The post கடமையை செய் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>சிவில் என்ஜீனியரான எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி யாஷிகா ஆனந்த். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. மாமனாரான சேஷூவும் இவர்களுடனேயே இருக்கிறார்.
திடீரென்று ஏற்படும் பொருளாதார மந்த நிலை காரணமாக சூர்யா வேலை பார்த்து வந்த கட்டுமான நிறுவனம் தனது பணியை நிறுத்திக் கொள்ள வேலையை இழக்கிறார் சூர்யா.
தான் வேலை இழந்ததை மனைவிக்குத் தெரிவிக்காமல் மறைக்கிறார் சூர்யா. வேறு இடங்களில் வேலை தேடுகிறார். கிடைக்கவில்லை. கடைசியாக கார் ஓட்டுனர் வேலைக்குக்கூட போகிறார். அதுவும் செட்டாகாமல் கடைசியாக ஒரு மிகப் பெரிய அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்கிறார்.
அந்த அபார்ட்மெண்ட்டின் சுவர்கள் விரிசல் கண்டுள்ளன. பல இடங்களில் பிளவுகளும் இருக்கின்றன. இப்படியே போனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்டிடம் தானாகவே இடிந்து விழுந்துவிடும் என்பதை அறியும் சூர்யா அந்தக் கட்டிடத்தைக் கட்டிய பில்டரை தேடிப் பிடித்து விஷயத்தைச் சொல்கிறார்.
பில்டரோ, “நீ உயிருடன் இருந்தால் எனக்கு ஆபத்து” என்று சொல்லி சூர்யாவை கொலை செய்ய ஆளை அனுப்புகிறார். லாரியை வைத்து சூர்யா மீது தாக்குதல் நடத்த… கோமா நிலைக்குள் தள்ளப்படுகிறார் சூர்யா. ஆனாலும், இதிலும் வித்தியாசமாக அவரால் சுற்றியிருப்பவர்களை பார்க்க முடியும். அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். ஆனால் பேச முடியாது.
இப்படியொரு இக்கட்டான சூழலில் சூர்யாவின் குடும்பம் பரிதவிக்க.. மருத்துவமனையிலும் சூர்யாவை கொல்ல ஆட்களை அனுப்புகிறார் பில்டர். அவர்களிடமிருந்து தப்பிக்கும் சூர்யா அபார்ட்மெண்ட்டை காப்பாற்ற தானே நேரில் செல்கிறார்.
ஒரு பக்கம் போலீஸ் அவரைத் தேட.. மருத்துவமனையில் இருந்து ஓடிவிட்டதாக நினைத்து குடும்பத்தினர் தேட.. பில்டரும் இன்னொரு பக்கம் தேடத் துவங்க.. கடைசியில் அந்த அபார்ட்மெண்ட் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.
சூர்யாவுக்கு மிக, மிக வித்தியாசமான வேடம். அன்பு கணவராக, பாசமிக்க தந்தையாக.. அப்பாவி மருமகனாக.. சிநேகமான சூப்பர்வைஸராக என்று பல்வேறு காட்சிகளில் வேறு, வேறு நடிப்பைக் காட்டியிருந்தாலும் மருத்துவமனையில் படு்த்த பின்பு வேறு சூர்யாவாகிவிட்டார்.
வெறித்த பார்வையுடன் படுத்தே இருந்த நிலையிலும், வில்லன் கோஷ்டியில் தாக்குதலினால் திடீர், திடீரென்று அவருக்குள் பொங்கும் கோபத்தை சண்டையில் காட்டுவதும்.. அபார்ட்மெண்ட்டுக்கு வந்து பேச முடியாமல் தவித்து, மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டு தவிக்கும் கேரக்டரிலும் சிறப்பாக சம்பவம் செய்திருக்கிறார் சூர்யா.
