The post நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். ஷலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் நகுல், நட்டி நட்ராஜ்,ஸ இயக்குநர் சி.ரங்கநாதன், இயக்குநர் P.V.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post கன்னட நடிகருக்காக டப்பிங் பேசிய நடிகர் நகுல் appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவின் பன்முக நடிகரான நடிகர் நகுல், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு என எந்த ஒரு அரங்கிலும் தனது திறனை வெளிக்கொண்டுவர தவறியதில்லை.
அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைக்கதைகள், அவர் கதாப்பாத்திரத்திற்காக தரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது…
தமிழ் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கூட்டத்தின் பணியாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இப்போது, நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்கு டப்பிங் செய்து திரைத்துறையில் ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
படக் குழுவினர் தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களான நகுல் மற்றும் பிருத்வி அம்பர் ஆகியோரை ஒன்றிணைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
விஜய் மில்டன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
மேலும், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், Infiniti Film Ventures நிறுவனம் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர், டிரெய்லர் & ஆடியோவை விரைவில் வெளியிடவுள்ளது.
The post கன்னட நடிகருக்காக டப்பிங் பேசிய நடிகர் நகுல் appeared first on Touring Talkies.
]]>The post நகுல் நடிக்கும் புதிய படம் ‘வாஸ்கோடகாமா’ appeared first on Touring Talkies.
]]>நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன், ஆரியா, வெங்கட் பிரபு, பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட 100 திரையுலகப் பிரபலங்கள் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்களை நடத்தும் டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்.ஜி.கே. எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இப்பூஜையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரான டத்தோ பி. சுபாஷ்கரன், இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன், நாயகன் நகுல், இசை அமைப்பாளர் என்.வி.அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர் ‘நான் சிரித்தால் ‘ போன்று சில படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளவர். இசை என்.வி.அருண். இவர் எஸ்.பி.பி. கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம் பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு இசையமைத்தவர்.
சண்டை இயக்கம் – விக்கி. இவர் ‘உறியடி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்தவர். கலை இயக்கம் – ஏழுமலை. படத் தொகுப்பு – தமிழ்க்குமரன். இவர் ஏராளமான குறும் படங்களுக்குப் படத் தொகுப்பு செய்தவர். நடனக் காட்சிகளை பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது, “குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்..? அவனது மனநிலையும், குணங்களும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம்தான் இந்த ‘வாஸ்கோடகாமா’.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர்…” என்றார் இயக்குநர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
The post நகுல் நடிக்கும் புதிய படம் ‘வாஸ்கோடகாமா’ appeared first on Touring Talkies.
]]>The post “அம்மன் வேஷம் போட்டு கொண்டு அசிங்கமாக பேசிய வனிதா..!” – கொந்தளித்த நடிகர் நகுல்..! appeared first on Touring Talkies.
]]>ஆனால் அந்தப் போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்த நடிகர் நகுல், ரம்யா கிருஷ்ணனை வனிதா மோசமான வார்த்தைகளால் திட்டியதாக புகார் கூறியுள்ளார்.
பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தாவுக்கு ஜோடியாக நடனமாடி வந்தார் வனிதா. அதில் இவர் காளி அம்மன் வேடம் போட்டு டான்ஸ் ஆடியபோது… இவரது நடனத்தை நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் விமர்சனம் செய்து, மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியது, வனிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்த செட்டிலேயே நடுவர்களுடன் விவாதம் செய்தார்.
இந்த பிரச்சனையின் காரணமாக தான் இந்த நிகழ்ச்சியை விட்டே விலகுவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார் வனிதா விஜயகுமார். தான் விலகுவதற்கு காரணம் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணன்தான் என்பதையும் மறைமுகமாக தெரிவித்திருந்தார் வனிதா.
தற்போது இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் நடுவர்களின் ஒருவரான நகுல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அந்த 4 நிமிட பாடல் காட்சியில், 2 நிமிடங்கள் வனிதா நடனமே ஆடவில்லை. ச்சும்மா அமர்ந்துதான் இருந்தார். அதனால் அவர் ஆடத் துவங்கும்போது ரொம்பவும் எனர்ஜியுடன் ஆடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை.
அதனால்தான் எங்களது ஏமாற்றத்தை நாங்கள் தன்மையாகத்தான் வனிதாவிடம் கூறினோம். ஆனால் அவர் அம்மன் வேஷம் போட்டு கொண்டு எங்களை அசிங்கமான வார்த்தையால் பேசி திட்டினார். என்னை பேசினால்கூட பரவாயில்லை. ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்.. அவரைப் போய் இப்படி பேசலாமா..?” என்று நகுல் ஆதங்கப்பட்டுள்ளார்.
The post “அம்மன் வேஷம் போட்டு கொண்டு அசிங்கமாக பேசிய வனிதா..!” – கொந்தளித்த நடிகர் நகுல்..! appeared first on Touring Talkies.
]]>