Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை மீனா – Touring Talkies https://touringtalkies.co Thu, 20 Oct 2022 15:40:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை மீனா – Touring Talkies https://touringtalkies.co 32 32 “என் ஹஸ்பெண்ட்டுக்கு நான்தானே செய்ய முடியும். வேற யார் செய்வா?” – நடிகை மீனா அளித்த பதில்..! https://touringtalkies.co/i-can-do-it-for-my-husband-who-else-actress-meenas-answer/ Thu, 20 Oct 2022 15:39:28 +0000 https://touringtalkies.co/?p=25729 “என் கணவரை நல்லபடியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்தான் நானே அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தேன்” என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார். நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் சமீபத்தில் காலமானது நினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தற்போதுதான் நடிகை மீனா விரிவான பேட்டியொன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் இருந்த தன் கணவர் இறந்த சூழலையும், அதிலிருந்து தான் மீண்டது எப்படி என்பது பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் மீனா. அந்தப் பேட்டியில், “உங்கள் கணவரின் இறப்பிற்கு […]

The post “என் ஹஸ்பெண்ட்டுக்கு நான்தானே செய்ய முடியும். வேற யார் செய்வா?” – நடிகை மீனா அளித்த பதில்..! appeared first on Touring Talkies.

]]>
“என் கணவரை நல்லபடியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்தான் நானே அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தேன்” என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் சமீபத்தில் காலமானது நினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தற்போதுதான் நடிகை மீனா விரிவான பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் இருந்த தன் கணவர் இறந்த சூழலையும், அதிலிருந்து தான் மீண்டது எப்படி என்பது பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் மீனா.

அந்தப் பேட்டியில், “உங்கள் கணவரின் இறப்பிற்கு காரணம் என்ன..?” என்று கேட்டபோது “அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தில புறாக்கள் அதிகமா இருந்திருக்கு. அதன் எச்சத்தை சுவாசித்ததால அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்துச்சு. இதற்கான அறிகுறி எதுவும் வெளில தெரில.

கொரோனா எங்க வீட்டில எல்லோருக்கும் வந்திச்சு. ஆனால் அது அவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் குணமாகிடுச்சு. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததாலதான் இன்னும் பாதிப்பு அதிகமாயிருச்சு. அதனால்தான் அவருக்கு சரியாகவில்லை..” என்று கூறினார் மீனா.

கணவருக்கு அவரே இறுதி சடங்கு செய்தது பற்றி கேட்டபோது, “என்னோட ஹஸ்பண்ட்டுக்கு நான்தானே சடங்கு பண்ண முடியும்? வேற யாரு பண்ணுவாங்க…? அந்த டைம்ல நான் யோசிக்கல. அப்படி எல்லாம் சொல்லுவாங்க என்று! ஆனால் எனக்கு அவரை நல்லபடியா அனுப்பி வைக்கணும் என்ற எண்ணம் இருந்ததாலதான் நானே அவரோட இறுதிச் சடங்ககை செஞ்சேன். அதுல என்ன தப்பு இருக்கு..?” என்று வெளிப்படையாகப் பதில் சொல்லியுள்ளார் நடிகை மீனா.

மேலும், “என் கணவர் இறந்த துன்பத்தில் இருந்து சீக்கிரமாக மீண்டு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. இதெற்கெல்லாம் காரணம் எனது அம்மா, குடும்பம் மற்றும் என் நண்பர்கள்தான்.

பொதுவாக நான் நண்பர்களின் விஷேசங்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் என்னோட கஷ்டத்தில நிறைய பேர் இருந்திருக்கிறாங்க. எனக்கு தெரியாதவங்ககூட வந்து ஆறுதல் சொன்னாங்க. நான் இதை எதிர்பார்க்கல. இது தவிர சில ப்ரண்ட்ஸ் என்கூடவே இருந்து வெளில கூட்டிட்டு போறது… என்கூட டைம் ஸ்பென்ட் பண்றது என்று எல்லாமே செய்தாங்க.. அவங்களாலதான் நான் இப்போ அந்த துன்பத்தில இருந்து விடுபட்டிருக்கின்றேன்..” என்று தான் மீண்ட கதையைக் கூறினார் மீனா.

