The post புதிய கோணத்தில் உருவாகியிருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ படம்..! appeared first on Touring Talkies.
]]>எவரி ஒன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிகா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – பிரகாஷ் வேலாயுதன், படத் தொகுப்பு – ரதீஷ் மோகன், இசை – அஷ்வின் சிவதாஸ், பத்திரிகை தொடர்பு – குமரேசன். நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் இந்த ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தை இயக்குநர் எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ளார்.
கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்துவிட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக் கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழி வாங்குகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.
“முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது…” என்கிறார் இயக்குநர் ஜிஜேஷ் M.V.
கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாக இருக்கிறது.
The post புதிய கோணத்தில் உருவாகியிருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ படம்..! appeared first on Touring Talkies.
]]>