Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பீஸ்ட் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sun, 16 Oct 2022 17:01:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பீஸ்ட் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..! https://touringtalkies.co/shocking-comment-about-the-film-beast-by-the-villain-of-the-film/ Sun, 16 Oct 2022 17:00:53 +0000 https://touringtalkies.co/?p=25516 இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. திரைக்கதை சரியில்லை என்றும், விஜய்க்கு வில்லனாக கவனம் ஈர்க்கும் நடிகரை போடவில்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட் அடித்திருந்தனர். இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் எதிர்பாராதவிதமாக மெகா ஹிட்டானது. இந்த சமயத்தில் நெல்சனை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு மட்டும் தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி திட்டித் தீர்த்தனர். “ஒரு இயக்குநர் […]

The post ‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

திரைக்கதை சரியில்லை என்றும், விஜய்க்கு வில்லனாக கவனம் ஈர்க்கும் நடிகரை போடவில்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட் அடித்திருந்தனர்.

இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் எதிர்பாராதவிதமாக மெகா ஹிட்டானது. இந்த சமயத்தில் நெல்சனை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு மட்டும் தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி திட்டித் தீர்த்தனர். “ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக நெல்சன் எல்லை மீறி விமர்சிக்கப்படுகிறார்” என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர்.

இதன் பின்பு இதே ‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகரான சாக்கோ சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி திரையுலகத்தில் விவாதமாகியுள்ளது.

தனியார் TV சேனல் ஒன்றுக்கு சாக்கோ அளித்த பேட்டியில், “பீஸ்ட் படம் தமிழிலேயே வெற்றி பெறவில்லை. எனக்கும் நல்ல அறிமுகமாக அமையவில்லை. நான் இன்னும் அந்த பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களையும், ட்ரோல்களையும்தான் பார்த்திருக்கிறேன்.

ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வருபவர் தான் சிரமப்படுவதை தன்னுடைய முகத்தில் ரியாக்ஷனாக காண்பிக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் ஏதோ ஒரு பேப்பரை அசால்ட்டாகத் தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார்.

இதுவெல்லாம் சேர்ந்துதான் படத்திற்கு நிறைய விமர்சனங்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக் குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

நடிகர் சாக்கோவின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையையும், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..! appeared first on Touring Talkies.

]]>
“அரசியலுக்கு வரத் தயார்” – நடிகர் விஜய் பேட்டி..! https://touringtalkies.co/vijays-sun-tv-interview-news/ Mon, 11 Apr 2022 09:58:00 +0000 https://touringtalkies.co/?p=21702 நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி நடிகர் விஜய்யின் தனிப்பட்ட பேட்டி நேற்று மாலை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநரான நெல்சனே விஜய்யிடம் கேள்விகளை கேட்டார். இந்தப் பேட்டியில் நடிகர் விஜய் பலவித கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது “நாளை என்னை தலைவனாகு என்று என் ரசிகர்கள் சொன்னால் அதுவும் நடக்கும்” என்று தெரிவித்தார். இதில் இருந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்குத் தயார் நிலையில் […]

The post “அரசியலுக்கு வரத் தயார்” – நடிகர் விஜய் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி நடிகர் விஜய்யின் தனிப்பட்ட பேட்டி நேற்று மாலை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநரான நெல்சனே விஜய்யிடம் கேள்விகளை கேட்டார்.

இந்தப் பேட்டியில் நடிகர் விஜய் பலவித கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது “நாளை என்னை தலைவனாகு என்று என் ரசிகர்கள் சொன்னால் அதுவும் நடக்கும்” என்று தெரிவித்தார்.

இதில் இருந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்குத் தயார் நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய் அளித்த பேட்டியின் தொகுப்பு இது :

“10 வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அப்போது அவர்கள் எழுதியது படிக்கும்போது வேற மாதிரியான அர்த்தத்தில் இருந்தது. அது எனக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இல்லை.