“மாற்று நுரையீரல் கிடைத்திருந்தால் கண்டிப்பாக கணவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா?” என்ற கேள்விக்குப் பதில் கூறிய மீனா, “கண்டிப்பா காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி நுரையீரல் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அப்படி கிடைக்கும் மாற்று நுரையீரலும் ஆரோக்கியமா இருக்கணும். பிளட் குரூப் பொருந்தணும். உயரம், எடையும் பொருந்தணும். இப்படி இதுல கண்டிஷன்ஸ் நிறையவே இருக்கு. அதனால் இது அவ்வளவு ஈசி கிடையாது.

இந்த விஷயத்தில் இவ்வளவு கண்டிஷன்ஸ் இருக்கு என்பதே எனது கணவர் இறந்ததுக்கு பிறகுதான் தெரியும். அதனால்தான் நுரையீரல் தானம் செய்ய நானே இப்போது பதிவு செய்துள்ளேன். இது நாம இருக்கும்போது செய்யப் போறதில்லை. நாம இறந்ததுக்கு பிறகுதான் பண்ணுவாங்க. அதனால நமக்கு தெரிய போறதில்லை. இதை் அனைவரும் கண்டிப்பாக செய்தால் சமூகத்திற்கு நல்லதொரு விஷயமா இருக்கும் என்றுதான் நுரையீரல் தானத்திற்கு ஓகே சொன்னேன். ஆனால் கமல் ஸார் இதை முன்னாடியே செய்துள்ளார்…” என்றார் மீனா.

The post “என் ஹஸ்பெண்ட்டுக்கு நான்தானே செய்ய முடியும். வேற யார் செய்வா?” – நடிகை மீனா அளித்த பதில்..! appeared first on Touring Talkies.

]]>
“ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..! https://touringtalkies.co/im-jealous-to-see-aishwarya-rai-actress-meenas-powerlessness/ Fri, 07 Oct 2022 17:14:31 +0000 https://touringtalkies.co/?p=24974 “நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது..!” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமான நடிகை மீனா தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்ற வாரம் வெளிவந்த மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த நடிகை மீனா அது […]

The post “ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..! appeared first on Touring Talkies.

]]>
“நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது..!” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார்.

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமான நடிகை மீனா தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சென்ற வாரம் வெளிவந்த மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த நடிகை மீனா அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்தப் படத்தில் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. இதனால் ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

மீனாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post “ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..! appeared first on Touring Talkies.

]]>
“கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை மீனாவின் சுவையான பதில் https://touringtalkies.co/can-we-get-married-actress-meenas-tasty-answer-to-a-fans-question/ Sun, 04 Jul 2021 07:18:56 +0000 https://touringtalkies.co/?p=15969 தற்போது நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில்தான் அதிகமாக பேட்டியளித்து வருகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு என்றில்லை.. தங்களது தீவிர ரசிகர்களுக்கும் சேர்த்தே பேட்டியளிக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எண்ணிக்கை கூட, கூட அந்த நட்சத்திரங்களுக்கு மவுசு ஏறுகிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவர்களுக்கு இருக்கும் பாலோயர்ஸ் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக முக்கிய நடிகைகள் பலரும் இப்போது இன்ஸ்ட்டாகிராமில்தான் குடியிருக்கிறார்கள். இவர்களில் நடிகை மீனாவும் ஒருவர். இவரை தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் […]

The post “கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை மீனாவின் சுவையான பதில் appeared first on Touring Talkies.

]]>
தற்போது நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில்தான் அதிகமாக பேட்டியளித்து வருகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு என்றில்லை.. தங்களது தீவிர ரசிகர்களுக்கும் சேர்த்தே பேட்டியளிக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எண்ணிக்கை கூட, கூட அந்த நட்சத்திரங்களுக்கு மவுசு ஏறுகிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவர்களுக்கு இருக்கும் பாலோயர்ஸ் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக முக்கிய நடிகைகள் பலரும் இப்போது இன்ஸ்ட்டாகிராமில்தான் குடியிருக்கிறார்கள்.

இவர்களில் நடிகை மீனாவும் ஒருவர். இவரை தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த அவ்வப்போது தனது பழைய புகைப்படங்களையும், லேட்டஸ்ட் புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார் மீனா.

