The post 25-வது படத்தைத் தொட்டுவிட்டார் நடிகர் விதார்த்..! appeared first on Touring Talkies.
]]>வேறு, வேறு ஜானரில் ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’, ‘அஞ்சாமை’ என ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதையம்சம் உள்ள ஐந்து படங்களில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் விதார்த்.
இந்நிலையில் விதார்த்தின் 25-வது படமும் தயாராகிறது. Benchmark Fims நிறுவன தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் சீனிவாசன் இப்படத்தினை இயக்குகிறார்.
இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (‘ஒண்டிக்கட்ட’ படத்தின் நாயகன்), பவுலின் ஜெசிகா (‘வாய்தா’ படத்தின் நாயகி), மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், வெங்கட் சுபா, பேபி ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கலை இயக்கம் – ஜெயச்சந்திரன் BFA, படத் தொகுப்பு – பிரவீன் K.L., சண்டை இயக்கம் – கனல் கண்ணன், ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த், தயாரிப்பு – ஜோதி முருகன், சீனிவாசன், எழுத்து, இயக்கம் – சீனிவாசன்.
புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்தி திரில்லுடன் பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வரவேண்டும் என்கின்ற தவிப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது. மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது.
படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
The post 25-வது படத்தைத் தொட்டுவிட்டார் நடிகர் விதார்த்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆற்றல்’ படத்தில் நடிகர் விதார்த்தோடு நடித்திருக்கும் கார்…! appeared first on Touring Talkies.
]]>படத்தில் கதாநாயகியாக ஸ்ரிதா, வில்லனாக வம்சி கிருஷ்ணா மற்றும் சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், இசை – அஸ்வின் ஹேமந்த், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வீர சமர், எழுத்து, இயக்கம் – கே.எல்.கண்ணன்.
இந்தப் படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.
ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும்…? டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்பதை இந்தப் படம் பேசுகிறதாம்.
“படம் முழுக்க ஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும்விதமாக படமாக்கியிருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கேள்வியிருக்கும்… ஒரு கார் எப்படி நடித்திருக்க முடியும் என்று..? அது படம் பார்க்கும் பொழுதுதான் தெரியும்…” என்றார் இயக்குநர் கே.எல்.கண்ணன்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது.
The post ‘ஆற்றல்’ படத்தில் நடிகர் விதார்த்தோடு நடித்திருக்கும் கார்…! appeared first on Touring Talkies.
]]>The post கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும்விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகியிருக்கிறது ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம்.
‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் தங்களுடைய முதல் படி என்று நம்புகிறார்கள்.
யதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த், இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான, தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளை கொண்ட ராகவன் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முகசுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், படத் தொகுப்பாளராக காசி விஸ்வநாதனும் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இந்தப் படத்துக்கு திறம்பட கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் வெற்றி துரைசாமி, முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யாரிடமும் இதுவரையிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சில குறும் படங்களை இயக்கிய அனுபவம் மட்டுமே கொண்டவர்.
பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கிராமப்புற மக்களின் எளிய வாழ்க்கை முறைகளைப் பற்றியும், கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றியும் பேசுகிறது இத்திரைப்படம்.
மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலக மயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் படத்தின் இயக்குநர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணலாம். அங்குள்ள வட்டார மொழியை அனைத்து நடிகர்களும் தப்பில்லாமல் பேசி நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>