The post “ரமணா-நந்தா மாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் 8-வது மாடியில் இருந்தே குதிக்கலாம்” – விஷால் பேச்சு appeared first on Touring Talkies.
]]>வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிளாஸோ தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த ‘லத்தி’ படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.
இந்த விழாவில் நடிகர் விஷால் பேச வரும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “புரட்சி தளபதி வாழ்க” என்றார்கள். அப்போது குறுக்கிட்ட நடிகர் விஷால், “இது வேண்டாம்.. நான் தளபதியும் அல்ல; புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவுதான்..” என்று சொல்லிவிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.
“இந்த ‘லத்தி’ திரைப்படம் நான்கு மொழிகளில் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.
சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.
லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்.
இந்தப் படத்தின் இயக்குநரான வினோத் என்னிடம் கதை சொல்லி எட்டு நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், என்னிடம் கதையைச் சொல்லும்போது “நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா..” என்றார். கதையைக் கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.
படப்பிடிப்பில் நான் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.
45 வயதில், 32 படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4-வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ்விடம் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கு என்று அவனுடைய அம்மா, அப்பாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன்.. எந்தக் குழந்தையாலும் அவனை மாதிரி நடித்திருக்கவே முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.
ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் எனக்குக் கிடைத்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்குத்தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4-வது மாடின்னு இல்லை.. 8-வது மாடியில் இருந்தும்கூட குதிக்கலாம்.
நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள்…” என்றார்.
The post “ரமணா-நந்தா மாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் 8-வது மாடியில் இருந்தே குதிக்கலாம்” – விஷால் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post “இந்தியாவிலேயே நான்தான்…!” கருணாஸ் பெருமிதம் appeared first on Touring Talkies.
]]>நேற்று இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் பெற்ற வாழ்த்துகளில்யே மிகப்பெரிய வாழ்த்து என இயக்குநர் சுந்தர் சி கூறியதை நினைவு கூர்ந்தார்.
“ஒரு முறை இயக்குநர் சுந்தர் சி அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர், ‘ஹீரோவாக, வில்லனாக முத்திரை பதிப்பது எளிது. பல பேர் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தது உண்டு. ஆனால் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகம் ஆகும் நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக.. சில – பல படங்களில் நடித்து, மெல்ல மெல்லத்தான் ரசிகர்களின் மனதைக் கவர முடியும்.
ஆனல் தமிழில்.. ஏன் இந்திய அளவிலேயே, நீதான், முதல் படத்திலேயே அதிரடியாக காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்துவிட்டாய்’ என்றார்.
காதல், அதிரடி, சென்டிமெண்ட் என அத்தனை உணர்வுகளையும் தனது படங்களில் சிறப்பாக வெளிப்படுத்துபவர் சுந்தர் சி. நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவர் இப்படி பாராட்டியதை வாழ்நாளில் மறக்க மாட்டேன்” என நெகிழ்ந்து கூறினார் கருணாஸ்.
The post “இந்தியாவிலேயே நான்தான்…!” கருணாஸ் பெருமிதம் appeared first on Touring Talkies.
]]>The post அமீருக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான் appeared first on Touring Talkies.
]]>
அமீரும், பாலாவும் பால்ய நண்பர்கள். 1980களில் மதுரையில் இருந்து சென்னைக்கு இருவரும் வந்தனர். பாலா, பாலுமகேந்திராவிட உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டார். அமீர் மீண்டும் மதுரைக்கே திரும்பி விட்டார். 10 வருடங்கள் உதவி இயக்குநராக இருந்த பாலா, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, சேது படத்துக்கு இயக்குநர் ஆகிறார்.
இதனை அவர், அமீருக்கு தெரிவிக்க அவரும் உற்சாகத்துடன் சென்னை வருகிறார். சேது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.
பல பிரச்சினைகள் ஏற்பட.. அதையெல்லாம் கடந்து படம் வெளியாகி பெரும் வெற்றி பெறுகிறது.
தொடர்ந்து அடுத்த படங்கள்.
சூர்யாவை வைத்து பாலா இயக்கிய நந்தா படம் உருவாகிறது. அதன் படப்பிடிப்பின் இடையே ஏதோ காரணத்தால் அமீர் விலகுகிறார்.
இனி திரைத்துறையே வேண்டாம் என்கிற அளவுக்கு விரக்தியில் இருக்கிறார்.
நந்தா படத்தின் தயாரிப்பாளர், அமீரை அழைத்து”படப்பிடிப்பின்போதே உங்கள் பணியை கவனித்தேன். சிறப்பாக உழைத்தீர்கள். உங்கள் முதல் படத்தை நான் தயாரிக்கிறேன்” என்று சொல்லி ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அப்படி உருவானதுதான் அமீர் இயக்கிய முதல் படமான, மவுனம் பேசியதே.
நாம் விரும்பும்போது விலகுவதும், விலகும் போது நெருங்கி வருவதும்தான் காலத்தின் அதிசயம் போலும்!
The post அமீருக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான் appeared first on Touring Talkies.
]]>