The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.
]]>இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர் – இயக்குநர் கூட்டணி நட்புறவில் படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது.
சமீபத்தில் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
“@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.
சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
இந்த மனமார்ந்த வாழ்த்துகளை பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி அதற்கு “தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்…” என்று பதிலளித்துள்ளார்.
ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்க படங்களில் இடம் பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களின் வரிசையில் பிரபாஸின் ‘பாகுபலியும்’ ஒன்றாகும். மேலும், நடிகர் பிரபாஸ் – இயக்குநர் ராஜமௌலி நட்புறவு எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டணியும் அந்த உறவை மதித்து ஒருவரை ஒருவர் பாராட்டி வருகின்றனர்.
The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.
]]>The post ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் appeared first on Touring Talkies.
]]>ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களில் ஏதாவது ஒன்று தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ‘RRR’ படத்தை சிலாகித்துப் பேசியிருந்ததால், இந்தியா சார்பாக நிச்சயமாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிர்ச்சி செய்தியாக குஜராத் திரைப்படமான ‘Chhello Show’ படம் இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்.ஆர்.ஆர். படத்தை ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி இடம் பெறச் செய்யத் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.
இப்படத்தை சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ராஜமௌலி), சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்), சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்), சிறந்த துணை நடிகை (அலியா பாட்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம், சிறந்த பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 15 பிரிவுகளில் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.
இதற்காக ‘For your consideration (FYC)’ என்ற விளம்பர யுக்தி மூலம் ஆஸ்கர் விருது கமிட்டியைச் சேர்ந்த உலகளாவிய திரைத் துறையினருக்கு ‘RRR’ திரைப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார்.
வெற்றி கிட்டட்டும்..!
The post ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் appeared first on Touring Talkies.
]]>The post கர்நாடகாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு எழுந்துள்ள திடீர் எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்டமான படத்திற்குப் பிறகு, இயக்குநர் ராஜமெளலி இயக்கியிருக்கும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர்.
இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்த்திரங்கள் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக, 3-டி தொழில் நுட்பத்திலும் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.
இந்த வெளியீட்டிற்காக இந்தப் படக் குழுவினர் மாநிலம், மாநிலமாக சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் சிக்பல்லாபூரில் இந்தப் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜு பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “வரவிருக்கும் RRR படம் தேசமே பெருமைப்படும் படமாக இருக்கும்…” என்று பாராட்டினார்.
ஆனால் அதே கர்நாடகாவில் நேற்றில் இருந்து இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும், படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரமும் நடந்து வருகிறது.
இதற்குக் காரணம் இந்த ஆர்.ஆர்.ஆர். படம் கன்னட மொழியில் மட்டும் டப்பிங் செய்யப்படவில்லை என்பதுதான். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, வங்காளம் என்று அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டிருக்கும் இந்தப் படம் கன்னடத்தில் மட்டும் டப் செய்யப்படவில்லை.
ஒரு வகையில் இது கன்னட மொழிக்கு ஏற்பட்ட அவமானம் என்று கர்நாடகாவில் இருக்கும் சினிமா ரசிகர்கள் கோபம் கொண்டுள்ளனர். மொழிப் பற்றால் பொங்கியெழுந்திருக்கும் அம்மாநில சினிமா ரசிகர்கள், “கன்னட மொழியில் ஆர்.ஆர்.ஆர். படத்தை வெளியிடாவிட்டால் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டோம்…” என்று சொல்லி #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.
மேலும், ட்விட்டரில் “ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை புறக்கணியுங்கள்…” என்பதையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
The post கர்நாடகாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு எழுந்துள்ள திடீர் எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>