Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஷெர்லின் சோப்ரா – Touring Talkies https://touringtalkies.co Wed, 12 Oct 2022 08:51:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஷெர்லின் சோப்ரா – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகையின் முன் இயக்குநர் செய்த அசிங்கமான செயல்..! https://touringtalkies.co/ugly-act-done-by-the-director-in-front-of-the-actress/ Wed, 12 Oct 2022 08:50:55 +0000 https://touringtalkies.co/?p=25298 “பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபல இயக்குநரான சஜித்கானை அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியில் அனுப்பும்படி” டெல்லி மாநில மகளிர் ஆணையமும், சில நடிகைகளும் கோரிக்கை வைத்துள்ளனர். பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சஜித்கான். இவர் திரைப்பட இயக்குநரான பாராகானின் உடன் பிறந்த தம்பி. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் மீது ஹந்தி திரையுலகில் இருக்கும் நடனப் பெண்மணிகளும், நடிகைகளும் மீ டூ புகார் அளித்து வந்தனர். இதுவரையிலும் சஜித்கான் மீது 10-க்கும் மேற்பட்ட மீ டூ […]

The post நடிகையின் முன் இயக்குநர் செய்த அசிங்கமான செயல்..! appeared first on Touring Talkies.

]]>
பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபல இயக்குநரான சஜித்கானை அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியில அனுப்பும்படி” டெல்லி மாநில மகளிர் ஆணையமும், சில நடிகைகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சஜித்கான். இவர் திரைப்பட இயக்குநரான பாராகானின் உடன் பிறந்த தம்பி.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர் மீது ஹந்தி திரையுலகில் இருக்கும் நடனப் பெண்மணிகளும், நடிகைகளும் மீ டூ புகார் அளித்து வந்தனர். இதுவரையிலும் சஜித்கான் மீது 10-க்கும் மேற்பட்ட மீ டூ புகார்கள் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீஸனில் இந்த சஜித்கானும் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“இயக்குநர் சஜித்கான் மீது Me Too இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் சஜித் கானை பிக் பாஸ்’ தொடரில் வெளியேற்றுமாறு பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, அதிரடி குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மீ டூ இயக்கத்தித் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில் ஷெர்லினும் ஒருவர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, இதற்கு 0 – 10 வரை மார்க் போடச் சொல்லி சொன்னார். தற்போது, அந்த பிக்பாஸ்’ வீட்டில் புகுந்து மார்க் போடலாம் என்று இருக்கிறேன். பாலியல் தொல்லை கொடுத்தவரிடம், பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பார்ப்போம்…” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘இந்த விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற முறையில் நடிகர் சல்மான் கானையும் டேக் செய்துள்ளார்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் இணைப்பையும் அந்த பதிவுடன் இணைத்துள்ளார் ஷெர்லின் சோப்ரா.

இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

The post நடிகையின் முன் இயக்குநர் செய்த அசிங்கமான செயல்..! appeared first on Touring Talkies.

]]>
“ராஜ் குந்த்ராதான் ஆபாச படங்களை எடுத்தார்” – நடிகை ஷெர்லின் சோப்ரா பேட்டி https://touringtalkies.co/raj-kundra-took-pornographic-movies-interview-with-actress-sherlyn-chopra/ Tue, 10 Aug 2021 06:27:14 +0000 https://touringtalkies.co/?p=16918 ஆபாச பட வழக்கில் சிக்கி ஜெயிலில் இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக நடிகை ஷெர்லின் சோப்ரா போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ராஜ்குந்த்ரா தன்னைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படத்தில் நடிக்க வைத்ததாக சொல்லியிருக்கிறார். போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியிலும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பேட்டியில், “நான் நாயகியாக நடிக்கத்தான் பாலிவுட்டில் கால் வைத்தேன். முடியாவிட்டால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவாவது மாறலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் […]

The post “ராஜ் குந்த்ராதான் ஆபாச படங்களை எடுத்தார்” – நடிகை ஷெர்லின் சோப்ரா பேட்டி appeared first on Touring Talkies.

]]>
ஆபாச பட வழக்கில் சிக்கி ஜெயிலில் இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

லேட்டஸ்ட்டாக நடிகை ஷெர்லின் சோப்ரா போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ராஜ்குந்த்ரா தன்னைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படத்தில் நடிக்க வைத்ததாக சொல்லியிருக்கிறார்.

போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியிலும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “நான் நாயகியாக நடிக்கத்தான் பாலிவுட்டில் கால் வைத்தேன். முடியாவிட்டால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவாவது மாறலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் டிராக் மாறி கவர்ச்சி நடிகையாக மாறியதற்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராதான் காரணம்.

நான் தவறான திசைக்கு செல்ல வழிகாட்டிய குருநாதர் அவர்தான். நிர்வாணம், ஆபாசமெல்லாம் ரொம்பவும் சாதாரணமானது என்று சொல்லி என்னை அவர்தான் நம்ப வைத்தார். “எல்லோரும் அப்படித்தான் நடிக்கிறார்கள். நீயும் அப்படி நடிக்க வேண்டும்” என்று என்னை வற்புறுத்தினார்.

ஆரம்பத்தில் கவர்ச்சி வீடியோக்களுடன் தொடங்கி இறுதியில் ஆபாச வீடியோக்களை படமாக்கினார். “எனது மனைவிக்கு உங்களின் கவர்ச்சி வீடியோக்கள் அதிகம் பிடித்துள்ளது. அவர் உங்களை மிகவும் பாராட்டினார்” என்றார் ராஜ் குந்த்ரா. பெரிய நடிகையான ஷில்பா ஷெட்டி பாராட்டியதால் எது சரி, எது தவறு என்று புரியாமல் நானும் இந்த ஆபாச உலகத்தில் சிக்கி கொண்டேன்…’’ என்று கூறியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.

The post “ராஜ் குந்த்ராதான் ஆபாச படங்களை எடுத்தார்” – நடிகை ஷெர்லின் சோப்ரா பேட்டி appeared first on Touring Talkies.

]]>
“ஷில்பா ஷெட்டியை குறித்து நானும் கவலைப்பட்டேன்”-ஆபாச பட வழக்கில் புகார் செய்த ஷெர்லின் சோப்ராவின் வருத்தம் https://touringtalkies.co/im-worried-about-shilpa-shetty-too-sherlyn-chopra-regrets-complaining-about-porn-case/ Fri, 23 Jul 2021 06:58:21 +0000 https://touringtalkies.co/?p=16430 பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் போன் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை குற்றப் பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராஜ் குந்த்ரா மீதும், ஆபாச பட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘Hot Shots’ என்ற செயலியை நடத்தும் நிறுவனத்தின் மீதும் முதன்முதலில் போலீஸில் புகார் கொடுத்தவர் பிரபல பாலிவுட் […]

The post “ஷில்பா ஷெட்டியை குறித்து நானும் கவலைப்பட்டேன்”-ஆபாச பட வழக்கில் புகார் செய்த ஷெர்லின் சோப்ராவின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் போன் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை குற்றப் பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ராஜ் குந்த்ரா மீதும், ஆபாச பட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘Hot Shots’ என்ற செயலியை நடத்தும் நிறுவனத்தின் மீதும் முதன்முதலில் போலீஸில் புகார் கொடுத்தவர் பிரபல பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா.

இவரையும் இது போன்று நிர்வாணப் படத்தில் நடிக்கும்படியும், அதற்கு மிகப் பெரிய தொகையைத் தருவதாகவும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஷெர்லின் சோப்ராதான் தானே முன் சென்று மும்பை போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் விளைவாகத்தான் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ராஜ் குந்த்ரா கைது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலமாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

அதில்,  “இந்த விஷயத்தில் முதன்முதலாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தது நான்தான். மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் அழைத்ததும், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குழந்தைகள் குறித்துதான் முதலில் எனக்கு கவலை ஏற்பட்டது.

ஆனாலும், எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் வாக்குமூலம் அளித்தேன். அந்த ஆபாச பட நிறுவனம் பற்றிய உண்மைகளை போலீஸாரிடம் கூறினேன். இதில் ஒருதலைப்பட்சமாக இல்லாமல், எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன்.

இந்த விவகாரத்தில் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இது தற்போது விசாரணையில் உள்ளது. எனவே, இது பற்றி நான் இங்கு சொல்வது சரியானதாக இருக்காது.

மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டு நான் கூறிய விவரங்களை அவர்களின் அனுமதியுடன் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்..” என்று கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

The post “ஷில்பா ஷெட்டியை குறித்து நானும் கவலைப்பட்டேன்”-ஆபாச பட வழக்கில் புகார் செய்த ஷெர்லின் சோப்ராவின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>