என குடும்ப உறுப்பினர்கள் உட்பட சிலர், “அந்தப் பேட்டியைப் படிக்கும்பொழுது தெனாவட்டா பேசுன மாதிரி இருந்துச்சு”ன்னு சொன்னாங்க. நான் உடனேயே சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, “நான் அப்படிச் சொல்லவில்லை” என்பதை விளக்கினேன். மேலும் என்னால், எல்லா நேரத்திலும் இது மாதிரி எல்லோருக்கும் விளக்கம் சொல்லிட்டிருக் முடியாதில்லையா…? அதனால்தான் சில காலம் பேட்டி கொடுக்காமல் விலகி இருந்தேன்.

எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கா.. இல்லையான்னு தெரிஞ்சுக்கவே முடியலைன்னு என் குடும்பத்தினர்கூட சொல்லுவாங்க. எனக்கும் சில சமயங்களில் கோபம் வரும். ஆனால், நான் பெரிதாக, வெளிப்படையாக ரியாக்ட் செய்ய மாட்டேன். நமது பிரச்சனைகளில் பெரும்பாலானவை கோபம் அல்லது வெறுப்பின்போது எடுக்கும் முடிவுகளிலிருந்துதான் வருகின்றன என்பத நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது என்னிடம் இருப்பது ஒரேயொரு கொள்கைதான். அது “எல்லாத்தையும் ஈஸியாக எடுத்துக்கணும்..!” அவ்வளவுதான்.

அப்பா என்பவர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாவுக்கும் கடவுளுக்கும் ஒரு வித்தியாசம்தான். கடவுளை நம்ம பார்க்கவே முடியாது. ஆனால், அப்பாவைப் பார்க்க முடியும். அதுதான் வித்தியாசம்.

எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு. துப்பாக்கி’ படப்பிடிப்பின்போது தேவாலயத்திற்கும், கோவில்களுக்கும், அமீன் பீர் தர்காவிற்கும் சென்றிருக்கேன். எல்லா இடங்களிலும் தெய்வீக உணர்வை உணர்ந்திருக்கிறேன்.

என் அம்மா ஒரு இந்து. என் அப்பா ஒரு கிறிஸ்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான் எங்கு செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்று ஒருபோதும் கட்டுப்படுத்தாத குடும்பத்தில் வளர்ந்தேன். நானும் என் குழந்தைகளுக்கும் இதைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

என் மகன் சஞ்சய் நடிப்பதை பார்க்க நானும்தான் ஆசைப்படுகிறேன். அதேசமயம், அவருக்கு அதில் விருப்பவில்லை என்றால் அதை வற்புறுத்தவும் மாட்டேன். ஒரு தடவை ‘பிரேமம்’ பட இயக்குநர் என் வீட்டுக்கு வந்தாரு. எனக்குத்தான் கதை சொல்ல வராருன்னு நினைச்சேன். ஆனால், அவரோ “உங்க பையன்கிட்ட கதை சொல்லணும்” என்று சொல்லி அந்தக் கதையைச் சொன்னாரு. அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சஞ்சய் ஒத்துக்கணும்ன்னு நினைத்தேன். ஆனால் அவன் சினிமாவில் கால் வைக்க கொஞ்சம் கால அவகாசம் கேட்டான். அவன் எது பண்ணிணாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் எந்தவிதத்திலும் அவனை வற்புறுத்தவில்லை.

இன்று எனது ரசிகர்கள் நான் தளபதியாக’ ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாளை நான் ‘தலைவனாக’ இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதுவும் அப்படியே நடக்கும்…” என்றார் நடிகர் விஜய்.

The post “அரசியலுக்கு வரத் தயார்” – நடிகர் விஜய் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
“KGF-2′, ‘பீஸ்ட்’ இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும்” – நாயகன் யஷ்ஷின் விருப்பம்..! https://touringtalkies.co/kgf-2-and-beast-both-have-to-win-man-yashs-wish/ Tue, 29 Mar 2022 07:52:19 +0000 https://touringtalkies.co/?p=21439 ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.- சாப்டர்-2’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் […]

The post “KGF-2′, ‘பீஸ்ட்’ இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும்” – நாயகன் யஷ்ஷின் விருப்பம்..! appeared first on Touring Talkies.

]]>
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.- சாப்டர்-2’

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பெங்களூரூவில் ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின் நிகழ்வை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

கே.ஜி.எஃப்.-சாப்டர்-2’ முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோம்பாலே பிலிம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்ததூர் நன்றி தெரிவித்தார்.

