதாக விமல் கூறியதையடுத்து, கோபியிடம் எடுத்து சொல்லி, சிங்காரவேலன் உத்தரவாதம் அளித்ததையடுத்து கோபியிடமிருந்து Lab Clearance வந்தது.
ஆனால், இதையெல்லாம் மறந்தும், மறைத்தும் தனக்காக இரக்கப்பட்டவர்கள் மீதே மோசடி புகார் கொடுத்த நடிகர் விமல் போன்றவர்களால்தான் சினிமாவுக்கு பைனான்ஸ் தர பைனான்சியர்கள் பயப்படுகிறார்கள்.
பல சோதனைகளைத் தாண்டி ‘மன்னர் வகையறா’ படம் வெளிவந்ததும் என்னுடைய ஷேராக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவில்தான் வசூல் செய்தது. எனவே நான் கொடுத்திருந்த டெபாசிட் தொகையை திருப்பித் தர கேட்டு விமலிடம் பல முறை நடையாய் நடந்து வருகிறேன். ஆனால், இப்போதுவரையிலும் விமலிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணம் வரவில்லை.
தற்போது நடக்கின்ற விஷயங்களை பார்த்தால் கோபி மற்றும் சிங்காரவேலன் ஆகியோரை ஏமாற்றியதை போல என்னையும் ஏமாற்றி விடுவாரோ? என்று அச்சமாக உள்ளது.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்ற வாக்கியங்கள்தான் என்னை தைரியமாக வைத்திருக்கின்றன…” என்று சொல்லியிருக்கிறார் விநியோகஸ்தர் கங்காதரன்.
The post “மன்னர் வகையறா’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டம்” – விநியோகஸ்தர் தகவல் appeared first on Touring Talkies.
]]>The post விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.
விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது படத் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், “காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது.
படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.
இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.
இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்…” என்றார் இயக்குநர்.
இத்திரைப்படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படம் அப்போது வெளியாகவில்லை.
இப்போது தியேட்டர்கள் திறந்திருக்கும் சூழலில் இம்மாத இறுதியில் நவம்பர் 27-ம் தேதியன்று குடும்பங்களை மகிழ்விக்க ‘கன்னி ராசி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..! appeared first on Touring Talkies.
]]>விமல் நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ‘தர்ம பிரபு’ இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலுவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இன்னமும் பெயரிடப்படாத படம்… ஆகிய படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குல சாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குநர் சுராஜின் உதவியாளர் ராஜதுரையின் இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.
‘குலசாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.
The post விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..! appeared first on Touring Talkies.
]]>