The post “விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா நாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 14-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B பிரதீப், பன்காஜ் போஹ்ரா, விக்ரம் குமார், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி படம் பற்றி பேசும்போது, “கொலைகாரன்’ படத்திற்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததிலும் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகையும்கூட. நிவாஸின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது..” என்றார்.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மிகா பேசும்போது, “இந்தப் படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோவுடன் இணைந்தே கடைசிவரையிலும் பயணிக்கக் கூடிய ஒரு கேரக்டர். இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த சில நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார். விஜய் ஆண்டனி ஸார் ரியல் லைஃபிலும் ஹீரோதான்..” என்றார்.
படத்தை பற்றி இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது, “இந்தக் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மெட்ரோ’ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.
இந்தப் படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கலைகளையும் மற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இது முழுக்க, முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்..” என்றார்.
விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான Dr.தனஞ்செயன் பேசும்போது, “கோடியில் ஒருவன்’ என்ற இந்தப் பாசிட்டிவான படத் தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குநர். இந்தப் படத்தை நாங்கள் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
விஜய் ஆண்டனி இந்தப் படத்தில்தான் முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பு நடக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார்.
படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்…” என்றார்.
The post “விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..! appeared first on Touring Talkies.
]]>The post இறுதிக் கட்டத்திற்கு வந்தது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், சம்பத், J.சதீஷ்குமார், ரைமா, சேனா, சென்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். K.S.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, வெற்றிவேலன்.K படத் தொகுப்பு செய்துள்ளார். கிஷோர் கலை இயக்கம் செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சியை அமைத்துள்ளார். பரஞ்சோதி எக்சிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்ற, சௌபர்னிகா உடை வடிவமைப்பு செய்துள்ளார்.
தற்போது முழுப் படப்பிடிப்பும் முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக் குழு.
பர பர திரில்லராக, பல அதிரடி ஆக்சன் காட்சிகளுடன், மிகப் பெரிய பட்ஜெட்டில், இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத வித்தியாசமான பல நாடுகளில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்ஷரா ஹாசன் மற்றும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மொத்தப் படக் குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக் கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
இயக்குநர் நவீன் இது குறித்து பேசும்போது, “உலகம் முழுவதும் சென்று படப்பிடிப்பு செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது. படக் குழுவின் அயராத ஒத்துழைப்பே அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது.
இந்த ‘அக்னி சிறகுகள்’ படத்திற்கு இப்படியானதொரு படக் குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றை கொல்கத்தாவில் தற்போது படமாக்கினோம். இத்துடன் படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.
விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் காட்சிகளில் வெளிப்படுத்திய அற்புத நடிப்பில் அசந்து போனேன். படத்தின் மொத்த படபிடிப்புமே பேரனுபவமாக இருந்தது.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவக்கப்பட்டு விட்டது.
இந்நேரத்தில் படக் குழு அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பேணும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்து தந்ததற்காக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.
The post இறுதிக் கட்டத்திற்கு வந்தது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>