Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sat, 13 Nov 2021 07:15:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது https://touringtalkies.co/actor-mammoottys-new-movie-shooting-held-near-palani/ Sat, 13 Nov 2021 07:14:30 +0000 https://touringtalkies.co/?p=19371 மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்முட்டி தற்போது தமிழகத்தில் பழனி அருகே ஒரு கிராமத்தில் நடைபெறும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி வருகிறார். இயக்குநர் லிஜோ  ஜோஸ்  பெல்லிசேரி ஏற்கெனவே  ‘ஆமென்’,  ‘அங்கமாலி  டைரிஸ்’, ‘இ.ம.யோ’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில், ‘ஜல்லிக்கட்டு’  திரைப்படம்  இந்தியா  சார்பில்,  சிறந்த  வெளிநாட்டு  திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.  தற்போது மம்மூட்டி நடிப்பில் […]

The post நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது appeared first on Touring Talkies.

]]>
மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்முட்டி தற்போது தமிழகத்தில் பழனி அருகே ஒரு கிராமத்தில் நடைபெறும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி வருகிறார்.

இயக்குநர் லிஜோ  ஜோஸ்  பெல்லிசேரி ஏற்கெனவே  ‘ஆமென்’,  ‘அங்கமாலி  டைரிஸ்’, ‘இ.ம.யோ’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இதில், ‘ஜல்லிக்கட்டு’  திரைப்படம்  இந்தியா  சார்பில்,  சிறந்த  வெளிநாட்டு  திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். 

தற்போது மம்மூட்டி நடிப்பில் இந்த  ‘நண்பகல்  நேரத்து  மயக்கம்’  என்ற  படத்தை  உருவாக்கி வருகிறார். இது  தமிழ்,  மலையாளம்  என்று இரு  மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. 

இந்தப் படத்தை நடிகர் மம்முட்டியே தனது  மம்மூட்டி கம்பெனி  என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தின்  சார்பில்  தயாரிக்கிறார். 

இந்த ‘நண்பகல்  நேரத்து  மயக்கம்’  படத்தின்  திரைக்கதையை  எஸ்.ஹரிஷ்  எழுத,  தேனி  ஈஸ்வர்  ஒளிப்பதிவு  செய்கிறார்.  இவர்  ‘கர்ணன்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பேரன்பு’, ‘புழு’ ஆகிய உள்ளிட்ட பல முக்கியமான  படங்களுக்கு  ஒளிப்பதிவு  செய்தவர். 

இந்த ‘நண்பகல்  நேரத்து  மயக்கம்’  படத்தின்  படப்பிடிப்பு  தற்போது பழனி அருகேயிருக்கும் ஒரு கிராமத்தில்  நடந்து  வருகிறது.  மம்முட்டி  படப்பிடிப்பில்  கலந்து  கொண்டு நடித்து வருகிறார்.  ஒரே  ஷெட்யூலில்  படத்தை  முடிக்க  திட்டமிட்டுள்ளனர்.

இயக்குநர் லிஜோ  ஜோஸ்  பெல்லிசேரியின்  முதல்  நேரடி  தமிழ்ப்  படம் இது என்பதால் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு  ஏற்பட்டிருக்கிறது. 

The post நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது appeared first on Touring Talkies.

]]>