The post “விஜயகாந்த் மிகச் சிறந்த மனிதர்” – நடிகை ராதா பாராட்டு appeared first on Touring Talkies.
]]>‘கேப்டன்’ விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும்போது நடிகை ராதா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ராதா தனது வாழ்த்துச் செய்தியில், “தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் விஜயகாந்த்..!
ஒரு சிறந்த கிராமத்து அழகான மனிதர். அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் நல்ல இதயம் கொண்டவர்..! அவருடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே எனக்கும், அவருக்குமே ஒரு குறிப்பிடத்தக்க அனுபவம். உண்மையில் அவர் உள்ளத்தளவில் நல்ல மனிதர்..! அவர் நல்ல உடல் நலன் பெறவும், சந்தோஷமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் ராதா.
நடிகை ராதாவும், விஜயகாந்தும் ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘உழவன் மகன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘மீனாட்சி திருவிளையாடல்’, ‘மனக்கணக்கு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
The post “விஜயகாந்த் மிகச் சிறந்த மனிதர்” – நடிகை ராதா பாராட்டு appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா.
அப்போது நான் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அது தவிர ஏராளமான படங்களுக்கு பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக பல இளைஞர்கள் கியூவில் காத்துக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் அவரே என்னை உதவி இயக்குநராக சேரும்படி அழைக்கிறார் என்றால் அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்து உடனடியாக அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் அடையாளம் தந்த ஒரு படமாக அமைந்தது. கார்த்திக், ராதா, தியாகராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான அந்த படத்தில்தான் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பாளர் ஆக அறிமுகமானார்.
நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படமும் இதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான்.
இந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் கதாநாயகியாக ராதா தேர்வானதும் கதாநாயகனாக நடிப்பதற்கும் அந்தப் படத்திலே மிக முக்கிய வேடமாக அமைந்திருந்த கதாநாயகி மேரியின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் அப்போது பாலிடார் என்ற இசைக் கம்பெனியின் சென்னைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆகவே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோரோடு அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது.
ஒரு நாள் பாஸ்கரோடு அவர் பாரதிராஜாவைப் பார்க்கப் போனபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. “என்ன அவரையே பார்த்துக்கிட்டிருக்கே. அவரை படத்தில நடிக்க வைக்கப் போறியா..?” என்று இளையராஜாவின் அண்ணனும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் கேட்க “அதைத்தான் யோசிக்கிறேன். மேரியின் அண்ணனாக இவரை நடிக்க வைத்தால் எப்படியிருக்கும்…?” என்றார் பாரதிராஜா. அப்படி சொன்னதையே செய்தார் பாரதிராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தியாகராஜனே தேர்வானார்.
அடுத்து கதாநாயகனுக்கான வேட்டை தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடியும் அந்தக் கதைக்கேற்ற நாயகன் கிடைக்கவில்லை.
படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் பாரதிராஜா.
அதையடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த பையனைக் காட்டினார் அவர். என்ன காரணத்தாலோ… என் மனதுக்கு அந்தப் பையன் ‘அலைகள் ஓய்வதில்லை’யின் விச்சுவின் பாத்திரத்திற்கு சரியாக இருப்பான் எனத் தோன்றவில்லை.
அதை நான் இயக்குநரிடம் சொன்னபோது, “ஷூட்டிங் எல்லாம் நிச்சயமாகி விட்டது. பரவாயில்லை விடு. இவனே இருக்கட்டும்…” என்றார்.
“இவ்வளவு நாள் பொறுத்துவிட்டோம். இன்று ஒரு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம். பையன் சரியாக அமையவில்லை என்றால்… நாளை இவனையே கதாநாயகனாக முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்…” என்றேன் நான்.
ஒரு வருடம் ஓடிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முழுக்க, முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து சாதனை புரிந்த பாரதிராஜா பெருந்தன்மையோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரிடமுள்ள தனிக் குணம். சாதாரணமாக எல்லா இயக்குநர்களிடமும் பார்க்க முடியாத பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் அவர்.
