The post “ஜெயக்கொடி.. படி படி!”: ராமை நினைத்து உருகும் இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி புத்தகப் பித்தர்.
இது குறித்து அவர் கூறியபோது, “வாழ்க்கையில ஒரு விசயத்தை சரியாக அணுக இந்த வாசிப்பு பழக்கம் உதவுகிறது. இந்த வாசிப்பு பழக்கத்தினால் சுயநலம் குறைந்திருக்கிறது; அறம் சார்ந்து வாழும் விருப்பம் ஏற்படுகிறது.
திரைப்படத்தின் கதையை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. கதாபாத்திரத்தை செம்மைப் படுத்தவும், வாசிப்பு உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கை என்பது சினிமா எடுக்கிறது இல்லை. வாசிக்கிறதுதான் வாழ்க்கை” என்கிறார்.
மேலும், “இந்த வாசிப்பு பழக்கத்துக்கு முக்கிய காரணம் இயக்குநர் ராம். அவரிடம் உதவியாளராக இருந்தாலே படிக்கும் ஆர்வம் தன்னால் ஏற்பட்டு விடும். எப்போதுமே, ‘படி.. படி’ என உதவியாளர்களை ஊக்கப்படுத்துவார். இதை வாசி என சொல்ல ஒரு குரு தேவை. அப்படி ஒரு குருவாக ராம் கிடைத்தார். அது ஒரு வரம்” என நெகிழ்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.
The post “ஜெயக்கொடி.. படி படி!”: ராமை நினைத்து உருகும் இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஊமைச் செந்நாய்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் புகழ் பெற்ற இவர் ‘பர்மா’, ‘நளனும் நந்தினியும்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர்.
கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவர் நடித்திருக்கும் முதல் படம் இது.
‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், ‘தெகிடி’, ‘தலைவி’ படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், ‘எமன்’ படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘ரேஞ்சர்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைப் பள்ளி மாணவரான சிவா இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அதுல் விஜய் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். ‘பட்டினப்பாக்கம்’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இவர் தற்போது ஆரி நடித்துவரும் ‘பகவான்’ படத்திலும் பணியாறியுள்ளார்.
‘துப்பறிவாளன்’ ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ உள்ளிட்ட பல படங்களில் ஆக்சன் இயக்குநராக பணியாற்றிய தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தில். சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநரான அர்ஜுன் ஏகலைவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
‘ஊமைச் செந்நாய்’ என்கிற தலைப்புக்கு ஏற்றபடி இந்தப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
ஆக்சனுக்கு முக்கியத்துவம் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு கன்டெய்னருக்குள்ளேயே நடக்கும் சண்டை காட்சியும் கிளைமாக்ஸில் சோளக்காட்டில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் காட்சியும் ஹைலைட்டாக இருக்கும். 35 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
The post க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஊமைச் செந்நாய்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>