The post “விஷாலுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை” – மிஷ்கின் திட்டவட்டமான பதில் appeared first on Touring Talkies.
]]>‘துப்பறிவாளன்-2’ படம் தொடர்பாக அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகப் பெரிய சண்டைக்கு இட்டுச் சென்றது.
ஒரு பொது மேடையிலேயே மிஷ்கின், விஷாலை கடுமையாகத் திட்டித் தீர்த்தார். இந்த நிலையில் ‘துப்பறிவாளன்-2’ படத்தை தானே இயக்குவேன் என்று விஷால் சொல்லியிருந்தும் இப்போதுவரையிலும் அந்தப் படம் மீண்டும் துவக்கப்படவில்லை.
இதற்கிடையில் விஷாலுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக இயக்குநர் மிஷ்கினிடம் கேட்டதற்கு “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
மிஷ்கின் அளித்த பதிலில், “விஷால் எனக்குத் தம்பி மாதிரிதான். அந்தக் கோபம் நிஜம். தன் கோபத்தால் மதுரையை எரிச்ச கண்ணகி மாதிரி எதுவும் நடக்கலை. அவன் நல்லாயிருக்கணும். ஆனால், அவன்கூட இனிமேல் கலைப் பயணம் இல்லை.
‘துப்பறிவாளன் 1’-ல் ‘பாட்டு வேண்டாம்’ன்னு சொன்னதுக்கு ‘சரி’ன்னு சொன்ன பெரிய மனுஷன் அவன். நாங்க இரண்டு பேரும் விடாக் கண்டன் கொடாக் கண்டன்கள்தான். அப்படித்தான் இருப்போம். அவன் 40 வருஷம் சினிமாவில் இருப்பான். நல்ல உழைப்பாளி. அவன் என் மேல் வைத்த அன்பையும், நான் அவன் மேல் வைத்த அன்பையும் மறக்க முடியாது…’’ என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
The post “விஷாலுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை” – மிஷ்கின் திட்டவட்டமான பதில் appeared first on Touring Talkies.
]]>The post “துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன்-2’ படத்தை மிஷ்கினும், விஷாலும் இணைந்து துவக்கினார்கள்.
இந்தப் படத்தின் கதைப்படி படம் முழுவதும் லண்டனில்தான் நடைபெற்றாக வேண்டும். இதனால் லண்டனிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் படப்பிடிப்பினை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இதையொட்டி எழுந்த சர்ச்சையினால் மிஷ்கின் “இந்தப் படத்தை நான் இயக்க மாட்டேன்” என்று சொல்லிவிட.. விஷால் நானே இந்தப் படத்தை இயக்குவேன் என்றும் சொல்லியிருந்தார்.
இதற்குப் பிறகு விஷால் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்கும் அவருடைய 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மிஷ்கினுடனான மோதல் பற்றி நடிகர் விஷால் கூறுகையில், “மிகுந்த பொருட்செலவில், நிறைய கடன் வாங்கித்தான் அந்தப் படத்தைத் துவக்கினேன். அது மிஷ்கினுக்கும் தெரியும். இருந்தும் லண்டனில் ஷூட்டிங் நடந்தபோது ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே மிஷ்கின் படமாக்கினார். இதனால் எனக்கு நிறைய பொருட் செலவு ஆனது. இது பற்றிக் கேட்கப் போய்தான் பிரச்சினை துவங்கியது.
இப்போது நானே அந்தப் படத்தை இயக்கப் போகிறேன். இசை இளையராஜாதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் படம் 2022-ம் ஆண்டு துவங்கி, அந்த ஆண்டே வெளியாகும்..” என்று சொல்லியிருக்கிறார்.
The post “துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! appeared first on Touring Talkies.
]]>