மீண்டும் கதாநாயகன் வேட்டை தொடங்கியது. இந்த முறை எங்களுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.சி.பிரகாஷும் சேர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடி அலைந்து விட்டு மாலையில் எழும்பூரில் அமைந்துள்ள ஹாசன் மெமோரியல் பள்ளியின் வாசலுக்கு சென்ற நாங்கள் மூவரும் வகுப்புகள் விட்டு வெளியே வரும் மாணவர்களில் யாராவது தேறுவார்களா என்று பார்த்தோம். ஆனால், அதிலும் யாரும் தேறவில்லை.
பின்னர் காபி சாப்பிடுவதற்காக மூவரும் அட்லாண்டிக் ஹோட்டலுக்குப் போனபோது காரை ஓட்டியவர் பாரதிராஜா. அவர் அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். அட்லாண்டிக் ஓட்டல் அருகே போனபோது சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா.
போயஸ் தோட்டத்தில் தன் வீட்டுக்கு அருகே தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருப்பதாக ஆர்.சி.பிரகாஷ் கூறவே அந்தப் பையனுக்கு முதலுதவி செய்வதற்காக அந்த டாக்டரின் இல்லத்துக்கு சென்றோம்.
அந்த டாக்டரின் வீடு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளது. சிகிச்சை முடிந்து அந்த பையனை அட்லாண்டிக் ஹோட்டல் அருகே இறக்குவதற்காக நாங்கள் காரில் சென்றபோது கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள நடிகர் முத்துராமனின் வீட்டுக்கு பக்கத்தில் நண்பர்களுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார் பின்னாளில் ‘கார்த்திக்’ என்ற பெயரில் அறிமுகமான ‘முரளி’.
கார் அந்தப் பக்கம் சென்ற கண நேரத்தில் அவரைப் பார்த்த பாரதிராஜாவின் கண்களுக்கு… அந்த முரளிக்கு உள்ளே இருந்த நடிகன் எப்படித்தான் தெரிந்தானோ..? காரை கொஞ்சம் பின்னால் ஓட்டச் சொன்னார் “யார் அந்தப் பையன்?” என்று என்னிடம் கேட்டார்.
முத்துராமன் எனது நெருங்கிய நண்பர் என்பதால் முரளியை ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆகவே, “அது நடிகர் முத்துராமனின் மகன்” என்று அவருக்கு சொன்னேன். பின்னர் அந்த பையனை அழைக்கச் சொன்னார். நான் முரளியை அழைத்துப் பேசிக் கொண்டிருக்க… அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த முரளியின் முக பாவங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு “அப்பா வீட்டில் இருக்கிறாரா…?” என்று பாரதிராஜா முரளியிடம் கேட்டபோதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் முரளிதான் என்று எனக்குப் புரிந்துவிட்டது.
அப்பா சினிமாவிற்குப் போயிருப்பதாக முரளி சொன்னவுடன் ஆர்.சி.பிரகாஷ் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதி முரளியிடம் கொடுத்து முத்துராமன் வந்தவுடன் அந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ஆர்.சி.பிரகாஷ் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலைக்கு மிக அருகில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருந்ததால் அவரது வீட்டில் முத்துராமனின் டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தோம். “மிகவும் வித்தியாசமான முகம். அது மட்டும் இல்லாமல் பையன் துருதுருவென்று இருக்கிறான். ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையின் நாயகன் விச்சுவிற்கு இவன் மிக பொருத்தமாக இருப்பான்…” என்றார் பாரதிராஜா.
இரவு பத்து மணியளவில் முத்துராமனிடமிருந்து போன் வந்தது. உடனேயே எங்களை வரச் சொன்னார். அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றவுடன் வழக்கம்போல உற்சாகமாக எங்களை வரவேற்றார் முத்துராமன். “முரளியை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று அவரிடம் பாரதிராஜா சொன்னபோது முதலில் அவரால் அதை நம்பவே முடியவில்லை. “இவனையா” என்று திரும்பத் திரும்பக் கேட்டார் என்றாலும் பாரதிராஜா தனது மகனைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
பின்னர் முரளியின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் பாரதிராஜாவோடு பகிர்ந்து கொண்ட முத்துராமனும் அவரது மனைவியும் “பையனை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். இனி அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு” என்று சொல்ல “இனி அவனைப் பற்றிய கவலையை நீங்கள் விட்டு விடுங்கள். அவனை ஹீரோவாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் பாரதிராஜா.
