The post “ரேப் சீனில் நடிக்க பயப்படுவேன்!: வில்லன் நடிகர் ஆனந்தராஜ் appeared first on Touring Talkies.
]]>ஆனால் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றாலே ஆனந்தராஜ்தான். அதிலும் ஹீரோயின்களை பலாத்காரப்படுத்தும் காட்சி என்றால், ‘எங்கே ஆனந்தராஜ்’ என்று அழைப்பார்கள் இயக்குநர்கள்.
இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “ரேப் காட்சிகளை திரைப்படத்தில் பார்க்கும் பெண்கள், ‘மனிதனா இவன்’ என்று திட்டுவார்கள். ஆண்கள், ‘ச்சே.. ச்சே..’ என்று சொல்லிவிட்டு ரகசியமாக ரசிப்பார்கள்.
ஆனால் ரேப் காட்சியில் நடிப்பது என்றால் எனக்கு பயம். காரணம், அந்தக் காட்சியில் நடிகைகள் சாதாரமாண இந்தால் போதும். அவ்வப்போது ஓடுவது, கத்துவது, புரண்டு படுப்பது, பயந்தது போல முகபாவனை காட்டுவது என்று நடிப்பார்கள்.
வில்லன் நடிகர்தான் டயலாக் பேசி, வியர்க்க விறுவிறுக்க ஓடி, ரேப் செய்வது போல நடிக்கவேண்டும். தவிர, அதில் பல காட்சிகளில் க்ளோஸ் அப் இருக்கும். அதாவது கேமரா முன், முகத்தை கொடுரமாக.. செக்ஸ் பீலிங்குடன் பாவனை காட்ட வேண்டும்.
ஆகவே ரேப் காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலே பயப்படுவேன் என்பதே உண்மை!” என்றார் சீரியஸாக.
The post “ரேப் சீனில் நடிக்க பயப்படுவேன்!: வில்லன் நடிகர் ஆனந்தராஜ் appeared first on Touring Talkies.
]]>The post டேனியல் பாலாஜியின் இன்னொரு முகம்! appeared first on Touring Talkies.
]]>இவரது இன்னொரு முகம் பலருக்கு தெரியாது. அது.. புரடக்சன் மேனேஜர்!
இது குறித்து அவர், “பல படங்களுக்கு புரடக்சன் மேனேஜராக பணி புரிந்து உள்ளேன். மிகப் பிரம்மாண்டமாக உருவான நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கும் யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தேன். இப்போது மீண்டும் மருதநாயகம் படம் துவங்கப்பட்டாலும், அதே பணியைக் கொடுங்கள் என கமலிடம் கோரிக்கை வைப்பேன்” என்றார்.
மேலும், “வேட்டையாடு விளையாடு படத்தில் நான் நடித்தது மட்டுமல்ல.. அதில் வரும் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்த பிணங்களின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்புகளை நான்தான் உருவாக்கினேன்” என்றார்.
பல்துறை வித்தகர்தான் டேனியல் பாலாஜி.
The post டேனியல் பாலாஜியின் இன்னொரு முகம்! appeared first on Touring Talkies.
]]>The post தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. appeared first on Touring Talkies.
]]>பெரிய தேவர் என்ற அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியபோதே, சலீம் கவுஸ்தான் அந்த வேடத்துக்கு பொருத்தம் என தீர்மானித்து விட்டார் கமல். சலீம் சிறந்த நடிகர் என்றாலும், சரளமாக தமிழ் பேச வராது. அதுவும் இந்தப் படத்தில் தெற்கத்தி தமிழ் பேச வேண்டும்.
அப்போதுதான் இந்த கதாபாத்திரத்தில் நாசரை நடிக்க வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அவரும் பெரிய தேவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.
திரைப்படம் இப்படித்தான்.. படப்பிப்பு துவங்கும் வரை எந்த கதாபாத்திரத்துக்கு எந்த நடிகர் என உறுதியாகச் சொல்ல முடியாது!
The post தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. appeared first on Touring Talkies.
]]>The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி.
அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள்.
ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது.
அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது.
இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே என்று கேட்கலாம்.
இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.
படத்தில் வில்லன் (!) ராஜ ராஜனாக நம்பியார் நடித்தார். அவரதை எதிர்க்கும் நாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார்! வில்லனை வழக்கம்போல ஓட ஓட விரட்டினார்.
(அதே எம்ஜிஆர்தான் 1957-ல் ராஜராஜன் என்ற பெயரிலேயே ராஜராஜனாக நடித்தார்.)
The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>