The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.
]]>எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி இருக்கிறார் வாலி. ஆனால் இடையில் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானது.
கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் ஏற்பட்டதாம்.
நேராக சத்யா ஸ்டுடியோ சென்ற வாலி, எம்.ஜி.ஆரை சந்தித்து உரிமையாக, “உலகம் சுற்று் வாலிபன் படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., உறுதியாகச் சொல்லாமல், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார், பட்டும் படாமல்.
உடனே வாலி, “ இந்தப் படத்தில் நான் பாடல் எழுதவில்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.
குழப்பமாக எம்.ஜி.ஆர்., “ஏன்” என்று கேட்க.. அதற்கு வாலி, “படத்தின் பெயர், உலகம் சுற்றும் வாலிபன். இதில் ‘வாலிபன்’ என்பதில் என்னுடைய பெயரை நீக்கிவிட்டால், ‘உலகம் சுற்றும் பன்’ என்று ஆகிவிடுமே.. இதை எப்படி மக்கள் ஏற்பார்கள்?” என்று முகத்தை சீரிஸாக வைத்துக்கொண்டு வாலி கேட்டார்.
வாலி கூறியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். ரசித்துச் சிரித்தார். அதோடு, “சரி, நீயும் பாட்டு எழுது” என அனுமதித்தார்.
பாடல் எழுத பாட்டுத்திறமை மட்டும் போதாது.. பேச்சுத் திறனும் வேண்டும் என்பதற்கு வாலி ஓர் உதாரணம்.
The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.
]]>