படத்தில் நடிப்பதற்கு முரளி தனது தந்தையிடம் விதித்த ஒரே நிபந்தனை அவர் படப்பிடிப்பைப் பார்க்க வரக்கூடாது என்பது மட்டுமே. அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார் முத்துராமன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனது மனைவியுடன் நாகர்கோவிலுக்கு வந்த அவர் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வரவேயில்லை. ஹோட்டலிலேயே ஒரு நாள் மகனுடன் தங்கிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.
கதாநாயகனாக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு ஏற்பாடுகளுக்காக பாரதிராஜா புறப்பட்டுவிட அதற்கு அடுத்த நாள் காலையில் நானும், முரளியும் விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம்.
நாகர்கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டம் என்னும் கடற்கரை கிராமத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
பாரதிராஜாவால் ‘கார்த்திக்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த முரளியை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் விச்சுவாக கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தார் பாரதிராஜா.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், கலைஞர் கருணாநிதி உட்பட பல அறிஞர் பெருமக்கள் அந்தப் படத்தைப் பாராட்டக் காரணமாக அமைந்தது.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்கும் மேலாக பாரதிராஜாவைப் பாராட்டிய ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்., ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளையும், தொழில் நுணுக்கக் கலைஞர்களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை எடுத்தார்.
அந்த விழாவிலே அந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது ராசிக் கரங்களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கினார் அவர்.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டப்பட்ட ஒரே திரைப்படம் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ மட்டுமே.
இப்படி மிகச் சிறந்த பாராட்டுக்களை அவருக்குப் பெற்றுத் தந்த அந்தப் படத்தை உருவாக்கும்போது பாரதிராஜா சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.
அதற்குக் கரணம் என்ன…?
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா. அவருக்கு முன்பாக தொடர்ந்து அத்தனை வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகத்தில் எவரும் கொடுத்தது இல்லை.
அந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு பாரதிராஜாவுடன் அவரது முதல் படத்திலிருந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஒரு இயக்குநரின் கதாப்பாத்திரத்தில் நடித்தார் அவர். ஒரு கால கட்டத்தில் தெலுங்குப் பட உலகில் கோடி கட்டிப் பறந்த விஜயசாந்தியும், தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அருணாவும் அந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்கள்தான். அந்தப் படம் வெற்றிப் படமாக அமையவில்லை.
அப்படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில்தான் மணிவண்ணனை கதை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை.
‘எனது கண்கள்’ என்று இன்றுவரை பாரதிராஜா போற்றிக் கொண்டாடுகின்ற ஒலிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத்தில்தான் பாரதிராஜவோடு முதன்முதலாக இணைந்தார்.
‘16 வயதினிலே’ படம் முதல் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர் பாக்யராஜ் ‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்தவுடன் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருந்ததால் அவரும் ‘நிழல்கள்’ படத்தில் பணியாற்றவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாஸ், பாக்யராஜ் ஆகிய இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் வெளிவந்த ‘நிழல்கள்’ படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப் பெறவில்லை.
பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் ‘நிழல்கள்’ படத்தை பாரதிராஜாவால் வெற்றிப் படமாக தர முடியவில்லை என்றும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்கின்றவிதமாக தனது அடுத்த படத்தைத் தரவேண்டிய கட்டாயத்திலிருந்தபோது பாரதிராஜா இயக்கிய படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை.’
பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான நாளிருந்தே தங்களுக்காக ஒரு படத்தை இயக்கித் தரும்படி இளையராவின் மூத்த சகோதரரான பாஸ்கர் கேட்டுக் கொண்டேயிருந்ததால், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை பாஸ்கரின் ‘பாவலர் பிரதர்ஸ்’ நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா.
