The post தெலுங்கு ‘நான் ஸ்டாப் பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி சாம்பியன் பட்டம் வென்றார். appeared first on Touring Talkies.
]]>தொலைக்காட்சியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் புகழ் பெற்றது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
சென்ற வருடத்தில் இருந்து ரெகுரலான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியுடன் 24 மணி நேரமும் காட்டப்படும் நான் ஸ்டாப் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தமிழிலும் சமீபத்தில் இந்த நான் ஸ்டாப் ‘பிக்பாஸ்’ Unlimited என்ற பெயரில் நடத்தப்பட்டது.
தெலுங்கில் கடந்த 75 நாட்களாக இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, இந்த நான் ஸ்டாப் தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தெலுங்கு ‘பிக்பாஸ்’ வரலாற்றில் டைட்டிலை வென்ற முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையையும் பிந்து மாதவியே பெற்றார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், கேடயமும் வழங்கப்பட்டது.
பிந்து மாதவி தமிழில் நடத்தப்பட்ட முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து கலந்து கொண்டவர். வைல்ட் கார்டு என்ட்ரியாக தமிழ் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் நுழைந்த முதல் போட்டியாளரும் பிந்து மாதவிதான்.
இந்த தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் ‘சேலஞ்சர்’ என்ற பெயரில் உள்ளே நுழைந்த பிந்து மாதவி அத்தனை போட்டியாளர்களுக்கும் நிஜமாகவே திறமையான, நேர்மையான, கடுமையான போட்டியாளராகவே இருந்தார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் பிந்து மாதவிக்கு ‘சூர்ப்பனகை’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர். இருந்தாலும் வெளியில் இருந்த அவரது ரசிகர்கள் அவருக்கு ‘பெண் புலி’ என்று பெயர் சூட்டி அழைத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும் ஆதரவினை கொடுத்தனர்.
பரிசினை வென்ற பிறகு பிந்து மாதவி பேசும்போது, “இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வந்ததில் நிறையவே கற்றுக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் பல விஷயங்களுக்கு எனக்கு குருவாக இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு இருந்தது. என்னுடைய பலம், பலவீனம் இதை இங்கேதான் அறிந்து கொண்டேன். இங்கே நான் அறியாமல் செய்த என் தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்கிறேன்..” என்றார்.
The post தெலுங்கு ‘நான் ஸ்டாப் பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி சாம்பியன் பட்டம் வென்றார். appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ என பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தார்,
தமிழில் கமல்ஹாசன் நடத்திய ‘பிக்பாஸ்-4’-ல் கலந்து கொண்டு புகழ் பெற்றார். ‘பிக்பாஸில்’ கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழைப் போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ‘நான் ஸ்டாப் அல்டிமேட் பிக் பாஸ்’ போட்டியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே ‘பிந்து மாதவி ஆர்மி’ என பல டிவிட்டர் மற்றும் ஹாஷ் டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது.
இந்த போட்டியினை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத் தருமென அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.
பிந்து மாதவி தற்போது தமிழில், நடிகர் சசிகுமாருடன் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘மாயன்’ மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
The post தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி appeared first on Touring Talkies.
]]>The post “அஜீத்துடன் நடிக்க வேண்டும்” – நடிகை பிந்து மாதவியின் லட்சியம்..! appeared first on Touring Talkies.
]]>இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் நூறு சதவிகிதம் அஜீத்தின் மிகத் தீவிரமான ரசிகை. சின்ன வயதில் இருந்தே எனக்குப் பிடித்த கனவுக் காதலர்ன்னா அது அஜீத்துதான். அவ்வளவு அழகானவர் அவர். அந்த அழகில் மயங்கி இப்போ அவரோட மிகப் பெரிய ரசிகையாகிவிட்டேன்.
அவர் பின்க் மாதிரி ஒரு படத்துல துணிஞ்சு நடிச்சிருக்கார். அவர் நடித்த நேர் கொண்ட பார்வை எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது.
என்னோட லட்சியத்துல ஒண்ணு.. அஜீத் ஸாரோட ஒரு படத்துலயாச்சும் நடிச்சிரணும்ன்றதுதான். என்னுடைய இந்தக் கனவு நிச்சயமாக அடுத்த வருஷம் நிறைவேறிரும்ன்னு நம்புகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
The post “அஜீத்துடன் நடிக்க வேண்டும்” – நடிகை பிந்து மாதவியின் லட்சியம்..! appeared first on Touring Talkies.
]]>The post சசிகுமார்-பிந்து மாதவி-வாணி போஜன் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>‘கூர்கா’ படத்தைத் தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக M.சசிகுமார் நடிக்கிறார். நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி இருவரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே.தில்லை, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, நடன இயக்கம் – தீனா, சண்டை இயக்கம் – ஆக்ஷன் நூர், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).
இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய இயக்குநர் அனிஸ் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் இனிதே துவங்கியது.
The post சசிகுமார்-பிந்து மாதவி-வாணி போஜன் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>