Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கொரோனா லாக்டவுன்-2 – Touring Talkies https://touringtalkies.co Sat, 22 May 2021 12:49:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கொரோனா லாக்டவுன்-2 – Touring Talkies https://touringtalkies.co 32 32 படப்பிடிப்பில் கலந்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் – பெப்சி அறிவிப்பு https://touringtalkies.co/corono-anti-vaccine-forced-to-attend-film-shooting-works-fefsi-union-announcement/ Sat, 22 May 2021 12:48:04 +0000 https://touringtalkies.co/?p=15230 “இந்த கொரோனா லாக்டவுன்-2-ம் பகுதியும் முடிவடைந்து நாடு சகஜ நிலைமைக்குத் திரும்பிய பிறகு சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்தாலும்.. படப்பிடிப்புகளில் பணியாற்ற வரும் பெப்சி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்..” என்று பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றைக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்தாண்டு கொரோனாவால் திரைப்படத் தொழிலாளர்கள் பாதிப்படு அடைந்ததைவிடவும், இந்தாண்டு மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துள்ளனர். […]

The post படப்பிடிப்பில் கலந்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் – பெப்சி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“இந்த கொரோனா லாக்டவுன்-2-ம் பகுதியும் முடிவடைந்து நாடு சகஜ நிலைமைக்குத் திரும்பிய பிறகு சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்தாலும்.. படப்பிடிப்புகளில் பணியாற்ற வரும் பெப்சி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்..” என்று பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றைக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்தாண்டு கொரோனாவால் திரைப்படத் தொழிலாளர்கள் பாதிப்படு அடைந்ததைவிடவும், இந்தாண்டு மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.

தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துள்ளனர். நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களில் நிறைய பேர் கடந்தாண்டு லாக் டவுன் காலக்கட்டத்திலேயே பெப்சி தொழிலாளர்களுக்கு நிறைய பண உதவிகளைச் செய்திருந்தனர். மீண்டும் இப்போது அவர்களிடம் வற்புறுத்திக் கேட்க தயக்கமாக இருக்கிறது. அப்படியிருந்தும் சிலர் நாங்கள் கேட்காமலேயே தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

திரைப்பட நல வாரியம் மூலமாக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் என்றும் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்படும்போது படப்பிடிப்புகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அப்படி கிடைக்கும்பட்சத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் நிச்சயமாக செயல்படுத்துவோம்.

பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் இந்த லாக்டவுன் இடைவெளி காலத்தில் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இனி அடுத்தக் கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே, படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தொழிலாளர்கள் இப்போதே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

The post படப்பிடிப்பில் கலந்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் – பெப்சி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் https://touringtalkies.co/ott-never-compete-with-cinema-theatres-says-abrami-ramanathan/ Fri, 14 May 2021 07:19:38 +0000 https://touringtalkies.co/?p=15074 தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன். அவர் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு 100 கோடி, 200 கோடி வசூல் என்று விளம்பரம் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.  ஆனால் எந்த ஓடிடி அவ்வளவு பெரிய தொகைக்கு படங்களை வாங்குகிறது..? […]

The post “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் appeared first on Touring Talkies.

]]>
தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன்.

அவர் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு 100 கோடி, 200 கோடி வசூல் என்று விளம்பரம் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.  ஆனால் எந்த ஓடிடி அவ்வளவு பெரிய தொகைக்கு படங்களை வாங்குகிறது..?

இப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத சூழல் இருப்பதால்… பொருளாதார நட்டத்தைத் தவிர்ப்பதற்காக குறைந்த லாபம் கிடைத்தாலும் போதும் என்றெண்ணி படத்தை ஓடிடிக்குக் கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

டிவி எப்படி தியேட்டருக்கு போட்டி கிடையாதோ அது மாதிரிதான் ஓடிடியும் தியேட்டர்களுக்கு போட்டி கிடையாது. தற்போதைய நிலையில் புதிய படங்களை வெளியிட தியேட்டர்களால் முடியவில்லை. ஓடிடியால் முடிகிறது. அவ்வளவுதான் விஷயம்.

ஓடிடி கிள்ளிதான் கொடுக்கும். ஆனால் தியேட்டர்களோ அள்ளிக்கொடுக்கும். ஸ்கிரீன் அனுபவம் என்பது வேறு. ஓடிடியில் ஒரே படத்தை ஏழு நாள் பார்க்கும் சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் தியேட்டர் அனுபவமோ, செயின் ஸ்மோக்கர்ஸைகூட இரண்டரை மணி நேர படத்தை ஒரே இடத்தில் பார்க்க வைத்துவிடும்.

ஓடிடியில் அடல்ட் காட்சி வந்தால் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்ற பயத்துடன் பார்த்தாக வேண்டும். தியேட்டர்களில் அப்படியில்லை. பிரம்மாண்டமான ஸ்கிரீன், டால்பி சவுண்ட் சிஸ்டமெல்லாம் ஓடிடியில் இல்லை.

ஆனால், தற்சமயம் ஓடிடி தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறது. அது நல்ல விஷயம்தான். ஏனெனில் தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டால் தியேட்டர்களின் நிலைமை என்னாகும் என்று சொல்ல முடியாதே.. அதனால் தயாரிப்பாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள தற்போதைக்கு ஓடிடியில் பட வெளியீடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் அபிராமி ராமநாதன்.

The post “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் appeared first on Touring Talkies.

]]>