சூர்யா, கார் டிரைவர் வேலை பார்க்கும்போது தனது மாமனாரிடம் இருந்து தப்பிக்க வேண்டி பிச்சைக்காரர்களின் அருகில் படுத்து அதை மனைவி பார்க்க அங்கிருந்து தப்பிக்க அவர் படும் பாடு பெரும் நகைச்சுவைதான்.
யாஷிகா ஆனந்த் சில காட்சிகளில் உடைகளில் தாராள மனப்பான்மையோடு வலம் வந்து தனது இருப்பை நிரூபித்திருக்கிறார். சூர்யாவிடம் குடும்பச் சூழலை சொல்லி பொங்கும் காட்சியில் சிறிதளவாவது நடித்து நம்மை அதிர்ச்சியாக்கியிருக்கிறார்.
வின்சென்ட் அசோகன் வில்லனாம். ஆனால் கடைசியில் அவரது தம்பி வில்லனாகி நமக்கே காதில் பூச்சுற்றியிருக்கிறார்கள். மற்றைய கேரக்டர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் குறையில்லை. அபார்ட்மெண்ட் காட்சிகளையும், கிளைமாக்ஸ் காட்சியையும் பிரம்மாண்டமாய்தான் படம் பிடித்திருக்கிறார். அதேபோல் படத் தொகுப்பாளரும் அந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் திக் திக் உணர்வைக் கூட்டிக் கொடுத்திருக்கிறார்.
இசையில் ‘கடமையை செய்’ மற்றும் ‘பெஸ்ட் பிரண்டு’ பாடல்கள் கேட்கும் ரகம். பாட்டை யார் கேட்டது… எல்லாரும் யாஷிகாவைல்ல பார்த்துக்கிட்டிருந்தாங்க.? அபார்ட்மெண்ட் பாடலின் மாண்டேஜ் ஷாட்களின் தொகுப்பு சிறப்பு. பின்னணி இசைதான் காதைக் குடைந்துவிட்டது.
முதலில் கதையின் அடிப்படையிலேயே மிகப் பெரிய லாஜிக் ஓட்டை. சிவில் என்ஜீனியர் முடித்தவருக்கு அவர் படிப்பு தொடர்பான வேலையே கிடைக்கவில்லை என்று சொல்லியிருப்பது பூச்சுற்றல். அவர் வேறு வழியில்லாமல் செக்யூரிட்டி வேலைக்குச் செல்கிறார் என்பது அதைவிட பூச்சுற்றல்.
சூர்யா, வின்சென்ட் அசோகனிடமே வேலைக்கு சேர்ந்து அந்த அபார்ட்மெண்ட்டின் பராமரிப்பு வேலைக்காக வந்து நடந்த தவறுகளைக் கண்டறிவதுபோல திரைக்கதையை அமைத்திருந்தால்கூட ஏற்றுக் கொள்ளாம். இப்படி முழம், முழமாக பூச்சுற்றினால் எப்படிங்கோ இயக்குநரே..!?
கிளைமாக்ஸில் தத்தித் தத்தி நடக்கும் சூர்யா அபார்ட்மெண்ட்டுக்கு வருவதும், தப்பியோடுவதும், பின்பு மீண்டும் வருவதெல்லாம் நம்ப முடியாத கதையாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையோடு திரைக்கதையை அமைத்திருந்தால் படம் நன்று என்று சொல்லியிருக்கலாம்..!
RATING : 2.5 / 5
The post கடமையை செய் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்திற்குள்ளானது. அதில், அவருடைய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவும் படுகாயமடைந்தார்.
அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தார் அனைவரும் கவனித்து வருகிறார்கள். நேற்றைக்கு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதில் அவருடைய இரண்டு கால்களும் முறிந்துபோய் மாவுக் கட்டு போடப்பட்ட நிலையில் படுக்கையில் படுத்திருக்கிறார் யாஷிகா.
அவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாகவும், குடும்பத்தினர் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாஷிகா இன்னமும் குறைந்தது ஆறு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.
The post நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..! appeared first on Touring Talkies.
