The post “நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன்..” – நடிகையின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.
]]>இவர் நாயகியாக நடித்துள்ள படம் ‘மெய்ப்பட செய்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போதுதான் நடிகை மதுனிகா இப்படி பேசியுள்ளார்.
இந்த விழாவில் நடிகை மதுனிகா பேசும்போது, “இந்தக் கதை ரொம்பவே இண்டன்ஷாக இருந்தது. இதை இயக்குநர் என்னிடம் சொன்னபோது நான் பயந்துவிட்டேன். இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியுமா என்றுகூட தோன்றியது. ஆனால், இயக்குநர்தான் எனக்கு தைரியம் கொடுத்து “உங்களால் நடிக்க முடியும். நடியுங்கள்” என்றார்.
இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும்கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால், இந்த படம் அனைவரையும் கனெக்ட் செய்யும்…” என்றார்.
The post “நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன்..” – நடிகையின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.
]]>