The post நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை – நண்பர் கைது..! appeared first on Touring Talkies.
]]>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் ஏ.எல். விஜய் உடன் விவாகரத்தான நிலையில், நடிகை அமலா பாலும், ஜெய்ப்பூரை சேர்ந்த அவரது நண்பரான பவ்நிந்தர் சிங்கும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றித் திரிந்த புகைப்படங்களும், மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்தது போன்ற திருமண போட்டோ ஷூட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
அப்போது தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் “அந்த நபருடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுகிறார்…” என்று அமலா பால் கூறினார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் தங்கியிருந்த நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பவ்நிந்தர்சிங் இன்றைக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா தயாரிப்புத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக நண்பர் பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி, அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம தொடங்கியதாகவும், பின்பு 2018 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்து பவியும் அவரது உறவினர்களும் என்னை ஏமாற்றி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து, என்னுடைய பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து எனக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்ததாக” தனது புகார் மனுவில் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.
The post நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை – நண்பர் கைது..! appeared first on Touring Talkies.
]]>The post அமலா பால் செக்ஸியாக நடித்திருக்கும் வெப் சீரீஸ் டிரெண்ட்டிங்கானது..! appeared first on Touring Talkies.
]]>இதுவொரு அந்தாலஜி டைப் சீரிஸ். நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. நாக் அஸ்வின், பி.வி.நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி, தருண் பாஸ்கர் என்று நான்கு இயக்குநர்கள் ஆளுக்கொரு கதையை இயக்கியிருக்கிறார்கள்.
நான்கு கதைகளுமே பெண்களை மையப்படுத்தி எடுத்தக்கப்பட்ட கதைகள். இதில் இரண்டாவது கதையான ‘மீரா’ என்ற பகுதியில் நடிகை அமலா பால் நடித்திருக்கிறார்.
எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருக்கும் கணவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் மீரா என்ற மனைவியின் கதைதான் இந்தப் பகுதி.
தனது மனைவி மீராவுக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கிறதோ என்று கணவர் சந்தேகப்படுகிறார். வார்த்தைகளால் சித்ரவதை செய்கிறார். இதன் தொடர்ச்சியாய் அவர் நினைத்துப் பார்க்கும் சில காட்சிகளில் மீராவுடன் அவளுடைய காதலன் உறவு கொள்வது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
நடிகை அமலாபால் நடித்திருக்கும் இந்தப் படுக்கையறை காட்சிகள் இதுவரையிலும் அவரே நடித்திருக்காதவை..! அமலா பாலின் ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியை இது கொடுத்திருக்கிறது. இதையடுத்து இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை மட்டும் நிறைய பேர் டவுன்லோடு செய்து இணையத்தில் பரப்புரை செய்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியை இயக்கியவர் பி.வி.நந்தினி ரெட்டி என்னும் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் ‘என்னமோ நடக்குது’, ‘ஓ பேபி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
The post அமலா பால் செக்ஸியாக நடித்திருக்கும் வெப் சீரீஸ் டிரெண்ட்டிங்கானது..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை அமலா பாலின் புகைப்படங்களை வெளியிட தடை..! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் அமலா பாலுக்கும் பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி சில புகைப்படங்கள் இன்ஸ்ட்டாகிராமில் வெளியாகின.
அமலா பாலின் காதலர் என்று சொல்லப்பட்ட பாடகர் பவனீந்தர் சிங்தான் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அதனை வெளியிட்டிருந்தார். சில நிமிடங்களில் அந்தச் செய்தியும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.
உடனேயே அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டதாகவே செய்திகளும் எழுதப்பட்டன.
ஆனால் இந்தப் புகைப்படங்கள் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்றும், தனக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் அவருடைய மேனேஜர் மூலமாக மறுப்பு தெரிவித்தார் நடிகை அமலா பால்.
இருந்தாலும் இது தொடர்பாக பாடகர் பவ்னிந்தர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா பால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நடிகை அமலா பாலின் புகைப்படங்களை இனிமேல் சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அமலா பாலின் மனுவுக்கு வரும் டிசம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் பவ்னிந்தர் சிங்க்கு உத்தரவிட்டார்.
The post நடிகை அமலா பாலின் புகைப்படங்களை வெளியிட தடை..! appeared first on Touring Talkies.
]]>