இந்தப் பிரம்மாண்டமான விழாவில், கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

‘கே.ஜி.எப்.சாப்டர்-2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்த விழாவில் இந்தப் படத்தைத் தமிழில் வெளியிடும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவன தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், “இந்த ‘கே.ஜி.எஃப்.-சேப்டர்-2 படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படத்தை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கௌரவம். இந்தப் படம் நாடு முழுவதும் பெரியதொரு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. யஷ் கடினமாக உழைத்து, அருமையான படைப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கான வெற்றியாக இந்த படம் அமையும்…” என்றார்.

இந்தப் படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரிதிவிராஜ் பேசுகையில், “இந்த
கே.ஜி.எப்.-சேப்டர்-2’ படத்தை ஏப்ரல் 14-ம் தேதி திரைரங்குகளில் காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அண்மையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள கேரளா வந்திருந்த நடிகர் யஷ்ஷை நான் சந்தித்தேன். அப்போது, இந்த “கே.ஜி.எஃப்.-சேப்டர்-2’ படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும்” என நான் அவரை வற்புறுத்தினேன். ஏனெனில் எனக்கு இந்தப் படத்தின் வெற்றியில் உறுதியான நம்பிக்கை இருந்தது.

‘கே.ஜி.ஃப்’ படத்தின் முதல் பாகம் புதிய டிரெண்டை உருவாக்கி, இந்தியா முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தென்னிந்திய சினிமாவுக்கு இது பெருமையான தருணம். இந்திய திரை உலகினர் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. பாலிவுட், மோலிவுட், கோலிவுட் டோலிவுட் என எல்லா வுட்களும் இருக்கட்டும். இருப்பினும் எல்லா தடைகளையும் உடைத்து, கை கோர்த்து, இந்தியாவிற்கான திரைப்படத்தை படைப்போம்.” என்றார்.

கே.ஜி.எஃப்.-சேப்டர்-2’ படத்தில் ஒரு முக்கிய நடித்திருக்கும் நடிகை ரவீனா டாண்டன் பேசுகையில், “இயக்குநர் பிரஷாந்த் நீல் முழுமையான ஜென்டில்மேன். அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு அற்புதமான தருணமாக இருந்தது. முழுமை பெற்ற தொழில் முறையிலான படைப்பாளி பிரசாந்த்.

யஷ் ஒரு அற்புதமான மனிதர். படப்பிடிப்புத் தளங்களில் எங்களை சவுகரியமாக பணியாற்றுவதை உணர வைத்தார். யஷ் ஒரு அழகான நடிகராகவும், எப்போதும் நகைச்சுவையுடன் பேசும் மனிதராகவும் இருந்து வருகிறார்.

இந்தப் படம் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அர்ப்பணிப்பு மற்றும் தொழில் முறையிலான குழுவினருடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்றும்போது அனைவரும் ஒரு குடும்பம் என்பதை  புரிய வைத்தது…” என்றார்.

படத்தின் நாயகியான ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ”2016-ம் ஆண்டில் இப்படத்திற்காக கையெழுத்திட்டேன். அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். படத்தின் மூலம் பயணித்த  பயணம் மறக்க முடியாததாக இருந்தது. எனக்கு சிறந்த சக நடிகராக இருந்த யஷ்சுக்கு நன்றி. ஒட்டு மொத்த படக் குழுவினரும் அயராது உழைத்து நல்ல படைப்பை கொடுத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் படத்தை வியந்து பார்த்து ரசிப்பார்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ”கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் பாகத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்து, கன்னட சினிமாவை இந்திய திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்ததற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

நாங்கள் இந்த ‘கே.ஜி.எஃப்.’ பயணத்தைத் தொடங்கி எட்டு வருடங்கள் நிறைவடைகிறது. சொல்ல முடிந்த அனைத்தையும் இந்தப் படத்தில் கதையாக சொல்லி இருக்கிறேன். அனைவரும் படம் பார்க்கும்வரை என்னால் காத்திருக்க இயலாது.

என்னுடன் சிறந்த தொழில் நுட்பக் குழுவினர் இருக்கிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் இந்த கே.ஜி.எஃப்.’ படைப்பு உருவாக சாத்தியமில்லை என்று உறுதியாகக் கூறுவேன். ‘கே.ஜி.எப்.சாப்டர்-2’ படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடுபவர்களுக்கும் நன்றி.