மணிவண்ணன் கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை, பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்ற ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே’ என்று தொடங்கும் பாடலின் பல்லவியில்கூட ‘இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை..’ என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து.
பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிருஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது.
தனது இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்தது போல ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார் பாரதிராஜா.
புதுமுகத் தேர்வில் அவர் இருந்தபோது அவரைப் பார்க்க தனது தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா. அப்போதே அம்பிகா நடித்து சில படங்கள் வெளிவந்திருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன்படுத்த முடியாத நிலையில் “உனக்கு வேறு சகோதரிகள் இருக்கிறார்களா…?” என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்டபோது, தனது கைப் பையிலிருந்து தங்கைகள் மல்லிகா, சந்திரிகா ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகா.
அதில் இருந்த சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின் காமிரா கண்களுக்கு இந்தப் படத்திற்குக் கதாநாயகி ஆவதற்கு அவர்தான் சரியானவர் என்று அப்போதே தோன்றியிருக்க வேண்டும்.
அடுத்து “இந்தப் பெண் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள்…?” என்று அம்பிகாவின் தாயாரிடம் பாரதிராஜா கேட்க, பத்தாவது படித்துக் கொண்டிருப்பதாக அவர் பதில் சொன்னார்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில்தான் தங்கி படித்துக் கொண்டிருந்தார் சந்திரிகா. அடுத்த வாரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் திருவனந்தபுரம் வர இருப்பதாகவும் அப்போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார் பாரதிராஜா.
அவர் கல்லரா செல்வதற்கு முன்னாலேயே தனது மகள் சந்திரிகாவிடம் ‘ஒரு பெரிய டைரக்டர் உன்னைப் பார்க்க கல்லரா வரப் போகிறார்’ என்ற செய்தியை சொல்லியிருந்தார் சரசம்மா. ஆனால் அப்போது சந்திரிகாவிற்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்பதால் அவர் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
சொன்னபடி ஒரு வாரம் சென்றவுடன் தனது ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த நேரத்தில் அங்கே கரண்ட் கட்டாகிவிடவே மெழுகுவர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்க்க முடிந்தது.
அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடியாமல் போனதாலோ என்பதாலோ என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கச் சொன்னார் பாரதிராஜா.
ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு பேய்ப் படங்களில் நடப்பது போல சந்திரிகா முன்னால் நடக்க அவரது முக பாவத்தை கூர்ந்து கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்த பாரதிராஜா அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் நாயகி என்பதை முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.
பின்னர் “அடுத்த வாரம் சென்னைக்கு கூட்டி வாருங்கள். மேக்கப் போட்டு கொஞ்சம் ஸ்டில்கள் எடுத்துப் பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் பாரதிராஜா.
அப்போது அம்பிகா சென்னையில் ரஞ்சித் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலிலேயே சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு பாரதிராஜாவுடன் போனார் சந்திரிகா.
“இவர்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகப் போகும் கதாநாயகி…” என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தியதும் “ஓ… இவர்தான் அந்த கப்பக் கிழங்கா..?” என்று கேட்டார் இளையராஜா.
இளையராஜா அப்படிக் கேட்டதும் அவர் என் அப்படி அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு. அந்தப் படத்தின் நாயகன் நாயகியை கேலி செய்யும்விதமாக ‘வாடி என் கப்பக் கிழங்கே…’ என்று தொடங்கும் பாடல், அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர் ‘ஆர்’ என்று எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ பட நாயகி ‘ரதி’யாகவும் ‘நிழல்கள்’ பட நாயகி ‘ரோகிணி’யாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். அந்த ‘ஆர்’ வரிசையில் ‘ராதா’ என்று பெயர் சூட்டப்பட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார்.
அந்தப் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக கார்த்திக் அறிமுகமானார் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால், அந்தக் கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் கார்த்திக் இல்லை.
அவர் யார் என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்..!
(தொடரும்)
The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post “காதல் ஓவியம்’ தோல்விக்குக் காரணம் ஜனகராஜ்தான்” – பாரதிராஜாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.
