The post பிறந்த நாளில் இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! appeared first on Touring Talkies.
]]>நடிகர் அருண் விஜய் நேன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார்.
அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.
நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது
The post பிறந்த நாளில் இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! appeared first on Touring Talkies.
]]>The post 100 நாய்கள் நடித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>அர்ஜூன் என்ற சிறுவனுக்கும்(ஆர்ணவ் விஜய்), அவனது செல்லப் பிராணியான சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய படம்தான் இந்த ‘ஓ மை டாக்’.
தயாரிப்பு – ஜோதிகா-சூர்யா, இணை தயாரிப்பு – ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் RB Talkies – S.R.ரமேஷ் பாபு, இசை – நிவாஸ் பிரசன்னா, ஒளிப்பதிவு- கோபிநாத், எழுத்து, இயக்கம் – சரோவ் சண்மூகம்.
“நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்திற்காக 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம்…” என்று இந்தப் படத்தின் இயக்குநரான சரோவ் சண்முகமும், நடிகர் அருண் விஜய்யும் கூறினார்கள்.
இது குறித்து நடிகர் அருண் விஜய் பேசும்போது, “100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளன. இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. இதற்காக நாய்களின் ட்ரெயர்னர் ராஜவிற்கு ஒரு மிகப் பெரிய நன்றி.
மேலும் இயக்குநர் சரவ், எல்லா விஷயங்களிலும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியதில் எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி.” என்றார்.
இயக்குநர் சரோவ் சண்முகம் பேசும்போது, “இந்த ‘ஓ மை டாக்’ திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டியான சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பை கூறும் ஒரு உணர்வுபூர்வமான கதையாகும்.
அர்ஜூன், சிம்பாவை சந்திக்கிறான். அது அவனை காப்பாற்றுகிறது, அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான். பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களை கடந்து, வெற்றிப் பாதையை அடைகிறார்கள். இதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தில் நாய்களுக்கு டிரெயினிங் கொடுக்கத்தான் நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம். முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம்.
ஆனால், இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.
இந்த கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம்.
ட்ரெயர்னர் ராஜா, நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார். அங்குதான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம். நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்க சொன்னேன். இது உலகம் முழுக்க நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டியைப் போன்றது. அந்தப் போட்டியை இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறோம். இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று நினைக்கிறோம்…” என்றார்.
இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், ப்ரைம் வீடியோவில், இந்தியா உட்பட 240 நாடுகளின் பகுதிகளில் வரும் ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
The post 100 நாய்கள் நடித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>The post அருண் விஜய் நடித்திருக்கும் ‘சினம்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post அருண் விஜய் நடித்திருக்கும் ‘சினம்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post உலகத் திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறது ‘சினம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கும் இந்த ‘சினம்’ படத்தின் புத்தம் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தை G.N.R.குமரவேலன் இயக்கியுள்ளார்.
2021-ம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் இந்தப் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாக உலகம் முழுக்க பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டு வருகிறது.
தற்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் சிறப்பு பதிப்பை படத் தொகுப்பு செய்யும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து நடிகர் அருண் விஜய் பேசும்போது, “சினம்’ படத்தின் கரு உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது. அதனால் உலக ரசிகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட நினைத்தோம்.
படத்தில் ஆக்சனும், உணர்வுகளும் சரிபாதியாக கலந்திருக்கும். அது ரசிகர்களை படம் முழுக்க பரபரவென வைத்திருக்குமென நான் நம்புகிறேன். இப்படத்தை 2021-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.
நடிகர் அருண் விஜய் ஏற்கனவே இயக்குநர் நவீன் இயக்கத்தில் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் ‘AV31’ படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு உடனடியாக இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
அருண் விஜய் இப்படத்தில் ‘பாரி வெங்கட்’ எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க, சில்வா சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
The post உலகத் திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறது ‘சினம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.
]]>சூர்யாவை வைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ‘அருவா’ படத்தை இயக்க முழுக் கதை, திரைக்கதை, வசனத்துடன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவர் அந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்.. அந்த பிராஜெக்ட்டை அவர் கை கழுவினார். இந்தப் படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம் சூர்யா.
சூர்யா இருக்கும் தைரியத்தில் விஜய்யிடமும், விக்ரமிடம்கூட போகாமல் இருந்த ஹரிக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. இத்தனை மாதங்கள் காத்திருந்தது முழுக்க வீணாகிப் போன கோபத்தில் இருந்தார் ஹரி.
இந்தக் கோபத்தைத்தான் “சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்…” என்று சூர்யா சொன்னவுடன், உடனேயே சூர்யாவைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஹரி. இருந்தும் சூர்யா அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இடையில் தான் கையில் வைத்திருக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போன்ற ஹீரோக்களைத் தேடிய ஹரிக்கு ஏமாற்றமே கிடைத்தது. விஜய்யின் பக்கத்திலேயே போக முடியவில்லை. விக்ரமும் இப்போ என் ஸ்டைலே மாறிருச்சு என்று சொல்லி எஸ்கேப்பாக, தனித்து நின்றார் ஹரி.
இப்போது இவருக்குக் கை கொடுத்திருப்பது இவருடைய மைத்துனரான நடிகர் அருண் விஜய். இயக்குநர் ஹரி, தனது இத்தனை வருட கால திரையுலக வாழ்க்கையில் அருண் விஜய்யை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. அருண் விஜய்யை ஒரு படத்தில்கூட நடிக்க வைத்ததும் இல்லை.
இப்படியிருக்க நாம் ஏன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று நினைத்த மாமனும், மச்சானும், பட்ஜெட்டை கூற, குறைய மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து இதே ‘அருவா’ படத்தைத் துவக்குகிறார்களாம்.
‘தடம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றியிருக்கும் இடம் நோக்கியெல்லாம் ஓடத் துவங்கியிருக்கிறார் அருண் விஜய்.
வெற்றி கிட்டட்டும்..!
The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.
]]>