நாங்கள் தேர்ந்தெடுத்த நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார்கள். அவர்களின் நடிப்பால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். இந்த ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

இந்த ‘கே.ஜி.எஃப்.-சேப்டர்-2’ படம் ஏப்ரல் 14 அன்று தேதியன்று வெளியாகும்போது, படத்தின் நாயகனான யஷ், “ஏன் ‘ராக் ஸ்டார்’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்..?” என்பது அனைவருக்கும் தெரிய வரும்.

யஷ் அனைத்து அம்சங்களும் அடங்கிய நவீன செல்போன் போன்றவர். அவர் என்னை நன்றாக வளர்த்தார். எனக்கு நம்பிக்கை கொடுத்தார். பல இடங்களில் வசனம்கூட எழுதினார். அவரும் நன்றாக நடித்து, தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.  

கடந்த எட்டு ஆண்டுகளில் கே.ஜி.எஃப்.-2’ படத்தின் அனைத்து நல்ல விஷயங்களையும் மறைந்த டாக்டர் புனித் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் எங்களின் பெருமை..” என்றார்.

படத்தின் நாயகன் யஷ் பேசுகையில், ”இப்போது புனித் ராஜ்குமாரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். அவருக்கு எனது அஞ்சலி. ஹோம்பாலேயின் பயணம் புனித் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் நானும் சிறிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறேன்.

இப்படத்தின் மூலம் கிடைக்கும் எல்லா புகழும் என்னுடைய கன்னட சினிமாவுக்கும், தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சேர வேண்டும். அத்துடன் ஹோம்பாலே பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் எங்களது கனவுகளை நனவாக்க நல்லதொரு வாய்ப்பை வழங்கினார்கள்.

இது பிரசாந்த் நீலின் படம். அதில் நான் ஒரு பகுதியாக இருந்தேன். அவ்வளவுதான். அவர் கதாநாயகர்களை நேசிக்கிறார். ஒவ்வொரு படைப்பாளிகளும் முன்னணி நடிகர்களை நேசிக்கும்போது அவர்களிடமிருந்து சிறந்தவற்றை பெறுகிறார்கள்.

ரவீனா தாண்டன் ஒரு அற்புதமான நடிகை. சஞ்சய்தத் ஒரு சிறந்த போராளி. தன்னுடைய உடல் நல சிக்கல்களுக்கு இடையில் சண்டைக் காட்சிகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, படத்தை ஒப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றார். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஐந்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்த என் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நன்றி. அவரின் முதல் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது அதிர்ஷ்டம்தான். படத்தில் பணியாற்றிய நடிகை மாளவிகாவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

கே.ஜி.எஃப்.’ படமும், ‘பீஸ்ட்’ படமும் போட்டிக்காக ஒரே நாளில் வெளியாகவில்லை. இதில் ‘கே.ஜி.எஃப்.Vs பீஸ்ட்’ என்பதெல்லாம் கிடையாது. இதனை ‘கே.ஜி.எஃப்.’  மற்றும் ‘பீஸ்ட்’ என்றுதான் பார்க்க வேண்டும்.

இது ஒன்றும் தேர்தல் கிடையாது. தேர்தலில்தான் ஒருவரின் வாக்கை வாங்க சண்டை நடக்கும். இது சினிமா. சினிமாவில் என்னுடைய படத்தையும் பார்க்கலாம். விஜய் சாரின் படத்தையும் பார்க்கலாம். இத்தனை நாளாக மக்களை என்டர்டெயின் செய்து விஜய் சார் ஒரு பெரிய ஸ்டாராக உள்ளார். நாம் அனைவரும் அவரை மதிக்க வேண்டும். அவர் எனக்கு சீனியர். அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.

நாங்கள் ஒரு பான் இந்தியா படத்தை எடுத்துள்ளோம். மேலும், 8 மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். நாங்கள் திட்டமிட்ட தேதியில் எந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று அப்போது எங்களுக்கு தெரியாது. எனவே ‘கே.ஜி.எஃப்.vs பீஸ்ட்’  என்று ஒப்பிடுவதைவிட இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்லலாம்.

