Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சந்தானம் – Touring Talkies https://touringtalkies.co Tue, 29 Nov 2022 18:57:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சந்தானம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சந்தானமும், நானும் சிவன் கோவில்கள் பற்றி நிறைய பேசுவோம்” – சொல்கிறார் நடிகை ரியா சுமன் https://touringtalkies.co/santhanam-and-i-talk-a-lot-about-shiva-temples-says-actress-rhea-suman/ Tue, 29 Nov 2022 18:56:45 +0000 https://touringtalkies.co/?p=27843 ‘சீறு’, ‘மன்மத லீலை’ படங்களில் நாயகியாக நடித்திருந்த நடிகை ரியா சுமன் சமீபத்தில் வெளிவந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். சந்தானம் பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், “சந்தானம் ரொம்ப ஜோவியல். ரொம்பவும் ப்ரெண்ட்லி நேச்சர் பெர்ஸன். எப்பவும் ஜோக் அடிச்சுக்கிட்டேயிருப்பார். இல்லாட்டி கவுண்ட்டர் கொடுத்துக்கிட்டேயிருப்பார். காமெடியைத் தாண்டி சந்தானம் ஸாரிடம் சீரியஸ் பக்கமும் இருக்கு. ரொம்ப நல்லா அப்சர்வேஷன் பண்ணுவார். சொல்லப் போனா அவரோட காமெடி ரகசியமே அதுதான். அவர் மற்றவங்களைப் […]

The post “சந்தானமும், நானும் சிவன் கோவில்கள் பற்றி நிறைய பேசுவோம்” – சொல்கிறார் நடிகை ரியா சுமன் appeared first on Touring Talkies.

]]>
சீறு’, ‘மன்மத லீலை’ படங்களில் நாயகியாக நடித்திருந்த நடிகை ரியா சுமன் சமீபத்தில் வெளிவந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சந்தானம் பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், “சந்தானம் ரொம்ப ஜோவியல். ரொம்பவும் ப்ரெண்ட்லி நேச்சர் பெர்ஸன். எப்பவும் ஜோக் அடிச்சுக்கிட்டேயிருப்பார். இல்லாட்டி கவுண்ட்டர் கொடுத்துக்கிட்டேயிருப்பார். காமெடியைத் தாண்டி சந்தானம் ஸாரிடம் சீரியஸ் பக்கமும் இருக்கு. ரொம்ப நல்லா அப்சர்வேஷன் பண்ணுவார். சொல்லப் போனா அவரோட காமெடி ரகசியமே அதுதான். அவர் மற்றவங்களைப் பண்ற அப்சர்வேஷன்ல இருந்துதான் அவரோட காமெடியே வருதுன்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேருமே சிவன் பக்தர்கள் என்பதால் சிவனைப் பற்றியும், சிவாலயங்கள் பற்றியும் நிறைய பேசினோம்..” என்கிறார் ரியா சுமன்.

The post “சந்தானமும், நானும் சிவன் கோவில்கள் பற்றி நிறைய பேசுவோம்” – சொல்கிறார் நடிகை ரியா சுமன் appeared first on Touring Talkies.

]]>
ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/agent-kannayieram-movie-review/ Fri, 25 Nov 2022 13:06:49 +0000 https://touringtalkies.co/?p=27577 Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம். இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து […]

The post ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்.

இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து மதத்தில் பரவலாக உள்ளது. இதன் அடிப்படையில் இறந்து போனவர்களின் சடலங்களை வாங்கி காசிக்குக் கொண்டு சென்று எரிக்கிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றும் ஒரு கும்பல் அந்தப் பிணங்களின் கை ரேகைகளை வைத்து மக்களை ஏமாற்றி எப்படி குற்றங்கள் செய்கிறார்கள் என்பதையும் அதனை தனியார் டிடெக்டிவ் ஏஜெண்ட்டான ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதையும் சொல்வதுதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் கதை.

கோவை அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்தவர் சந்தானம்.  ஆனால் குடும்பச் சூழல் காரணமாக இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனாலும் இந்துமதியையும், மகனையும் தன் வீட்டிலேயே வேலைக்காரி என்று பொய் சொல்லி தங்க வைத்திருக்கிறார் ஜமீன்தார். அந்த வீட்டில் இருப்பதினால் சந்தானமும், அவரது தாயும் ஜமீன்தாரின் மனைவியின் மூலமாக பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். ஜமீந்தாரின் முதல் மனைவியும், அவரது மகன்களும் இவர்களை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

சிறு வயதில் இருந்தே, துப்பறிவதில் ஆர்வம் காட்டி வரும் சந்தானம், இளம் வாலிபனான பின்பு ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துவக்கி நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் சந்தானத்திற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவருடைய அம்மாவின் மரண செய்தி வந்து சேர்கிறது.

கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார் சந்தானம். ஊருக்குப் போவதற்குக்கூட கையில் காசு இல்லாமல், லாரியில் லிப்ட்டு கேட்டு ஒரு வழியாக ஊர் வந்து சேர்கிறார் சந்தானம்.

ஆனால், அதற்குள்ளாக அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது. இதனால், கடைசியாக ஒரு முறை தாயைப் பார்க்க  முடியவில்லையே என்று பெரிதும் வருத்தப்படுகிறார் சந்தானம். 

இந்த நிலையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதற்காக அதே ஊரில் சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம் சந்தானத்திற்கு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அந்த ஊரில் சில மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக ரயில் தண்டவாளத்தின் ஓரமாக அனாதை பிணங்கள் கிடக்கின்றன. நடந்த கொலையை தற்கொலை என்று போலீஸ் சொல்கிறது.

நாயகி ரியா சுமன் ஆவணப் படம் எடுக்க சந்தானத்தின் கிராமத்திற்கு வருகிறார், அப்போது சந்தானத்துடன் நட்பு ஏற்பட, அனாதை பிணங்களின் பின்னணியை கண்டறிய சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார். நடக்கும் இறப்புகளின் பின்னணி என்ன..? நடப்பவையெல்லாம், கொலைகளா..? தற்கொலைகளா..? என்று தனது டிடெக்டிவ் புத்தியைக் காட்டி கண்டறிய முயல்கிறார் சந்தானம். 

இதனால் போலீஸுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியால் ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் சந்தானம் பிடிக்கப்பட்டு லாக்கப்பில் வைக்கப்படுகிறார். அப்போது அந்த லாக்கப்பில் இருந்த முனீஸ்காந்தின் சோகக் கதையைக் கேட்டு சந்தானம் ஏஜெண்ட் கண்ணாயிரமாக’ மாற கதை சூடு பிடிக்கிறது.

சந்தானம் அவருக்கு உதவும் முயற்சியில் இறங்க. அதனால் திடுக் திருப்பங்கள் ஏற்படுகிறது. முனீஸ்காந்த் சொல்லும் கதை என்ன..? இறுதியில் சந்தானம் டிடெக்டிவாக தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் திரைக்கதை.

ஒரு மெடிக்கல் மாஃபியா கும்பலைக் கண்டறியும் துப்பறிவாளனாக சந்தானம் நடித்திருக்கிறார். சந்தானம் தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாயை இழந்து வாடும் மகனாக, சமுதாயத்தில் அந்தஸ்து பெற துடிக்கும் இளைஞனாக சந்தானம் வரும் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

தாய்க்கு இறுதி சடங்குகள் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியில் தூக்கமின்றி வாடும் காட்சிகள், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள், டிடெக்டிவாக சிலவற்றை சந்தானம் கண்டு பிடிக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்று தனக்கான நடிப்பில் சிறிதளவு நியாயம் செய்திருக்கிறார் சந்தானம். இருந்தாலும் சில இடங்களில் தன்னுடைய பேவரிட்டான கவுண்ட்டர் டயலாக்குகளை வீசியிருக்கிறார். அப்போதுதான் தியேட்டரில் கொஞ்சமேனும் சிரிப்பலை எழுகிறது.

சந்தானத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் கட்டத்திலும், அப்பாவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் இந்துமதியை தன் மனைவி என்று சொல்ல முடியாத பரிதவிப்பிலும் உண்மையாக நடித்துள்ளனர்.

கதாநாயகியான ரியா சுமன் துணை நடிகை போலத்தான் இருக்கிறார். பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் அழகில்லாமல் ஏனோ, தானோவென்ற அலங்காரத்தில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா உள்ளிட்டோரின் நடிப்பும் ஓகேதான். இதில் முனிஷ்காந்த் லாக்கப்பில் அழுது கொண்டே தனது மகளைக் காணவில்லை என்று கதறும் காட்சியில் இயக்குநரைக் காப்பாற்றியிருக்கிறார்.

தேனி ஈஸ்வர் மற்றும் சரவணனின் ஒளிப்பதிவில் குறையில்லைதான்ய. ஆனால் சில காட்சிகளில் ஒளிப்பதிவு செல்வதும், வருவதுமாக இருப்பதும், அதிகப்படியான காட்சிகளை இருட்டிலேயே எடுத்திருப்பதும் படத்தின் மிகப் பெரிய பேக் டிராப் என்றே சொல்ல வேண்டும்.

அஜய்யின் கத்திரிக்கோல் இன்னும் துல்லியமாக காட்சிகளை செதுக்கி கதையை புரியும் அளவுக்கு செய்திருக்கலாம். செய்யாதலால் படம் முடிந்து வரும்போது படத்தின் கதை என்று ரசிகர்களே கேட்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் தோராயமாக போட்டதுபோல இருக்கிறது.

இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கம் நமக்குப் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. திரைக்கதையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம். சுவாரஸ்யமும் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ அமையவில்லை.

நடிகர்கள் தேர்வும், படத்தின் கதையோட்டமும் சரியாக இருந்தாலும் அதையும் தாண்டிய எதோ ஒன்று படத்தில் இல்லாததால் படத்தோடு நம்மால் ஒன்றிணைய முடியவில்லை. டிடெக்டிவ் படங்களுக்கு உரிய விறுவிறுப்பும், சுவாரசியமும் படத்தில் இல்லை. படத்தின் காட்சி ஓட்டத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் இயக்குநருக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.

பொதுவாக சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் அதுவே இல்லை என்பதால் அவரது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. படத்தின் முதல் பாதியின் ஆமை வேகம் ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டது என்றாலும் படம் இடைவேளையில் இருந்துதான் வேகம் பிடிக்கிறது. ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படிப்படியாக  இந்தக் குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்றும் தெளிவில்லாமல் குழப்பமாய் முடிந்திருப்பது படத்தை மொத்தமாய் கவிழ்த்துவிட்டது.

ஒரு நல்ல படத்தை கையில் வைத்துக் கொண்டு, தமிழில் அதற்கான வெற்றி வாய்ப்பை மிக எளிதாகத் தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

RATING : 2 / 5

The post ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“என்னை காமெடியே செய்யவிடலை” – இயக்குநர் மீது குற்றம்சாட்டிய சந்தானம் https://touringtalkies.co/santhanam-accused-the-director-of-i-will-not-do-comedy/ Sun, 20 Nov 2022 18:53:25 +0000 https://touringtalkies.co/?p=27342 ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் தன்னை காமெடியே செய்யவிடவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசினார் நடிகர் சந்தானம். மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம்-ரியா சுமன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசும்போது, “இந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா – மகன்  கதை இருக்கும். அதை அந்த படத்தில் […]

The post “என்னை காமெடியே செய்யவிடலை” – இயக்குநர் மீது குற்றம்சாட்டிய சந்தானம் appeared first on Touring Talkies.

]]>
ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் தன்னை காமெடியே செய்யவிடவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசினார் நடிகர் சந்தானம்.

மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம்-ரியா சுமன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசும்போது, “இந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா – மகன்  கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை. அதை இந்த படத்தில் இயக்குனர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும்.

என்னை கொஞ்சம்கூட காமெடியே செய்ய விடலை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குநர் வைத்துள்ளார். அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமான கதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்புக்கு நன்றி கூறி ஆக வேண்டும், அவர்கள்தான் படத்தை மேம்படுத்தியுள்ளனர்…” என்றார்.

The post “என்னை காமெடியே செய்யவிடலை” – இயக்குநர் மீது குற்றம்சாட்டிய சந்தானம் appeared first on Touring Talkies.

]]>
புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்..! https://touringtalkies.co/agent-kannayiram-starring-santhanam-in-a-new-dimension/ Sat, 12 Nov 2022 06:53:56 +0000 https://touringtalkies.co/?p=26981 Labyrinth film productions தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மனோஜ் பீதா கலந்து […]

The post புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
Labyrinth film productions தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

வரும் 25-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, “தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் மறு ஆக்கம்தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம்.

அந்த தெலுங்கு படத்தின் உரிமை என்னிடம் இருந்தது. அதை கேள்விப்பட்ட சந்தானம் சார் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை.

காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும்தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று சந்தானம் சாரிடம் சொன்னேன். அதன் பிறகு அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம்.

இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது. அதிகம் பேசாமல், அதேசமயம் அதிக அளவில் எமோஷன்களை காட்டி நடித்துள்ளார்.

இது ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டம். அதில் அந்த மகனின் கதாபாத்திரம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அப்படித்தான் இந்த கதையை நான் கட்டமைத்துள்ளேன்.

கதாநாயகி ரியா சுமன், குரு சோமசுந்தரம், முனீஸ் காந்த், புகழ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒப்பாரி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

வரும் 25-ம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. என்னுடைய முதல் படமான வஞ்சகர் உலகம்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போல் இந்த படத்திற்கும்  தர வேண்டும்…” என்றார்.

The post புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
“ஆர்யாவுடனான நட்பு எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்” – சொல்கிறார் நடிகர் சந்தானம் https://touringtalkies.co/my-friendship-with-arya-has-always-been-special-to-me-says-actor-santhanam/ Fri, 26 Aug 2022 17:33:17 +0000 https://touringtalkies.co/?p=24038 Think Studios நிறுவனம்  The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்  இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்’. இப்படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். D.இமான் (இசை), S.யுவா (ஒளிப்பதிவு), கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E […]

The post “ஆர்யாவுடனான நட்பு எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்” – சொல்கிறார் நடிகர் சந்தானம் appeared first on Touring Talkies.

