The post “உதயநிதியால் ஏற்பட்ட மாற்றம்!”: சொல்கிறார் ஊடகவியலாளர் appeared first on Touring Talkies.
]]>“தமிழ் திரைப்படங்கள் எல்லாவற்றையும் ரெட் ஜெயண்ட் தான் வெளியிடுகிறது” என சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.
ஆனால், திரைப்பட ஊடகவியலாளர் அந்தணன் இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். அவர், “முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தனர். படம் வெற்றிகரமாக ஓடினாலும், வசூலை தங்களிடம் வைத்துக்கொள்வார்கள். பொய்க்கணக்கு காட்டுவார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. விநியோகஸ்தர்கள் கொடுத்த பண நெருக்கடியால் அடுத்தடுத்த படங்கள் தயாரிப்பதும் சிக்கலாகியது.
ஆனால் இப்போது ரெட் ஜெயண்ட் விநியோகிக்கும்போது, நேரடியாக திரையரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. கணக்கு வழக்கு சரியாக வருகிறது. தயாரிப்பாளர்கள் மன நிறைவுடன் இருக்கிறார்கள். முறையாக பணம் வருவதால் அடுத்தடுத்த தயாரிப்புகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதனால் திரையுலகம் செழிக்கிறது” என்று கூறினார்.
The post “உதயநிதியால் ஏற்பட்ட மாற்றம்!”: சொல்கிறார் ஊடகவியலாளர் appeared first on Touring Talkies.
]]>The post கதறி அழுத நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>நாகேசுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எம்.ஜி.ஆரிடம் ஓடினார்.
“சட்டதிட்டங்கள் தெரிந்து தியேட்டர் கட்டமாட்டாயா” என கடிந்து திருப்பி அனுப்பிவிட்டார் எம்.ஜி.ஆர்.
சோகத்துடன் வீட்டுக்கு வந்தார் நாகேஸ். ஆனால் இரு நாட்களில் திரையரங்கத்துக்கு அனுமதி கிடைத்தது.
நெகிழ்வும் ஆச்சரியமுமாக எம்.ஜி.ஆரை சந்திக்க ஓடினார்.
அப்போது எம்.ஜி.ஆர்., “அந்த பள்ளிக்கு இன்னொரு வாசல் உண்டு. அந்த வாசலைத் திறந்து இந்த கதவை மூடச் சொல்லி விட்டோம். இது உனக்காக செய்தது அல்ல. நீண்ட நாட்களாகவே, திரையரங்கப் பகுதியில் நெரிசல் இருப்பதால் வழியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது இப்போது நிறைவேறிவிட்டது” என்று சிரித்தார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்ட நாகேஸ், நெகிழ்ச்சியில் கதறி அழுதுவிட்டார்.
காலத்தால் செய்த உதவி என்பார்கள்.. ஆனால் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் காலம் கடந்து நிற்பவை!
The post கதறி அழுத நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>