Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
எஸ்.பி.பி. – Touring Talkies https://touringtalkies.co Sun, 26 Sep 2021 10:23:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png எஸ்.பி.பி. – Touring Talkies https://touringtalkies.co 32 32 “SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு https://touringtalkies.co/the-mansion-will-be-built-for-spb-his-son-charan-announced/ Sun, 26 Sep 2021 10:22:17 +0000 https://touringtalkies.co/?p=18279 எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகத்தின் பிரபலமான பாடகரான பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்ற ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று எஸ்.பி.பியின் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் வந்தார்கள். கூடினார்கள். ஆனால், யாருமே உள்ளே […]

The post “SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகத்தின் பிரபலமான பாடகரான பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்ற ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று எஸ்.பி.பியின் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் வந்தார்கள். கூடினார்கள். ஆனால், யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மட்டுமே தோட்டத்தின் உள்ளே சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் பின்பு எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரண் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “தற்போதைய கொரோனா சூழலால் காவல் துறையினர் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் அவரது ரசிகர்களை எங்களால் உள்ளேவிட முடியவில்லை.

தெலுங்கில் 22 ஆண்டுகளாக அப்பா நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

அப்பாவுக்கு என்ன பண்ணப் போகிறோம் என்றால், முதலில் அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருக்க வேண்டும். அடுத்து இங்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். அதில் ஓவியங்கள் வரைய வேண்டும். மியூசியம், திரையரங்கத்தைக்கூட  கட்ட திட்டமிட்டுள்ளேன்.

இதெல்லாம் ஓராண்டில் முடியக் கூடிய வேலையில்லை. அந்த வேலைகள் எல்லாம் எப்போது முடியும் என்று சொல்ல முடியவில்லை. கண்டிப்பாகக் கூடிய விரைவில் வேலைகளைத் தொடங்கவுள்ளோம்.

இதுவரை தமிழக அரசிடமிருந்து இதற்காக எந்தவொரு உதவியையும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து வேலைகளையும் ஓவியங்களாக வரைந்து கொண்டு போய் தமிழக அரசிடம் காட்டவுள்ளேன்.

எஸ்.பி.பி. தொண்டு நிறுவனம் மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்ற எண்ணமும் எங்களிடம் உள்ளது…” என்றார்.

The post “SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
டப்பிங் யூனியனில் எஸ்.பி.பி. பெயரில் டப்பிங் ஸ்டூடியோ அமைக்கப்பட்டது. https://touringtalkies.co/s-p-b-dubbing-studio-opening-in-dubbing-union/ Sat, 21 Nov 2020 05:55:57 +0000 https://touringtalkies.co/?p=10258 சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவாக “எஸ்பிபி ஸ்டூடியோ” என்ற பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோவை அமைத்துள்ளார்கள். இந்த டப்பிங் தியேட்டரை சங்கத்தின் தலைவரான ராதாரவி சங்கத்தின் பிற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார். சென்ற மாதம் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது ,அவரது நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என்று டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி கூறியிருந்தார். சொன்னது […]

The post டப்பிங் யூனியனில் எஸ்.பி.பி. பெயரில் டப்பிங் ஸ்டூடியோ அமைக்கப்பட்டது. appeared first on Touring Talkies.

]]>
சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவாக “எஸ்பிபி ஸ்டூடியோ” என்ற பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோவை அமைத்துள்ளார்கள்.

இந்த டப்பிங் தியேட்டரை சங்கத்தின் தலைவரான ராதாரவி சங்கத்தின் பிற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.

சென்ற மாதம் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது ,அவரது நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என்று டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி கூறியிருந்தார். சொன்னது போலவே இன்றைக்கு அந்த ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஸ்டூடியோவினை அமைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக டப்பிங் யூனியனின் உறுப்பினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

The post டப்பிங் யூனியனில் எஸ்.பி.பி. பெயரில் டப்பிங் ஸ்டூடியோ அமைக்கப்பட்டது. appeared first on Touring Talkies.

]]>