]]>
Think Studios நிறுவனம்  The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்
இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்  இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்’.

இப்படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

D.இமான் (இசை), S.யுவா (ஒளிப்பதிவு), கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R.சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை இயக்குநர்), மற்றும் V.அருண் ராஜ் ( CG) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

டெடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா, சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சத்யம் திரையரங்கில் கோலகலமாக அரங்கேறியது.

இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் யுவா பேசும்போது, “இயக்குநர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன்தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பை தரும் வண்ணம், சரியான திட்டமிடலுடன் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள்  நன்றி.” என்றார்.

படத் தொகுப்பாளர் பிரதீப் பேசும்போது, “தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களங்களை கொடுக்கும் ஒரு இயக்குநரிடம் பணிபுரிவது, ஒரு அரிய வாய்ப்பு, அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இயக்குநருக்கு நான் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, “இந்தப் படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார். அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக் களத்தைதான் இயக்குநர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம். இயக்குநரின் தெளிவான சிந்தனைதான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு  நன்றி..” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ல‌ஷ்மி பேசும்போது, “இந்தப் படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்தப் படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குநர் சக்தியின் கடின உழைப்பு, படத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா படத்திற்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.

நடிகர் ஆர்யா பேசும்போது, “நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும்போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்.

இயக்குநர் சக்தியின் சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரம்மாண்டமான மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்க வேண்டுமென நினைத்து அதற்கு ஏற்றார் போல் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இமான் சாரை இந்த படத்தின் முதுகெலும்பு என்றுதான் சொல்ல வேண்டும்.  இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை..” என்றார்.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் பேசும்போது, “இந்தக் கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும்  வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும்தான் காரணம். இது போன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் படம் உருவாவதற்கு காரணமாக இருந்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமான படம்.  உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்…” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது, “Think Studios நிறுவனத்தின் முதல் படைப்பே கேப்டன்’ என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அவருடைய எண்ணத்தை இமான் இசையாக்கி இருக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் R.B.சௌத்ரி பேசும்போது, “இந்தக் கேப்டன்’ படத்தின் இசையும், டிரெய்லரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்தும் நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்த படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் சந்தானம் பேசும்போது, “ஆர்யாவுடனான என்னுடைய நட்பு மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யாவின் எந்தப் படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம். இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்..” என்றார்.

மேலும் பல திரைப்பட பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தினர்.

வரும் செப்டம்பர் 8-ம் தேதியன்று உலகம் முழுவதும் இந்தக் கேப்டன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The post “ஆர்யாவுடனான நட்பு எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்” – சொல்கிறார் நடிகர் சந்தானம் appeared first on Touring Talkies.

]]>
சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது https://touringtalkies.co/red-gaint-movies-released-gulu-gulu-movie/ Thu, 14 Jul 2022 07:09:14 +0000 https://touringtalkies.co/?p=23207 நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி, வரும் 29-ம் தேதி வெளியாக உள்ள ‘குலு குலு’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ‘குலு குலு’ படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார். இவர் ‘மேயாத […]

The post சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி, வரும் 29-ம் தேதி வெளியாக உள்ள ‘குலு குலு’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

இந்தப் படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ந்த ‘குலு குலு’ படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார். இவர் மேயாத மான்’, ‘ஆடை’ போன்ற படங்களை இயக்கியவர். அது தவிர ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ போன்ற படங்களின் திரைக்கதையிலும் பணியாற்றி உள்ளார்.

இந்த ‘குலுகுலு’ திரைப்படம் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக் கருவில் உருவாகியிருக்கிறது.  வரும் ஜூலை 29-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளனது.

இந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட விக்ரம்’ படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.

The post சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது appeared first on Touring Talkies.

]]>
கலர்ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் ‘சபாபதி’ திரைப்படம் https://touringtalkies.co/sabapathy-movie-tv-rights-bagged-by-colors-tv/ Sat, 02 Oct 2021 06:58:06 +0000 https://touringtalkies.co/?p=18440 நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள படம் ‘சபாபதி.’ இத்திரைப்படத்தை ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத் தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க, சண்டைக் காட்சிகளை […]

The post கலர்ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் ‘சபாபதி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள படம் ‘சபாபதி.’

இத்திரைப்படத்தை ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத் தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க, சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார். இயக்குநர் ஆர்,ஸ்ரீநிவாச ராவ் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.

திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாக காட்டப்பட்டுள்ளது. சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

திரையரங்குகளில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.

சந்தானம் படங்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு மிகப் பெரிய விலைக்கு ‘சபாபதி’ தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.

The post கலர்ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் ‘சபாபதி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>