அதோடு கூடவே அவ்வப்போது கேள்வி பதில் சீஸனையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்றைக்கு முன் தினம் ஒரு கேள்வி பதில் சீஸனை நடத்தினார் மீனா. இதில் சுவாரஸ்யமான பல கேள்விகள் வந்தன. அதற்கு மீனாவும் சுவாரஸ்யமாகவே பதில் அளித்தார்.

“உங்களது உண்மையான வயது என்ன..?” என்று கேள்வி எழுப்பியவரிடம், “பெண்களிடம் அவர்களது வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா..?” என்று பதில் அளித்துள்ளார்.

“தனுஷ் அல்லது சிம்பு இவர்கள் இருவரில் சிறந்த நடிகர் யார்..?” என்ற கேள்விக்கு “இருவரும்” என்று பதில் அளித்து எஸ்கேப்பானார்.

“என்றாவது ஒரு நாள் இந்த சினிமா துறைக்குள் எதற்காக வந்தோம் என்று வருத்தப்பட்டு உள்ளீர்களா.?” என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு “பல தடவை” என்று கூறியதோடு கண்ணீர் சிந்தும் எமோஜியையும் இணைத்துள்ளார்.

“பாபநாசம்-2 படத்தில் நீங்கள் நடிப்பீர்களா..?” என்ற கேள்விக்கு “இதை கமல் ஸாரிடம் கேளுங்கள்…” என்று பந்தை அந்தப் பக்கம் திருப்பியுள்ளார்.

“நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்…” என்று கூறியதற்கு, “ஆவ்” என்று ஆச்சரியக் குரல் எழுப்பியுயள்ளார் மீனா.

“என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..?” என்று கேட்ட ரசிகருக்கு தனது கல்யாணப் புகைப்படத்தைக் காட்டி “நீங்க கொஞ்சம் லேட்” என்று  பதில் கொடுத்துள்ளார் மீனா.

The post “கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை மீனாவின் சுவையான பதில் appeared first on Touring Talkies.

]]>
கால்ஷீட் குழப்படியினால் நடிகை மீனா இழந்த முக்கியமான திரைப்படங்கள்..! https://touringtalkies.co/important-movies-that-actress-meena-lost-due-to-callsheet-mess/ Fri, 11 Jun 2021 06:32:49 +0000 https://touringtalkies.co/?p=15485 1990-களில் தமிழ்ச் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பரபரப்பாக ஓடி நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் பரபரப்பு வாழ்க்கையினாலேயே தமிழில் குறிப்பிடத்தக்க மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார் மீனா. அவர் இது பற்றிப் பேசும்போது, “என் திரையுலக வாழ்க்கையில் நான் சோகமாக நினைக்கும் விஷயம் பல வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்ததுதான். கால்ஷீட் தேதி குழப்படியினால்தான் நடிக்க முடியாமல் […]

The post கால்ஷீட் குழப்படியினால் நடிகை மீனா இழந்த முக்கியமான திரைப்படங்கள்..! appeared first on Touring Talkies.

]]>
1990-களில் தமிழ்ச் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பரபரப்பாக ஓடி நடித்துக் கொண்டிருந்தார்.

இந்தப் பரபரப்பு வாழ்க்கையினாலேயே தமிழில் குறிப்பிடத்தக்க மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார் மீனா.

அவர் இது பற்றிப் பேசும்போது, “என் திரையுலக வாழ்க்கையில் நான் சோகமாக நினைக்கும் விஷயம் பல வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்ததுதான். கால்ஷீட் தேதி குழப்படியினால்தான் நடிக்க முடியாமல் போய்விட்டது.

மலையாளத்தில் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்த ‘ஹரிகிருஷ்ணன்’ படத்தில் நான்தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. அவர்கள் கேட்ட தேதி கிடைக்காததால் அதில் எனக்குப் பதிலாக ஜூஹி சாவ்லா நடித்தார்.