நானும் ‘பீஸ்ட்’ படத்தைப் பார்ப்பேன். விஜய் சாரின் ரசிகர்களுக்கும் ‘கே.ஜி.எஃப்.’ நிச்சயம் பிடிக்கும். அனைவரும் சேர்ந்து இரண்டு படங்களையும் பார்த்து இந்திய சினிமாவை கொண்டாடுவோம்…” என்று தெரிவித்துள்ளார்.

The post “KGF-2′, ‘பீஸ்ட்’ இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும்” – நாயகன் யஷ்ஷின் விருப்பம்..! appeared first on Touring Talkies.

]]>
சிவகார்த்திகேயனை பாராட்டிய நடிகர் விஜய்…! https://touringtalkies.co/actor-vijay-praises-sivakarthikeyan/ Tue, 08 Mar 2022 14:07:38 +0000 https://touringtalkies.co/?p=21136 நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்தில் யூடியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.  இந்த நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் “பீஸ்ட்’ படத்தில் நீங்கள் எழுதிய ‘அரபிக் குத்து’ […]

The post சிவகார்த்திகேயனை பாராட்டிய நடிகர் விஜய்…! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியான குறுகிய காலத்தில் யூடியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 

இந்த நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் “பீஸ்ட் படத்தில் நீங்கள் ழுதிய ‘அரபிக் குத்து’ பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார்..?” என்று கேள்வி கேட்கப்பட்டது.  

அதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், “அரபிக் குத்து பாடலை முன்பேயே படமாக்கிவிட்டார்கள். அதனால் பாடல் குறித்து விஜய் சாரின் கருத்தை என்னால் அப்போது தெரிந்து கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் அந்தப் பாடலுக்கான ப்ரமோ வடியோவை படமாக்கினோம். அப்போதுதான் விஜய் சார் தொலைபேசியில் என்னை அழைத்து, “சூப்பர்பா.. எழுதிக் கொடுத்ததற்கு நன்றிப்பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே..?” என்று பாராட்டினார்.

அரபிக் குத்து’ பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. முதல்முறை கேட்டதுமே “இது நிச்சயம் பெரிய பெரிய ஹிட்டாகும்…” என்று இசையமைப்பாளர் அனிருத்திடம் விஜய் சார் கூறியிருக்கிறார்..” என்று சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். 

The post சிவகார்த்திகேயனை பாராட்டிய நடிகர் விஜய்…! appeared first on Touring Talkies.

]]>
மதுவுக்கு விளம்பரம் செய்த ‘பீஸ்ட்’ பட நாயகி..! https://touringtalkies.co/beast-movie-heroine-make-a-advt-for-whisky-brand/ Tue, 30 Nov 2021 07:24:49 +0000 https://touringtalkies.co/?p=19641 இந்தியாவில் குடி பழக்கம் என்பது இப்போது சர்வசாதாரணமானதுதான். அதிலும் சினிமாவுலகத்தில் அந்தப் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பார்கள். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பேதமில்லாமல் இருக்கிறது. தென்னிந்திய சினிமாவைவிடவும் வட இந்திய சினிமாக்களில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு மது பழக்கம் என்பது தண்ணி குடிப்பது போலத்தான். இருந்தும் இதுநாள்வரையிலும் யாரும் மதுவுக்கு விளம்பரம் செய்ததில்லை. அதிலும் நடிகைகள் யாரும் மது பிராண்டிற்கு விளம்பரத் தூதுவராக இருந்ததில்லை. ஆனால், இப்போது முதல்முறையாக அந்த கட்டுப்பாட்டை உடைத்திருக்கிறார் […]

The post மதுவுக்கு விளம்பரம் செய்த ‘பீஸ்ட்’ பட நாயகி..! appeared first on Touring Talkies.

]]>
இந்தியாவில் குடி பழக்கம் என்பது இப்போது சர்வசாதாரணமானதுதான். அதிலும் சினிமாவுலகத்தில் அந்தப் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பார்கள். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பேதமில்லாமல் இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவைவிடவும் வட இந்திய சினிமாக்களில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு மது பழக்கம் என்பது தண்ணி குடிப்பது போலத்தான். இருந்தும் இதுநாள்வரையிலும் யாரும் மதுவுக்கு விளம்பரம் செய்ததில்லை. அதிலும் நடிகைகள் யாரும் மது பிராண்டிற்கு விளம்பரத் தூதுவராக இருந்ததில்லை.

