The post விமர்சனம்: ‘ஆர் யூ ஓகே பேபி?’ appeared first on Touring Talkies.
]]>‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஹவுஸ் ஓனர்’ உட்பட சில படங்களை இயக்கி இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது இயக்கியுள்ள படம், ‘ஆர் யூ ஓகே பேபி?’.
ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது பற்றிய படம். அது தொடர்பான 3 பெண்களை சுற்றி வருகிறது கதை.
ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள், பிரச்சினைகள், அது தொடர்பா கநடக்கிற விசாரணை நடைமுறைகள் ஆகியவற்றை உணர்வு பூர்வமாக சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஒரு குழந்தையை தத்தெடுத்த அம்மாவாக அபிராமியும், கணவராக சமுத்திரக்கனியும் மிகப் பொருத்தம்.
இருவருமே அற்புதமாக நடித்து உள்ளனர். இவர்களது இயல்பான நடிப்பு, திரைப்படம் என்பதை மீறி, நிஜத்தில் ஒரு சம்பவத்தை உணர்வதாக உள்ளது.‘முருகா’ அசோக் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார். அசோக் கலைராணி, முல்லையரசி, ‘ஆடுகளம்’ நரேன், மிஷ்கின், பாவெல் நவகீதன் என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
உணர்வுபூர்வமான, அழுத்தமான கதைக்கு ஏற்ற இசையை அற்புதமாக அளித்து இருக்கிறார் இளையராஜா.
அதே போல ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதம்.
சிறப்பான படம் என்பதோடு, சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் படம் இது.
அவசியம் பர்க்கவேண்டும்.
குறிப்பாக நீதிமன்ற காட்சியில் அவரது பின்னணியின் இசை அபாரம்..
The post விமர்சனம்: ‘ஆர் யூ ஓகே பேபி?’ appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம் : ‘பாபா பிளாக் ஷீப்’ appeared first on Touring Talkies.
]]>தற்போது சமுதாயத்தில் அதிகரித்து வரும் மாணவ, மாணவியர்களின் தற்கொலைதான் கதைக்கரு. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தப் பிரச்சினைகள், பெற்றோரின் கண்டிப்பு, இணையத்தில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள் ஆகியவை பற்றி பேசியுள்ளது படம்.
சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் பயிலும் பள்ளியை நடத்தி வருகிறார். அவர் மரணத்திற்குப் பிறகு பள்ளி ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனாலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஆண்கள் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும், இரு பாலர் பயிலும் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆனால் ஒரு சண்டையில் இரு குழுவும் ஒன்றாக இணைகிறார்கள். அப்போது பெயர் குறிப்பிடாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் இவர்கள் கையில் கிடைக்கிறது.
அந்த கடிதத்தை எழுதியது யார், காரணம் என்ன, தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா என்பதுதான் மீதிக் கதை.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பார்த்து பழகிய பல முகங்கள் படம் முழுவதும் வருவதால் ரசிகர்கள் படத்துடன் எளிதாக கனெக்ட் ஆகி விடுவார்கள்.அபிராமியின் பின்னணி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடிப்படையாக கொண்டு காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
இடைவேளை வரை, முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்கள் அதகளம்தான். பள்ளிக்காதல், வகுப்பறை அதிரடிகள் என கலகலப்பாக உள்ளது. இடைவேளைக்குப் பிறகு, சீரியஸாக சென்று சில முக்கிய கருத்துக்களைச் சொல்கிறது படம்.
‘பாபா பிளாக் ஷீப்’ ரசிகர்களை கவரும்..!
The post விமர்சனம் : ‘பாபா பிளாக் ஷீப்’ appeared first on Touring Talkies.
]]>The post அபிராமியின் விபரீத ஆசை! appeared first on Touring Talkies.
]]>விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அபிராமி. தற்போதும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “வாழ்க்கை வரலாற்று படத்தில், முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை. இவற்றைவிட சைக்கோ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே முக்கியமான விருப்பம்” என்றார்.
மேலும், “இந்த மூன்று விசயங்களில்தான் ஒருவர் தனது உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிப்படுத்த முடியும். ஆகவே சவாலான அந்த காதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
The post அபிராமியின் விபரீத ஆசை! appeared first on Touring Talkies.
]]>