இதேபோல் ‘படையப்பா’ படத்தில் சவுந்தர்யா வேடத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அதுவும் நடிக்க முடியாமல் போனது. ‘வள்ளி’ படத்தில் பிரியா ராமன் கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கணும். அப்போதும் தேதிகள் இல்லை என்பதால் முடியவில்லை. ‘தேவர் மகன்’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் சில நாட்கள் நான் நடித்திருந்தேன். ஆனால் அதன் பிறகு கதையை மாற்றுவதாகச்  சொல்லி ஆறு மாதங்கள் படம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் அதில் ரேவதி நடித்தார். இப்படி நான் இழந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகம்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருக்கு. அது இதுவரையிலும் எந்தவொரு படத்திலும் நான் கல்லூரி மாணவியாக நடிக்கவே இல்லை. இதுவும் எனக்குள் வருத்தமாக உள்ளது. அதேபோல் நான் அடிப்படையில் நல்ல டான்ஸர். ஆனால் என் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற கதாபாத்திரம் எனக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லை.

முன்பு மாதிரி ரசிகர்கள் இப்போது இல்லை. நம்முடைய இமேஜை பார்த்து ரசிக்கவில்லை. கேரக்டரை பார்த்து ரசிக்கிறார்கள். இதனால் இனி வரும் படங்களில் வில்லியாக, வித்தியாசமான நெகட்டிவ் அம்சம் கொண்ட வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் மீனா.

The post கால்ஷீட் குழப்படியினால் நடிகை மீனா இழந்த முக்கியமான திரைப்படங்கள்..! appeared first on Touring Talkies.

]]>
படம் வெளியான 2-வது நாள் ரீமேக் விற்பனை-10-வது நாள் பூஜை, 15-வது நாள் படப்பிடிப்பு..! https://touringtalkies.co/drishyam-2-movie-telugu-remake-news/ Mon, 22 Feb 2021 06:29:48 +0000 https://touringtalkies.co/?p=13255 ஒரு திரைப்படம் வெளியான 2-வது நாளே ரீமேக் உரிமை விற்று.. 10-வது நாளே பூஜை போட்டு, 15-வது நாளே ஷூட்டிங்கிற்குக் கிளம்பும் அதிசயம் தற்போது நடந்துள்ளது. அந்த அதிசயத்தை நிகழ்த்தியிருப்பது மலையாளத் திரைப்படமான ‘திருஷ்யம்-2’ திரைப்படம்.   மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திருஷ்யம்-2’ திரைப்படம் அமேஸான் பிரைம் OTT தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் வெளியானது. அதற்குள்ளாக ரீமேக் உரிமை விற்று படப்பிடிப்பையும் துவக்கப் போகிறார்கள். கடந்த சனிக்கிழமையே இந்தப் படத்தின் தமிழ், […]

The post படம் வெளியான 2-வது நாள் ரீமேக் விற்பனை-10-வது நாள் பூஜை, 15-வது நாள் படப்பிடிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு திரைப்படம் வெளியான 2-வது நாளே ரீமேக் உரிமை விற்று.. 10-வது நாளே பூஜை போட்டு, 15-வது நாளே ஷூட்டிங்கிற்குக் கிளம்பும் அதிசயம் தற்போது நடந்துள்ளது.

அந்த அதிசயத்தை நிகழ்த்தியிருப்பது மலையாளத் திரைப்படமான ‘திருஷ்யம்-2’ திரைப்படம்.  

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திருஷ்யம்-2’ திரைப்படம் அமேஸான் பிரைம் OTT தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் வெளியானது. அதற்குள்ளாக ரீமேக் உரிமை விற்று படப்பிடிப்பையும் துவக்கப் போகிறார்கள்.

கடந்த சனிக்கிழமையே இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமை தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிட்டன.

திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இந்த இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கையும் தயாரிக்கிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். ‘திருஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்புதான் இந்த ரீமேக்கையும் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பூஜை மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. மார்ச்-5 அன்று படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தத் தெலுங்கு பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியா, மலையாள தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘திருஷ்யம் 2’ படத்தின் தமிழ் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

தமிழ் பதிப்பின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

திருஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்த 2-ம் பாகத்திலும் இதே கூட்டணி நடிக்குமா.. இல்லையா.. என்பது விரைவில் தெரிய வரும்.

The post படம் வெளியான 2-வது நாள் ரீமேக் விற்பனை-10-வது நாள் பூஜை, 15-வது நாள் படப்பிடிப்பு..! appeared first on Touring Talkies.

]]>