ஆனால், இப்போது முதல்முறையாக அந்த கட்டுப்பாட்டை உடைத்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தன்னுடைய இண்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ‘ரெட் லேபில்’ என்ற மது பிராண்ட்டிற்கு தானே விளம்பரம் செய்திருக்கிறார்.

மதுவை கிளாஸில் ஊற்றி ஐஸ் போட்டு, சோடா ஊற்றி வைத்துவிட்டு டான்ஸூம் ஆடுகிறார் பூஜா ஹெக்டே.

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உட்பட பல இணையத்தள வாசிகளும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

“மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்று மத்திய, மாநில அரசுகள் உட்பட பல தரப்பினரும் அறிவுறுத்தி வரும் வேளையில் சமூகப் பொறுப்புள்ள நடிகை ஒருவர் இப்படி செய்யலாமா என்று பலரும் பூஜாவைக் கண்டித்து எழுதி வருகிறார்கள்.

‘பிசாசு’ படத்தின் மூலமாக சினிமாவுலகத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பின்பு தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகிவிட்டார். தற்போது விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுவுக்கு விளம்பரம் செய்த ‘பீஸ்ட்’ பட நாயகி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது https://touringtalkies.co/filming-of-actor-vijays-beast-has-started/ Thu, 01 Jul 2021 08:41:29 +0000 https://touringtalkies.co/?p=15897 நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. இது அவரது 65-வது படமாகும். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் யோகி பாபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கடந்த மாதம் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 17 நாட்கள் நடைபெற்றது. அப்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் படப்பிடிப்பை சுருக்கமாக […]

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. இது அவரது 65-வது படமாகும். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் யோகி பாபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

கடந்த மாதம் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 17 நாட்கள் நடைபெற்றது. அப்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் படப்பிடிப்பை சுருக்கமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்கள் படக் குழுவினர்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

இந்தப் படப்பிடிப்பில் விஜய்-பூஜா ஹெக்டே டூயட் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக பூஜா ஹெக்டே சில நாட்களுக்கு முன்பிருந்தே ஒத்திகை பார்த்து வந்தார். நேற்று இரவுதான் பூஜா ஹெக்டே சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

தற்போது சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் பலத்த பாதுகாப்புடன் இந்தப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் பங்கு பெறும் அத்தனை பேரும் கொரோனா தடுப்பூசி இரண்டு முறையும் போட்டுக் கொண்டுதான் வர வேண்டும் என்று முன்பேயே சொல்லியிருக்கிறார்களாம்.

இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? https://touringtalkies.co/actor-vijays-next-movie-title-was-beast/ Mon, 21 Jun 2021 13:46:16 +0000 https://touringtalkies.co/?p=15678 நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ […]

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைக்கப் போவதாக சில செய்திகளை இணையத்தில் கசிய விட்டிருந்தார்கள். ஆனால் இப்போது மாறுபட்ட ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’, ‘புலி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ என்று கவன ஈர்ப்புடன் கூடிய பெயர்களையே கடந்த சில படங்களுக்கு சூட்டி வந்த விஜய், இந்தப் படத்திலும் அதே மாதிரியான பெயரை ஆனால் ஆங்கிலத்தில் அப்படியே வைத்திருக்கிறார். ‘பீஸ்ட்’ என்றால் தமிழில் ‘மிருகம்’ என்று அர்த்தம். ‘மிருகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஆதி நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருப்பதால் அதே தலைப்பை வைக்க விருப்பமில்லாமல் ஆங்கிலப் பெயரையே வைத்து விட்டார்கள்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – கிரண், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – ஜானி, உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், வி.சாய், ஒப்பனை – பி.நாகராஜன், வி.எஃப்.எக்ஸ் சூப்பர்வைஸர் – அற்புதராஜ், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹமது, புகைப்படங்கள் – மானெக்சா, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, நிர்வாகத் தயாரிப்பு – ஆர்.உதயகுமார், எழுத்து, இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.

இந்தப் பெயர் விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா, பிடிக்கிறதா.. பிடிக்கவில்லையா என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியும்.

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? appeared first on Touring Talkies.

]]>