Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் – Touring Talkies https://touringtalkies.co Wed, 10 Nov 2021 07:17:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் https://touringtalkies.co/jai-bhim-movie-praises-from-indian-film-industry/ Wed, 10 Nov 2021 07:16:21 +0000 https://touringtalkies.co/?p=19309 நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று ஒலித்த பட்டாசுகளின் சத்தத்தைவிட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலி சத்தம்தான் அதிகமாக இருந்தது. நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் […]

The post இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று ஒலித்த பட்டாசுகளின் சத்தத்தைவிட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலி சத்தம்தான் அதிகமாக இருந்தது.

நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ வெளியானது. 

இதனை கண்டு ரசித்த பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நீதிமன்றத்தை மையப்படுத்திய ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களின் பாராட்டுகளை இடையறாமல் வழங்கி வருகிறார்கள்.

இயக்குநர் தா.செ.ஞானவேல், கலைஞர்கள் சூர்யா, லிஜோ மோள் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் என இந்த படத்தில் நடித்த அனைவரும் நடிகர்களாக திரையில் தோன்றாமல், அந்தந்த கதாபாத்திரத்திற்கு உரிய இயல்புடன் நடித்ததால் ஏராளமானவர்கள் பாராட்டுகிறார்கள். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களின் ஆதரவை மனமுவந்து தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரை உலகின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும், பிரபலங்களும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களுடைய சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் தன்னுடைய சுட்டுரையில், “சில திரைப்படங்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து, உங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்ள தூண்டுகின்றன. சூர்யா மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் புத்திசாலித்தனமான படைப்புத் திறன், படத்தை ஈடுபாட்டுடன் காணத் தூண்டுகிறது. உன்னதமான படைப்பு. அதன் நோக்கத்துடன் உங்களையும் கவர்ந்திழுக்கிறது…” என பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய சுட்டுரையில், “சூர்யா மற்றும் படக் குழுவினருக்கு நன்றி. ‘ஜெய் பீம்’ என்ற உன்னதமான படைப்பை வழங்கிய ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்….” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சுட்டுரையில், “ஜெய் பீம் துணிச்சலான படைப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்துவதுடன், நீதித்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. தவறாமல் காண வேண்டிய அற்புதமான படைப்பு…” என பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகரான நானி தன்னுடைய சுட்டுரையில், “இந்த ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்தேன். சூர்யா சாருக்கு மரியாதை கலந்த வணக்கம். படத்தில் செங்கேணி’ மற்றும் ‘ராஜாகண்ணு’வாக நடித்த நடிகர்களின் நடிப்பு தனித்துவம் மிக்கது. ஒப்புயர்வற்ற மாணிக்கம் போன்ற இந்தப் படைப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், அவர்களது கடின உழைப்பிற்கும் என் வாழ்த்துக்கள்…” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய சுட்டுரையில், ”சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே- இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய் பீம்’ திரைப்படத்தை கொடுத்த திரு சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல், 2-டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக் குழுவினருக்கு பெரும் நன்றிகள்…!” என பதிவிட்டிருக்கிறார்.

இதனை தவிர்த்து இந்திய அளவில் சமூக வலைதளப் பக்கத்தில் தீவிரமாக இயங்கிவரும் ஊடகவியலாளர் சோலி அமண்டா பெய்லி, நடிகர் சித்தார்த், நடிகர் யோகிபாபு, நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, கொல்கத்தா ஐ.ஐ.டி.யில் பணி புரியும் ஆணையர் சுக்ரீவ் மீனா, ஒடிசா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் விஜய் ஐஏஎஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றும் சந்தோஷ் சிங் ஐபிஎஸ், தகவல் தொடர்பு துறையில் தொழில் முனைவோராக திகழும் மயூர் சேகர் உள்ளிட்ட ஏராளமானவர்களின் நேர்மறையான பாராட்டை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பேராதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ படத்தின் அற்புத தருணங்களையும், உன்னதமான படைப்பினையும் இதுவரை கண்டு ரசிக்காதவர்கள் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் காணக் கிடைக்கிறது.

The post இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..! https://touringtalkies.co/suryas-jai-bhim-movie-motion-poster-released/ Tue, 12 Oct 2021 05:54:01 +0000 https://touringtalkies.co/?p=18653 இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இந்தப் படத்தின் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் […]

The post சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.

அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இந்தப் படத்தின் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதுதான்.

இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப் படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.

இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும்விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

வரும் தீபாவளி தினமான நவம்பர் 2-ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

The post சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! https://touringtalkies.co/raame-aandaalum-raavane-aandaalu-movie-release-on-ott/ Wed, 15 Sep 2021 07:53:40 +0000 https://touringtalkies.co/?p=17944 அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின்படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில்  உருவாகியிருக்கும் இந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் ஒரு கிராமிய […]

The post ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின்படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார்.

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில்  உருவாகியிருக்கும் இந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் ஒரு கிராமிய வாழ்வியலை சமூக நையாண்டியுடன் சொல்கிறது.  

மனித நேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா தனது 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டு மொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது.

அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள்.

இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன்போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் இந்தப் படத்தின் கதை பயணிக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி பேசுகையில், “இந்தப் படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டு வர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர்.

படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோசமடைவார்கள் என நம்புகிறேன்..” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில், “எங்களுடைய தயாரிப்பான இந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம் பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்..” என்றார்.

The post ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி https://touringtalkies.co/a-forgery-dealings-behind-actor-suryas-2d-entertainment-compnay-name/ Thu, 26 Aug 2021 07:23:26 +0000 https://touringtalkies.co/?p=17338 நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. நடிகர் சூர்யா கடந்த 2013-ம் ஆண்டு சொந்தமாகத் துவங்கிய படத் தயாரிப்பு நிறுவனம் 2டி நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக இதுவரையிலும் 12  திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 படங்களை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் போலியான ஈமெயில் முகவரியை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக புகார் வந்துள்ளது.  சினிமா யூனியன்களில் அடையாள அட்டை  […]

The post நடிகர் சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.

நடிகர் சூர்யா கடந்த 2013-ம் ஆண்டு சொந்தமாகத் துவங்கிய படத் தயாரிப்பு நிறுவனம் 2டி நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக இதுவரையிலும் 12  திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 படங்களை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் போலியான ஈமெயில் முகவரியை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக புகார் வந்துள்ளது.  சினிமா யூனியன்களில் அடையாள அட்டை  வாங்கி தருவதாகவும் கூறி சிலர் பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த 2-டி நிறுவனம் இது பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு, பொதுமக்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

“போலியான இணைய முகவரியை உருவாக்கி எங்களது பெயரை பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றி வந்ததை நாங்கள் அறிந்தோம்.  எங்களது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி ஆடிசன் மற்றும் யூனியன் கார்டு வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.  2-டி நிறுவனத்தின் சார்பாக எந்த ஒரு ஆடிசன்களும் நேரடியாக நடத்தப்படுவதில்லை. 

எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணும் இயக்குநர்கள் நேரடியாக ஆடிசன்கள் வைப்பார்கள் மற்றும் ஆடிசன்களுக்காக எந்தக் கம்பெனியும் பணம் கேட்காது. 

எங்களது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்துவதற்காக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.  மேலும் இதுபோல் போலியான நபர்களிடம் பணம் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்று 2D நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

The post நடிகர் சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி appeared first on Touring Talkies.

]]>