Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கார் விபத்து – Touring Talkies https://touringtalkies.co Mon, 13 Sep 2021 12:42:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கார் விபத்து – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..! https://touringtalkies.co/actress-yaashika-in-hospital-for-treatment/ Mon, 13 Sep 2021 12:41:33 +0000 https://touringtalkies.co/?p=17887 நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய தற்போதைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்திற்குள்ளானது. அதில், அவருடைய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவும் படுகாயமடைந்தார். அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், தற்போது […]

The post நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய தற்போதைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்திற்குள்ளானது. அதில், அவருடைய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவும் படுகாயமடைந்தார்.

அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரை அவரது குடும்பத்தார் அனைவரும் கவனித்து வருகிறார்கள். நேற்றைக்கு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதில் அவருடைய இரண்டு கால்களும் முறிந்துபோய் மாவுக் கட்டு போடப்பட்ட நிலையில் படுக்கையில் படுத்திருக்கிறார் யாஷிகா.

அவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாகவும், குடும்பத்தினர் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாஷிகா இன்னமும் குறைந்தது ஆறு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

The post நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலைமை..! appeared first on Touring Talkies.

]]>
யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சியான ‘கடமையை செய்’ படக் குழுவினர் https://touringtalkies.co/yashika-anands-do-duty-film-crew-shocked-by-car-accident/ Mon, 02 Aug 2021 10:54:08 +0000 https://touringtalkies.co/?p=16695 “கடமையை சரியாக செய்தால் அதற்கான பலன் தானாக வரும்” என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘கடமையை செய்’ திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக  S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும்  மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி, அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் […]

The post யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சியான ‘கடமையை செய்’ படக் குழுவினர் appeared first on Touring Talkies.

]]>
“கடமையை சரியாக செய்தால் அதற்கான பலன் தானாக வரும்” என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘கடமையை செய்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக  S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும்  மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி, அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் சுந்தர்.C-யிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை நாயகனாக வைத்து முத்தின கத்திரிக்காய்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய  வேங்கட் ராகவன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

நெடுநல்வாடை’, ‘எம்.ஜி.ஆர்.மகன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பு – N.B.ஸ்ரீகாந்த், தடம்’ படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார்,  பாடல்கள் – அருண்பாரதி,  சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ்,  நடன இயக்கம் தீனா – சாண்டி, மக்கள் தொடர்பு –  மதுரை செல்வம், மணவை புவன், தயாரிப்பாளர்கள் – கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் TR ரமேஷ், நாகர் பிலிம்ஸ்  ஜாகிர் உசேன்.

இந்தப் படத்தில் எஸ்ஜே.சூர்யாவிற்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள். ஆனால் இந்த படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.

ஃபேமிலி ஆடியன்ஸ்ல இருந்து அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ‘கடமையை செய்’  திரைப்படம் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவுற்றது. தற்போது படத்தின் POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் படத்தின் நாயகியான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கியது இந்தப் படக் குழுவினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்து பேசிய இயக்குநர் வேங்கட் ராகவன், “படப்பிடிப்பு இனிதே முடிந்தது’ என்று நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் யாஷிகா வாகன விபத்தில் சிக்கி, அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாஷிகா ஆனந்த் தொழில் ஈடுபாடும், திறமையும் மிக்கவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இத்திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக அனைவரும் கூறும் நிலையில், ஒரு நல்ல வெற்றியை நோக்கிய அவர் திரை பயணத்தின் இடையில் இது போன்ற விபத்து ஏற்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயமாக யாஷிகா நலம் பெற்றுத் திரும்புவார். எங்களுடைய படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது..” என்றார்.

The post யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சியான ‘கடமையை செய்’ படக் குழுவினர் appeared first on Touring Talkies.

]]>
நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு https://touringtalkies.co/case-registered-against-actress-yashika-anand-in-3-sections/ Sun, 25 Jul 2021 07:48:20 +0000 https://touringtalkies.co/?p=16499 தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செங்கல்பட்டு அருகேயிருக்கும் சூளேரிக்கேடு என்னும் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது அடையாறில் போர்ட்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் இந்த சாலை விபத்திற்குக் காரணமாக இருந்ததாக யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யாஷிகா […]

The post நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செங்கல்பட்டு அருகேயிருக்கும் சூளேரிக்கேடு என்னும் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது அடையாறில் போர்ட்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் இந்த சாலை விபத்திற்குக் காரணமாக இருந்ததாக யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த் நேற்று தனது தோழியான வள்ளிச்செட்டி பவானி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்தப் பார்ட்டியை முடித்துவிட்டு இரவில் சென்னைக்குத் திரும்பும்போது யாஷிகாவே காரை ஓட்டி வந்திருக்கிறார். அப்போதுதான் சாலையின் நடுவில் இருக்கும் செண்டர் மீடியாவின் மீது கார் மோதி அருகில் இருக்கும் பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.

சில நிமிடங்கள் கழித்து அந்தப் பக்கமாக காரில் சென்ற சிலர் இதைப் பார்த்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அருகில் இருக்கும் பூஞ்சேரி மருத்துவமனைக்கு இவர்களைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போதே யாஷிகாவின் தோழியான பவனி இறந்துவிட்டார்.

யாஷிகாவும், அவரது ஆண் நண்பர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அடையாறில் போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்ததாக யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் (279,337,304 A, அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும்விதமாக காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ்) செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு appeared first on Touring Talkies.

]]>