The post தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’…! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார்.
சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார்.
சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, ‘மொட்டை’ ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, ‘கும்கி’ ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’ தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்த் நடித்துள்ளது.
தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இத்திரைப்படம் பற்றிப் பேசும்போது, “இந்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் உருவாகிவரும்விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது.
இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியதுபோலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார். குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்கு பெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும், படப்பிடிப்பில் குடும்ப உறவுகளைப் போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக் குழுவை கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனன்ும் நம்பிக்கையை கூட்டியுள்ளது.
பொது முடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு, செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரி விகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தருவோம்…” என்றார்.
The post தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’…! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், சேரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஷ்வத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப் புறம், கிராமப் புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பேசும்போது, “எங்களுடைய இந்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது.
நான் பல வருடங்களாக தமிழ்த் திரைத்துறையில் பயணிக்கிறேன். எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.
கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல்தான் குடும்ப கதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும்.
முன்பே சொன்னதுபோல் ‘விஸ்வாசம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள்.
எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும்..” என்றார்.
The post ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>