The post அமிதாப் – விஜயிடம் ராஷ்மிகா மந்தனா கற்றுக்கொண்டவை! appeared first on Touring Talkies.
]]>இவர், “பல படங்களி்ல் நடித்து உள்ளேன். என்றாலும் இந்தியில்
டோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கி இருக்கிறார். தவிர தமிழில், சுல்தான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நாயகியாக தோன்றுகிறார்.
இவர், “பல படங்களி்ல் நடித்து உள்ளேன். என்றாலும் இந்தியில்
விகாஸ் பால் இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் சமீபத்தில் நடித்த குட்பை திரைப்படத்தை மறக்கவே முடியாது. படப்பிடிப்பின் போது, அமிதாப் பல காட்சிகளில் நடிக்க கற்றுத் தந்தார். ஒரு தந்தையைப் போல் அன்பு காட்டினார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றவர், விஜயுடன் வாரிசு படத்தி்ல் நடிக்கும் அனுபவத்தையும் கூறினார்:
“விஜய் மிகப் பெரிய ஹீரோ. ஆனால் படப்பிடிப்பில் அத்தனை அமைதியாக, அனைவருடனும் அன்பாக பழகுகிறார். அதே நேரத்தில், காமிரா ஸ்டார்ட் ஆனவுடன் அதிரடியாக நடிக்கிறார்.
அமிதாப் பச்சனிடம் நடிப்பு கற்றுக்கொண்டேன். விஜியிடமிருந்து ஒரு மனிதர் எப்படி அடக்கமாக அன்பாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்” என்றார் ராஷ்மிகா மந்தனா.
“விஜய் மிகப் பெரிய ஹீரோ. ஆனால் படப்பிடிப்பில் அத்தனை அமைதியாக, அனைவருடனும் அன்பாக பழகுகிறார். அதே நேரத்தில், காமிரா ஸ்டார்ட் ஆனவுடன் அஅமிதாப் பச்சனிடம் நடிப்பு கற்றுக்கொண்டேன். விஜியிடமிருந்து ஒரு மனிதர் எப்படி அடக்கமாக அன்பாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்” என்றார் ராஷ்மிகா மந்தனா.
The post அமிதாப் – விஜயிடம் ராஷ்மிகா மந்தனா கற்றுக்கொண்டவை! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல்-2-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>‘ரெமோ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள ராஷ்மிகா நடித்துள்ளார். யோகி பாபு, ‘கே.ஜி.எப்’ வில்லன் ராம்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
கார்த்தி புது கெட்டப்பில் நடித்திருக்கும் இந்த படம் கலர்புல் கமர்ஷியல் படமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் கூறுகையில், “மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளிதான் இந்த படம். முழுக் கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும்.
நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க, அதேபோல்தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதைதான் இந்தப் படம்.
பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். ‘கைதி’யோட வெற்றிக்குப் பிறகு கார்த்தி சார்கிட்ட நிறைய பொறுப்பு வந்திருக்கு. விமர்சனங்கள் அனைத்தையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறார். தன்னை அதுக்கேற்றவாறு வடிவமைச்சிக்கிறார்.
இந்தப் படம் அவரோட நடிப்பை இன்னும் மெருகேத்தி காட்டும். அவருக்கு படம் ரொம்பவும் பிடிச்சிருந்தது. தெலுங்கில் ராஷ்மிகாவ கொண்டாடுறாங்க. ஆனால், பக்கத்து வீட்டு பெண் போல, அவ்வளவு எளிமையா இருப்பார். நடிப்புனு வந்தா அசத்திடுறார். இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருக்கும்.
கார்த்தி, யோகிபாபு காமெடி கூட்டணி அதகளப்படுத்தியிருக்காங்க. கே.ஜி.எஃப். வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்கார். வெறுமெனே அவரைப் பார்த்தால்கூட பயமா இருக்கும், அந்த அளவு மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கார். விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம்.
ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகளை எப்படி பாத்துக்கறதுங்கறத சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்ககூடிய படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்.
படம் அழகா வந்திருப்பதில் எங்களுக்கு முழு திருப்தி. அடுத்து, ரசிகர்களின் பாராட்டுதலுக்காகத்தான் காத்திருக்கிறோம்…” என்றார்.
The post கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல்-2-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>