]]>பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து கூட்டணியில் இன்றைக்கும் முத்தான பாடல்களைக் கொண்ட திரைப்படமாக அமைந்திருக்கிறது ‘காதல் ஓவியம்’. கிளாஸிக்கல் பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் வெளியானபோது படு தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வி எதனால் ஏற்பட்டது என்பது பற்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது யுடியூப் சேனலில் பேசியுள்ளார்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இது பற்றிப் பேசும்போது, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘சீத்தாகோகா சிலகா’ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான பின்பு அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனது கதாசிரியர் கலைமணி இரண்டு வரிகளில் ஒரு கதையைச் சொன்னார். ஒரு பாடகனுக்கும், ஒரு ரசிகைக்குமான காதல் பற்றி. கேட்டவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. உடனேயே இதையே படமாக்க நினைத்து டிஸ்கஷனுக்காக பெங்களூருக்கு சென்றோம்.
நான், கலைமணி, சித்ரா லட்சுமணன் மூவரும் பெங்களூர் போய் தங்கி டிஸ்கஷன் செய்து,கதையைத் தயார் செய்தோம். ‘படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு ராதாவையே போடலாம்’ என்று கலைமணி சொன்னார். நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஹீரோவுக்கு கார்த்திக் வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஏனெனில் இது பாடல்கள் நிறைய உள்ள படம். அதனால் கார்த்திக் வேண்டாம் என்றாகிவிட்டது.
ஒரு நாள் தேனாம்பேட்டை வழியாக நான் காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு நேரெதிரில் இருந்த ‘ஜாமா லாட்ஜ்’ பக்கத்தில் இருந்த டீக்கடையில் ஒரு பையன் டீ குடித்துக் கொண்டிருந்தான். பார்த்தவுடன் எனக்குள் ஏதோ தோன்றியது.
உடனேயே காரை நிறுத்திவிட்டு எனது உதவியாளரை அனுப்பி அந்தப் பையனை அலுவலகத்திற்கு அழைத்தும்வரும்படி சொல்லிவிட்டுப் போனேன். சொன்னது போலவே அந்தப் பையனை அழைத்து வந்தார்கள்.
அவன் ஹிந்தி. ‘கொஞ்சம், கொஞ்சம் தமிழ்ல பேசுவேன்’னு சொன்னான். மொதல்ல ஸ்டில்ஸ் எடு்ப்போம். அப்புறம் பார்க்கலாம்ன்னு எடுத்துப் பார்த்தேன். கச்சிதமா இருந்துச்சு. அவனையே ஹீரோவா புக் பண்ணிட்டேன். அவனோட அண்ணன்கிட்ட மட்டும் சொல்லிட்டு ஷூட்டிங்கிற்கு வந்துட்டான். ஷூட்டிங்ல யார்கிட்டேயும் பேச மாட்டான். அமைதியா இருப்பான். வசனம், பாடல்கள் எல்லாத்தையும் இங்கிலீஷ்ல எழுதி வைச்சிட்டு படிப்பான். பேசுவான். அற்புதமா நடிச்சான். அவனை என்னால மறக்க முடியாது. ஆனால், அவனுக்கு சினிமா செட்டாகலை. அந்த ஒரே படத்தோட ஓடிட்டான்.
அந்தப் படத்துல ராதாவோட ஹஸ்பெண்ட் கேரக்டர் ஒண்ணு இருந்துச்சு. அதை யாருக்குக் கொடுக்கலாம்ன்னு யோசிச்சேன். அப்போ சட்டுன்னு ‘ஜனா’ ஞாபகத்துக்கு வந்தான். அந்த ‘ஜனா’தான் நம்ம ஜனகராஜ்.
நானும், இளையராஜாவும், கங்கை அமரனும் எல்டாம்ஸ் ரோட்டுல தங்கியிருந்தப்போ அதுக்கு எதிர் வீட்ல ஜனகராஜ் குடியிருந்தான். எங்க ரூமுக்கு அடிக்கடி வருவான். போவான். ‘டீ வாங்கிட்டு வாடா’ன்னா வாங்கிட்டு வருவான். நல்ல பையன். அவன் என் புள்ளை மாதிரி..!