]]>The post “இனி வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வுடன்தான் வாழ்வேன்”-யாஷிகா ஆனந்தின் உருக்கமான அறிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா.
அந்தப் பதவில், “என் தற்போதைய நிலையை நான் விவரிக்கவே முடியாது. எனக்கு இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவுகள் மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்வெடுத்து வருகிறேன். எழுந்து நிற்கவோ… நடக்கவோ இன்னும் குறைத்து 5 மாதங்கள் ஆகும். தற்போது நாள் முழுவதும் பெட் ரிட்டர்னாக உள்ளேன். இயற்கை உபாதைகளைகூட பெட்டில்தான் கழிக்கிறேன்.
என்னால், இடது அல்லது வலது பக்கம் திரும்ப முடியாது. பல நாட்கள் இப்படியேதான் இருக்க வேண்டும். என்னுடைய பின் பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எதுவும் காயம் ஏற்படவில்லை. இது நிச்சயமாக எனக்கு மறு பிறப்பு என்றே உணர்கிறேன். கடவுள் என்னை தண்டித்துள்ளார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை.
நான் இனி வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன்தான் வாழ்வேன். பயங்கர விபத்தில் இருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா…? இல்லை என் உயிர் தோழியை எடுத்துக் கொண்டதற்காக பழி சொல்வதா..? என்று எனக்குத் தெரியவில்லை.
நான் பவானியை மிஸ் பண்ணுகிறேன். நீ என்னை மன்னித்துவிடுவாய் என தெரியும். ரொம்ப சாரி. உன் குடும்பத்தாரை இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் விட்டுவிட்டேன். ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் பண்ணுகிறேன். உயிருடன் இருப்பதற்காக எனக்குள் குற்ற உணர்ச்சியாக உள்ளது.
உன் ஆத்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன். நீ மீண்டும் என்னிடம் வர பிரார்த்தனை செய்கிறேன். ஒரு நாள் உன் குடும்பத்தார் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக இருந்த நினைவுகளை என்றும் கொண்டாடுவேன்.
நான் இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடப் போவது இல்லை. அதனால் ரசிகர்கள் யாரும் என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.
எல்லா எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து, அனைவரது பிரார்த்தனைகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும், அனைவரது அக்கறை மற்றும் அன்புக்கும் நன்றி…” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார் யாஷிகா.
The post “இனி வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வுடன்தான் வாழ்வேன்”-யாஷிகா ஆனந்தின் உருக்கமான அறிக்கை appeared first on Touring Talkies.
]]>The post நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு appeared first on Touring Talkies.
]]>யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செங்கல்பட்டு அருகேயிருக்கும் சூளேரிக்கேடு என்னும் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது அடையாறில் போர்ட்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் இந்த சாலை விபத்திற்குக் காரணமாக இருந்ததாக யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யாஷிகா ஆனந்த் நேற்று தனது தோழியான வள்ளிச்செட்டி பவானி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்தப் பார்ட்டியை முடித்துவிட்டு இரவில் சென்னைக்குத் திரும்பும்போது யாஷிகாவே காரை ஓட்டி வந்திருக்கிறார். அப்போதுதான் சாலையின் நடுவில் இருக்கும் செண்டர் மீடியாவின் மீது கார் மோதி அருகில் இருக்கும் பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.
சில நிமிடங்கள் கழித்து அந்தப் பக்கமாக காரில் சென்ற சிலர் இதைப் பார்த்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அருகில் இருக்கும் பூஞ்சேரி மருத்துவமனைக்கு இவர்களைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போதே யாஷிகாவின் தோழியான பவனி இறந்துவிட்டார்.
யாஷிகாவும், அவரது ஆண் நண்பர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அடையாறில் போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்ததாக யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் (279,337,304 A, அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும்விதமாக காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ்) செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
The post நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு appeared first on Touring Talkies.
]]>