அவனை நான் ‘புதிய வார்ப்புகள்’ படத்துல அறிமுகப்படுத்தியிருந்தேன். அப்படியே அவனும் ஒரு ரவுண்டு வந்துக்கிட்டிருந்தான். சரி.. இதுல அந்தக் கேரக்டர்ல இவனையே நடிக்க வைச்சிருவோம்ன்னு நினைச்சேன்.
ஆனால் பாருங்க.. அவன் அதுல நடிக்கவேயில்லைன்ற மாதிரியே.. அவனுக்குத் தெரியாமலேயே ஷூட் செஞ்சு எல்லாத்தையும் ரெடி செஞ்சுட்டேன். ‘நாளைக்கு டப்பிங் இருக்கு வாடா’ன்னு ஒரு நாள் கூப்பிட்டேன். ‘நான்தான் நடிக்கவே இல்லையே’ன்னான். ‘வெளக்கண்ண.. நீதான்டா அதுல நடிச்சிருக்க.. வந்திட்டுப் போ’ன்னு சொன்னேன். அவனுக்கு நாங்க தஞ்சாவூர் போய் ஷூட் பண்ணினதுகூட ஞாபகம் இல்லை. எப்படின்னே தெரியலை.. பட்.. அவனும் நல்ல பெர்பெக்ட் ஆர்ட்டிஸ்ட்.டுதான்.. நல்லா.. குறையே சொல்லாதபடிக்கு நடிச்சிருந்தான்.
கிளைமாக்ஸ் சீன்ல அந்த ‘சங்கீத ஜாதி முல்லை’ பாட்டு முடிந்த பின்னாடியும் ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரோட முகத்தை மட்டும் குளோஸப்ல எடுத்திட்டு வந்து இளையராஜாகிட்ட காண்பிச்சேன்.
‘என்னய்யா இது.. இப்படி எடுத்திருக்க.. இதை வைச்சு நான் என்ன செய்யுறது…?’ என்றான் இளையராஜா. ‘இதுக்கேத்தாப்புல இசையை போடு.. தத்தகாரம் தானா வரும்.. உன் இசையாச்சே’ன்னு சொன்னேன். மறுபேச்சில்லாமல் போட்டுக் கொடுத்தான். எஸ்.பி.பி. உயிரைக் கொடுத்து பாடிக் கொடுத்தான்.. அற்புதமாக இருந்தது. அந்த மாதிரி மியூஸிக் போடுறதுக்கு இளையராஜாவைவிட்டால் வேற யாருமே இல்லை.
இந்தப் படம் ரிலீஸானப்போ ரிசல்ட் எப்படியிருக்குன்னு பார்க்குறதுக்காக ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டருக்குப் போயிருந்தேன். ஆபரேட்டர் ரூம்ல இருந்தபடியே பார்த்தேன்.
இந்தப் படத்துல நான் எந்தெந்த காட்சியையெல்லாம் கவிதை மாதிரி செதுக்கியிருந்தனோ அந்தக் காட்சிகளின்போதெல்லாம் ரசிகர்களிடையே ஒரு சின்ன சலசலப்புகூட இல்லை. ரொம்ப ஏமாற்றமாகிப் போச்சு.. படம் பெயிலியர்ன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சு போச்சு..
அப்புறம்மேல் கேட்டப்போ எல்லாரும் சொன்ன ஒரே பதில்.. “எங்களோட கனவுக் கன்னி.. தேவதை மாதிரியிருக்குற ராதாவுக்கு ஜோடியா இப்படியொரு ஆளை போட்டிருக்கீங்களே.. இது அடுக்குமா.. நியாயமா”ன்னுதான்..! அதை நான் அப்ப யோசிக்கலை. ஆனால் இப்ப யோசிக்கிறேன்.
அந்தப் படம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், இப்போதும் என் பெயரைச் சொல்லும் படமாக அது இருக்கிறது. அது போதும் எனக்கு..!!!” என்று உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
The post “காதல் ஓவியம்’ தோல்விக்குக் காரணம் ஜனகராஜ்தான்” – பாரதிராஜாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.
]]>